இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயேசு இறைமகனா??

படம்
இயேசு இறைமகனா?? psalms 82 6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். பைபிளில் ஒருவரை தேவன் என்று என்றோ அல்லது தேவனின் மகன் என்று சொல்வதினால் அவரை இறைவன் என்று சொல்ல முடியாது. மேலே குறிப்பிட்ட வசனத்தில் இஸ்ரவேலர்களை தேவர்கள் என்றும் கர்த்தரின் மகன் என்று குறிப்பிட்டுள்ளதில்  இருந்து இதனை நாம் புரிந்து கொள்ளலாம். இறைவனின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை மகிமைப்படுத்தும் விதமாகவே இதுப்போன்ற சொல்லாடலை பைபிள் பயன்படுத்துகிறது.    john 3 16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16ல் இருந்து யெகோவா தேவன் நம் பாவங்களுக்காக மரிப்பதற்காக பூமியில் இறங்கி வந்தார் என்பதை நிரூபிக்க கிறிஸ்தவர்கள்  முயல்கிறார்கள். இயேசு கடவுளுடைய தனித்த மகனாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அவரை கடவுளுக்கு ஒரே மகனாக ஆக்குகிறார்கள். ஆனால் அவர்களின் வேதமோ அவர்களின் இந்த நம்பிக்கைக்கு முரணாக போதிக்கி...

அல்லாஹ் ஏன் பைபிளை பாதுகாக்கவில்லை?

படம்
அல்லாஹ் ஏன் பைபிளை பாதுகாக்கவில்லை? ➡️அல்லாஹ் குர்ஆனில்  முந்தைய வேதங்கள் பற்றி கூறும்போது அவைகள் மனிதர்களால் சிதைக்கப்பட்டு விட்டதாக கூறுகின்றான். ➡️5:13அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள் ;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். ➡️5:14அன்றியும் எவர்கள் தங்களை, "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்;. ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்)  பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்;. இன்னும், அவ...

இஸ்லாம் கூறும் பாவ மன்னிப்பு

படம்
⭐⭐ இஸ்லாம் கூறும் பாவ மன்னிப்பு ⭐⭐ ✍அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. ✍நம்முடைய ஆதி பிதா ஆதாம் (அலை) மற்றும் அன்னை ஏவாள் (அலை) அவர்கள் செய்த முதல் பாவத்தின் (Original Sin) காரணமாக இறுதி நாள் வரை அவர்களுடைய சந்ததியினர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அனைத்தும் பாவத்துடனே பிறக்கின்றன என்றும் நம்முடைய பாவங்களை நீக்குவதற்காகவே இயேசு நாதர் சிலுவையில் உயிர் நீத்தார் என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்றது. மேலும் இதுவே கிறிஸ்தவத்தின் உயிர் நாடியாகவும் இருக்கிறது. ✍ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதற்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளது. பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் பாவமற்ற நிலையில் முஸ்லிமாகவே பிறக்கிறது என்றும் அக்குழந்தையின் பெற்றோர்களே அக்குழந்தையை யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ அல்லது இன்ன பிற மதத்தினராகவோ வளர்க்கிறார்கள் என்றும் கூறுகிறது. ✍மேலும் இஸ்லாம் மார்க்கம் என்பது இயற்கையான மார்க்கம் என்பதால் மனிதனின் இயற்கை குணங்களை எடுத்துக் கூறுகிறது. மனிதன் என்பவன் பாவம் செய்யும் குணமுடையவன் என்றும் ஆனால் எவர்கள் தம்முடைய பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் ...

பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பினாரா???

படம்
⭐⭐பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பினாரா???⭐⭐ ✍கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் இயேசுவை இறைவன் என்று நம்புகின்றனர். கிறிஸ்தவத்தை உருவாக்கியதில் இயேசுவுக்கு அடுத்து பவுலுக்கு முக்கின பங்கு உண்டு. அப்படிப்பட்ட பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பினாரா என்று பார்த்தால் கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்து இருக்கிறது. பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பவில்லை என்று அவரது நிருபங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ✍பவுலின் நிரூபங்கள் உட்பட பைபிளின் எந்த எழுத்தாளர்களும் இயேசுவை இறைவன் என்று சொல்லவில்லை. ✍பவுல் தனது நிருபங்களில் என்ன சொல்கிறார் என்பதை கீழே பார்ப்போம். ✍திமோத்தேயின் முதல் கடிதத்தில் பவுல் பின்வருமாறு எழுதுகிறார். ✍1 திமோத்தேயு 5:21. நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன். ✍மேற்கண்ட வசனத்தில் தேவனையும் இயேசுவையும் தனித்தனியே அடையாளப்படுத்துகிறார். இதற்கு அடுத்த அதிகாரத்தலும் இதேப்போன்று வேறுப்பாட...

குழந்தைகளின் மாமிசத்தை புசிக்கச்சொல்லும் அன்பு தேவன்

படம்
⭐⭐குழந்தைகளின் மாமிசத்தை புசிக்கச்சொல்லும் அன்பு தேவன்.⭐⭐             லேவியராகமம் 26:27-30 ➡️[27]இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், ➡️[28]நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன். ➡️ [29]உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள். ➡️[30] நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும். ✍மனிதன் தவறு செய்யும்போது அவனை நேர்வழிப்படுத்த இறைவன் அவர்களை சோதிக்கின்றான். இதுப்போன்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் இருக்கின்றன. பைபிளும் இதுப்பற்றி பேசுகிறது. கர்த்தரை வணங்கும் மக்கள் அவருடன் செய்த உடன்படிக்கையை மீறும்போது  அவர்களின் குழந்தைகளின் மாமிசத்தையே அவர்களுக்கு கொடுத்து தண்டிப்பதாக கர்த்தர் சொல்வதாக பைபிள் கூறுகிறது. இதுப்போன்ற தண்டனை எந்த மதத்திலும் இல்லை. ஆனால் இந்ந தேவனை ...

இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பும் முஸ்லீம்கள்

படம்
⭐⭐இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பும் முஸ்லீம்கள்.⭐⭐ ✍இந்த உலக வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்கரிய நபராக இயேசு பார்க்கப்படுகின்றார். ✍கிறிஸ்தவர்கள் இயேசுவை மேசியா என்றும், கர்த்தரின் மகன் என்றும், மனிதர்களை இரட்சிப்பதற்காக கொடுக்கப்பட்ட பலியாகவும் பார்க்கின்றனர். ✍இயேசு எந்த இனத்தில் இருந்து வந்தாரோ அந்த யூத இனம் இயேசுவை மேசியா இல்லை என்று சொல்கிறது. ✍நாத்திகர்களில் சிலர் இயேசுவை கற்பனை நாயகனாக பார்க்கின்றனர். ✍இவர்களில் இருந்து  வேறுப்பட்ட இயேசுவை முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதாவது இயேசு இஸ்ரவேல் மக்களுக்காக அனுப்பபட்ட மேசியா என்றும் நம்மை படைத்த ஒரே இறைவனின் அடியாராகவும் இயேசு பார்க்கப்படுகிறார். ✍முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இயேசுவை பற்றி பல விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டாலும் இயேசுவின் இரண்டாம் வருகையை நம்புவதில் ஒன்றுப்படுகின்றனர். ✍முஸ்லீம்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகயை பார்ப்பதற்கு முன்பு இயேசுவின் மரணம் குறித்தான சர்ச்சையை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். ➡️4:157 இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரரா...

கர்த்தரால் ஆண்டவராக்கப்பட்ட இயேசு

படம்
கர்த்தரால் ஆண்டவராக்கப்பட்ட இயேசு ✍இறைவன் என்பவன் அனைத்தையும் படைத்து அதன் அதிகாரம் அனைத்தையும் தன்னில் கொண்டவனாக இருப்பான். பைபிளின் பழைய ஏற்பாடு கர்த்தர் தான் அனைத்தையும் படைத்ததாகவும் அதன் அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டவராக காட்டுகிறது. ✍இயேசுவை குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்று ஆராய்ந்தால் அது நமக்கு அதிர்ச்சியை மட்டுமே பரிசாக தருகிறது.  கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில் இருந்து முற்றிலும் வேறுப்பட்ட இயேசுவையையே பைபிள் காட்டுகிறது.  கிறிஸ்தவர்கள் இறைவன் என்று நம்பகின்ற இயேசுவை இறைவன் என்று  தெள்ளத்தெளிவாக சொல்லும் ஒரு வசனத்தையும் பைபிளில் காண முடியவில்லை. கிறிஸ்தவர்களின் கண்மூடித்தனமான நம்பிக்கை நமக்கு வியப்பை தருகிறது. ✍பழைய ஏற்பாட்டில் மோஸே எவ்வாறு கர்த்தரால் ஆரோனுக்கும் பார்வோனுக்கும் தேவனாக்கப்பட்டாரோ அதேப்போன்று தான் இயேசுவும் கர்த்தரால்  தேவனாக்கப்பட்டுள்ளார். பழைய ஏற்பாடு மோஸேயை தேவன் என்று குறிக்க  கர்த்தரின் நாமமான எலோஹிம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. இந்த சிறப்பும் கூட இயேசுவுக்கு இல்லை. மோஸேயை இறைவன் என்று சொல்லாத கிறிஸ்தவர்கள் இயே...

இஸ்லாத்தில் ஆன்மீகம்

படம்
இஸ்லாத்தில் ஆன்மீகம் ✍விரிந்த ஒரு கருத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டிய ஆன்மீகம் என்ற பகுதி, இஸ்லாத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மனிதன் அழகான ஓர் உடலமைப்பைப் பெற்றிருப்பது போலவே, அழகான ஓர் ஆன்மாவையும் அவன் பெற்றிருக்கின்றான். ஒருவன் தனது உடலை அழகுபடுத்திக்கொள்வதற்காகக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அவனது ஆன்மாவை நெறிப்படுத்திக் கொள்வதற்காகவும் கொடுக்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. எனவேதான் மனித ஆன்மா பற்றிய அழகான போதனைகளை அறிமுகப்படுத்தி, ஆன்மீக மேம்பாட்டுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது, உலக வாழ்க்கையிலிருந்து பிரிந்த ஒரு துறையாக ஆன்மீகத்தை இஸ்லாம் கருதவில்லை என்பதைக் காட்டுகின்ற அதேவேளை, இஸ்லாத்தின் தனிச் சிறப்பம்சமாகவும் காணப்படுகிறது. ✍மனிதன் அடிப்படையில் உடல், அறிவு, ஆன்மா என்ற மூன்று முக்கிய கூறுகளால் ஆக்கப்பட்டவனாவான். இவற்றுள் உடலைத் தவிர்த்து ஆன்மாவையோ; ஆன்மாவைத் தவிர்த்து உடலையோ இஸ்லாம் முக்கியத்துவப்படுத்தி நோக்குவதில்லை. “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகையே விரும்புகிறான்” என்ற ஹதீஸ், உடலையும் உள்ளத்தையும் சம நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை ...

1 கொரிந்தியர் 8:6 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?

படம்
⭐⭐1 கொரிந்தியர் 8:6 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?⭐⭐ ➡️1கொரிந்தியர் 8 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். But to us there is but one God, the Father, of whom are all things, and we in him; and one Lord Jesus Christ, by whom are all things, and we by him. ✍மேற்கண்ட இந்த வசனம் இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர். உண்மையில் இந்த வசனம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் இயேசுவை இறைவன் என்று இந்த வசனம் சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ✍மேற்கண்ட வசனத்தில் "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு. அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது" என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ✍அடுத்த வாசகமான "இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்க...

பைபிள் முரண்பாடு: எது உண்மை இரட்சிப்பு?

படம்
பைபிள் முரண்பாடு:  எது உண்மை இரட்சிப்பு? ✍ஒரு வேதம் தன்னை பின்பற்றும் விசுவாசிகளுக்கு இரட்சிப்பின்  பாதையை  தெளிவாக காட்ட வேண்டும். இது அந்த வேதத்தை பின்பற்றும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் பைபிளோ இதில் தெளிவற்ற நிலையை காட்டி தன்னை பின்பற்றும் மக்களுக்கு குழப்பத்தை மட்டுமே பதிலாக தருகிறது.  ➡️14. என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ➡️24. ஆதலால், மனுஷன் விசுவாசத்திலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. james 2 ➡️20. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? James 1 ✍இயேசுவின் சகோதரரும் சீடருமான ஜேம்ஸ் விசுவாசத்துடன் கூடிய நற்செயல்கள்  தான் ஒருவருக்கு இரட்சிப்பை தரும் என்றும், நற்செயல்கள் இல்லாத விசுவாசம் இறந்து போன ஒன்று என்றும்  இஸ்ரவேவர்களின் 12 கோத்திராத்திற்கும் எழுதின மடலில் சொல்கிறார். ஆனால் பவுல் இயேசுவின் சீடரோடு முற்றிலும் முரண்பட்டு இரட்சிப்பை...

குற்றச்சாட்டுக்கு பதில்: சூரியன் சுடு நீரில் மறைவதாக ஹதிஸ்கள் சொல்கின்றதா?

படம்
குற்றச்சாட்டுக்கு பதில்: சூரியன் சுடு நீரில் மறைவதாக ஹதிஸ்கள் சொல்கின்றதா?  அபூதர் அறிவிக்கிறார்: நான் அல்லாஹ்வின் தூதரின்(ஸல்)  பின்னால் அமர்ந்து ஒரு கழுதையின் சவாரி செய்தபோது சூரியன் அஸ்தமித்தது: அப்போது  இது எங்கே அஸ்தமிக்கிறது தெரியுமா என்று  நபியவர்கள் கேட்டார்கள்; அதற்கு  நான் அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அது சூடான நீரில் மறைகிறது என்று கூறினார். (Sunan Abu Dawud, Hadith 3991) மேற்கண்ட ஹதிஸை கொண்டு கிறிஸ்தவர்கள்  சூரியன் சுடு நீரில் மறைகிறது என்று இந்த ஹதிஸ் கூறுவதாகவும் இது அறிவியலுக்கு முரண்பட்டது என்றும் வாதிடுகின்றனர். இதன் உண்மை நிலை என்னவென்று ஆராயலாம். அதே அறிவிப்பாளர் வரிசையில் சொல்லப்பட்ட மற்றொரு நீண்ட ஹதிஸ் முஸ்னத் அஹமது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அபூ தர்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒருமுறை  நான் நபி (ஸல்) அவர்களுடன் சேனம் பூட்டப்பட்ட கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தேன். நபி என்னிடம் கேட்டார்: ஓ அபூதர்! சூரியன் எங்கே அஸ்தமிக்கிறது என்று உமக்கு  தெரியு...

யோவான் 14:9 இயேசுவை கர்த்தர் என்று சொல்கிறதா?

படம்
யோவான் 14:9 இயேசுவை கர்த்தர் என்று சொல்கிறதா? யோவான் 14 8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? கிறிஸ்தவர்கள் மேற்கண்ட வசனங்களை காட்டி இயேசுவை இறைவன் என்று கூறுகின்றனர். உண்மையில் இந்த வசனங்கள் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா என்று ஆராயலாம். மேற்கண்ட வசனத்தில் இருந்து கர்த்தரும் இயேசுவும் ஒரே நபர் தான் என்று சொல்வது திரித்துவ நம்பிக்கைக்கே விரோதமாக அமையும். ஏனெனில் திரித்துவ நம்பிக்கைப்படி பிதாவும் இயேசுவும் பரிசுத்த ஆவியும்  தனித்தனி நபர்கள் என்பதே. ஒரு நாட்டின் தூதருடன் செய்யப்படும் உடன்படிக்கை  அந்த நாட்டுடன் செய்யும் உடன்படிக்கையாகவே  பார்க்கப்படுகிறது. அவ்வாறே மேற்கண்ட  வசனமும் இயேசுவை கண்டால் கர்த்தரை கண்டதாக சொல்வது என்பது ஆன்மீக அடிப்படையில்  சொல்லப்பட்ட ஒன்று தான் என்பதை புரிந்து ...

அல்லாஹ் மிக்க அன்புடையவன்

படம்
அல்லாஹ்  மிக்க அன்புடையவன் (நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்." குர்ஆன் 15:49 சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அவனுடைய படைப்புகளிடத்தில் அன்பும் இரக்கமும் நிறைந்தவன். இந்த உலகில் உள்ள எல்லா அருட்கொடைகளும், நன்மையும், அவனுடைய இரக்கத்தின் தெளிவான சான்றுகளாக இருக்கின்றன. உண்மையில், நம்முடைய தாய்மார்களை விட அல்லாஹ்  நம்மீது மிகுந்த இரக்கமுள்ளவன் என்றே இஸ்லாம் போதிக்கின்றது. 5999. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார் (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நா...

1 திமோத்தி 3:16 தேவன் மனிதனாக வந்தார் என்று போதிக்கிறதா?

படம்
1 திமோத்தி 3:16 தேவன் மனிதனாக வந்தார் என்று போதிக்கிறதா?  இன்றைய கிறிஸ்தவர்கள் 1 திமோத்தி 3:16 வசனத்தை ஆதாரமாக வைத்து கொண்டு கர்த்தர் மனிதனாக வந்தார் என்று கருத்தை பரப்பி வருகின்றனர். உண்மையில் இந்த வசனம் அவ்வாறு தான் சொல்கிறதா என்று பார்ப்போம். இந்த வசனத்தின் கிரேக்க மூல மொழியில் தேவன் மனிதனாக வந்தார் என்று சொல்லப்படாமல், " அவர் " மனிதனாக வந்தார் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.  இங்கு "அவர்" என்று இயேசுவை குறித்தே சொல்லப்பட்டுள்ளது. தேவன் மனிதனாக வந்தார் என்று கிங் ஜேம்ஸ் வெர்ஷன் பைபிள் மட்டுமே அவ்வாறு மாற்றி மொழிப்பெயர்த்துள்ளனர். மற்ற மொழிப்பெயர்ப்பு பைபிளில் "அவர்" மனிதனாக வந்தார் என்று  தான் மொழிப்பெயர்த்துள்ளனர். உதாரணத்திற்கு கத்தோலிக்க பைபிளிலும், புதிய உலக மொழிப்பெயர்ப்பு பைபிளிலும் தேவன் என்ற சொல்லுக்கு பதிலாக "அவர்" என்ற சொல்லையே  பயன்படுத்தியுள்ளனர். இதைப்போல ஆங்கில மொழிப்பெயர்ப்பு பைபிளிலும்  "அவர்(he)" என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளனர்.  கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக...

ஏசாயா 7:14 இயேசுவை பற்றி பேசுகிறதா?

படம்
ஏசாயா 7:14  இயேசுவை பற்றி பேசுகிறதா?? ஏசாயா 7:14 வசனத்தை கிறிஸ்தவர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமின்றி இயேசுவோடு பொருத்தி பார்க்கின்றனர். அந்த வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை அறிவோர் அந்த வசனம் இயேசுவை பற்றி பேசவில்லை என்பதை புரிந்து கொள்வர்.   ஏசாயா 7வது அதிகாரம் யூதாவின் போர் சூழ்நிலையை பற்றி பேசுகிறது.  ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும்  பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் ஆகாஸ் ஆண்டு வந்த யூதா   தேசத்தின் மேல் போர் தொடுத்து வந்தார்கள்.  அந்த போரில் சிரியாவும் இஸ்ரவேலும் வெற்றி பெற முடியவில்லை. அந்த நேரத்தில் யூதா தேசத்து அரசன் ஆகாஸுக்கும் அவனது மக்களும் எதிரிகளால் கலக்கமடைந்து இருந்தார்கள் என்றும் அவர்களை கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக சில தீர்க்கதரிசினங்களை யூதாவை மக்களை பலப்படுத்துகிறார். அந்த தீர்க்கதரிசினம் யாதெயில் இன்னும்   65 வருடங்களில் எதிரி தேசங்கள் அழிந்து விடும் என்பதே. 8. சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒர...

கர்த்தர் மனம் மாறதவரா?

படம்
⭐⭐ பைபிள் முரண்பாடு: கர்த்தர் மனம் மாறதவரா? ⭐⭐ ▶️ 1 Samuel 15: ➡️29. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். ✍மேற்கண்ட இந்த வசனத்தில் மனம் மாற கர்த்தர் மனிதன் அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனத்தின் கருத்தோடு அறிவுள்ள எவரும் உடன்படுவே செய்வர். ஏனெனில் இறைவன் என்பவர் மனிதனை போன்று பலவீனமானவர் இல்லை. இறைவன் முக்காலமும் அறிந்தவர்.  ஆதலால் தனது மனம் மாற வேண்டிய அவசியம் இறைவனுக்கு தேவையும் இல்லை. ✍பைபிளின் ஒரு இடத்தில் மனம் மாறதவர் என்று சொல்லி கொள்ளும் கர்த்தர் பைபிளின் மற்றொரு இடத்தில் தனது செயலினால் மனம் மாறி தனது பலவீனத்தை காட்டுகிறார். ➡️ யாத்திராகமம் 32: 9. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள். ➡️10. ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். ➡️11. மோசே தன் தேவனாகிய கர்த்தரைநோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்...

குர்ஆன் தூதரின் சொல்லா??

படம்
குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை. Al-Haqqah 69:40 إِنَّهُۥ #لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ Tamil - Jan Trust Foundation ➡️நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின்  சொல்லாகும். ✍இந்த வசனத்தில் கண்ணியமிக்க தூதரின் சொல் என்பதை குறிக்க 'கவ்லு' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் வார்த்தை என்பதை குறிக்க 'கலாமல்லாஹ்' என்ற சொல் மூல மொழியில் சொல்லப்பட்டுள்ளது. ✍அல்லாஹ்வின் வார்த்தை(கலாமல்லாஹு) என்பதற்கும் தூதரின் சொல்(கவ்லு ரஸூலின்) என்பதற்கும் தனித்தனி அரபுச் சொற்களே பயன்படுத்தப்பப்டுள்ளன.  இவை இரண்டும் வெவ்வேறு  அர்த்தங்கள் கொண்டவை. ➡️At-Taubah 9:6 وَإِنْ أَحَدٌ مِّنَ ٱلْمُشْرِكِينَ ٱسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّىٰ يَسْمَعَ #كَلَٰمَ ٱللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُۥۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ English - Sahih International And if any one of the polytheists seeks your protection, then grant him protection so that he may hear the #words of Allah . Then deliver him to his place of safety. That is because the...

ஏசாயா 9:6 இயேசுவை குறித்துப் பேசுகிறதா??

படம்
ஏசாயா 9:6  இயேசுவை குறித்துப் பேசுகிறதா??  ஏசாயா 9 6: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; ஆட்சியதிகாரம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். இந்த அடையாளப் பெயர்கள் இயேசுவுக்கு பொருந்துமா என்று இயேசுவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கலாம். 🌟🌟 ஆலோசனைக்கர்த்தா🌟🌟 ✍தன்னை பெற்றவரை அடக்கம் பண்ண அனுமதி கேட்கும் சீடருக்கு தன்னை பின்பற்றி வர சொல்லி இயேசுவை இரக்கம் இல்லாத கல் மனதுக்காரர் என்றே புதிய ஏற்பாடு காட்டுகிறது.தன்னை பின்பற்றி வரும் தனது சீடருக்கே தனது தந்தையை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கும் இயேசுவை நல்ல ஆலோசனை கர்த்தர் என்று எவ்வாறு சொல்ல முடியும்? ☞8:21: அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். ☞22: அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (மத்தேயு ) 🌟🌟வல்லமமையுள்ள தேவன்🌟🌟 ☞மத்தேயு 5: ...

இஸ்லாத்தின் பார்வையில் இயேசு

படம்
அல்லாஹ்வின் வார்த்தை இயேசு பற்றி ஆராயலாம்.  ☞வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய  ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான் ;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன்  அல்லாஹ் ஒருவன் தான்;.  அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 4:171 ✍இயேசு அல்லாஹ்வின புறத்தில் இருந்து வந்த வார்த்தை என்று இங்கு குறிப்பிடப்படு...

காமத்தை தூண்டும் பைபிள்

படம்
காமத்தை தூண்டும் பைபிள். பைபிளின் பழைய ஏற்பாட்டில் சாலொமோனின் உன்னதப்பாட்டு என்ற ஒரு ஆகமம் உள்ளது. அந்த உன்னத பாட்டில் போதிக்கப்படும் உன்னத (?) போதனைகள் : என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது. அவரது வலது கை என்னை அணைத்துக் கொள்கிறது. (2:6) என் அன்பே! நீ அழகானவள். …ஓ நீ அழகானவள். உன் முக்காட்டின் நடுவே உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றுள்ளன . உன் நீண்ட கூந்தல் கீலேயாத் மலைச்சரிவில் நடன மாடிக்கொண்டிருக்கும் வெள்ளாட்டு மந்தை போல அசைந்து கொண்டிருக்கிறது.(4:1) உன் பற்கள் வெள்ளைப் பெண் ஆட்டுக் குட்டிகள் குளித்து கரையேறுவது போன்றுள்ளன . அவை இரட்டைக் குட்டிகள் போட்டு எந்தக் குட்டியையும் இழக்காத ஆட்டினைப்போன்றுள்ளன. (4 2) உனது உதடுகள் சிவந்த பட்டுக் கயிற்றைப் போன்றுள்ளன. உனது வாய் அழகானது. உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டி வைக்கப்பட்ட மாதுளம் பழம்போல் உள்ளன.(4:3) உன் கழுத்து நீண்டு மென்மையாக தாவீதின் கோபுரம்போல் உள்ளது. அக்கோபுரத்தின் சுவர்கள் ஆயிரம் வீரர்களின் கேடயங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள து.(4:4) உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெ...

கிறிஸ்தவம் யாரால் உருவாக்கப்பட்டது?

படம்
❔❔❔❔கிறிஸ்தவம் யாரால் உருவாக்கப்பட்டது?❔❔❔❔ ✍கிறிஸ்தவம் என்பது கிறிஸ்து என்ற பெயருடன் தொடர்பு படுத்தப்பட்ட ஒரு மதம்! இயேசுவோ அதற்கு முந்தைய தீர்க்கதரிசிகளோ இப்படி ஒரு மதத்தைப் போதித்ததாக பைபிள் கூறவில்லை. மாறாக அவர்கள் இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தையே பிரச்சாரம் செய்தனர். இஸ்லாம் என்றால் சமாதானம்! இந்த சமாதானத்தின் உடன்படிக்கை குறித்தே தீர்க்கதரிசிகள் உபதேசித்ததாகவும் அந்த சமாதானத்தையே இயேசு போதித்ததாகவும் பைபிள் கூறுகிறது! 👉ஏசாயா  48:17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். 👉ஏசாயா 26:12. கர்த்தாவே,  எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே. 👉யோவான் 14:27.  சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ❔இயேசுவுக்கு முன்னர் கிறிஸ்தவம் என்ற மதம் இல்லை எனில் அது யாரால் உருவாக்கப்பட்டது? ...