கர்த்தர் மனம் மாறதவரா?

⭐⭐பைபிள் முரண்பாடு: கர்த்தர் மனம் மாறதவரா?⭐⭐







▶️1 Samuel 15:

➡️29. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.


✍மேற்கண்ட இந்த வசனத்தில் மனம் மாற கர்த்தர் மனிதன் அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனத்தின் கருத்தோடு அறிவுள்ள எவரும் உடன்படுவே செய்வர். ஏனெனில் இறைவன் என்பவர் மனிதனை போன்று பலவீனமானவர் இல்லை. இறைவன் முக்காலமும் அறிந்தவர்.  ஆதலால் தனது மனம் மாற வேண்டிய அவசியம் இறைவனுக்கு தேவையும் இல்லை.

✍பைபிளின் ஒரு இடத்தில் மனம் மாறதவர் என்று சொல்லி கொள்ளும் கர்த்தர் பைபிளின் மற்றொரு இடத்தில் தனது செயலினால் மனம் மாறி தனது பலவீனத்தை காட்டுகிறார்.

➡️யாத்திராகமம் 32:
9. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.

➡️10. ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

➡️11. மோசே தன் தேவனாகிய கர்த்தரைநோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

➡️12. மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும்.

➡️13. உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

➡️14. அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

✍மேற்கண்ட இந்த வசனத்தில் இருந்து  பாவங்களில் மிகப்பெரிய பாவமான சிலை வழிப்பாட்டை  இஸ்ரவேவர்கள் செய்த போது அவர்களை அழிக்க கர்த்தர் ஆயத்தமாகிறார். ஆனால்  மோஸேயின் பிரார்த்தனைக்கு பிறகு கர்த்தர் இஸ்ரவேல் மக்களின் மீது பரிதாபம் கொண்டு அவர்களை அழிக்காமல் விடுகிறார். இவ்வாறு கர்த்தர் தன் வார்த்தையோடு முரண்பட்டு தன் இயலாமையை காட்டுவதாக பைபிள் போதிக்கிறது. தனக்குத்தானே முரண்பட்டு பேசுவது தான் பைபிள் இறைவனின் இலக்கணமா?


☀️☀️மற்றொரு சம்பவம்:🌞🌞

➡️ஆதியாகமம்  6

6: தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.


✍மனிதனது அக்கிரமம் செய்யும் குணத்தையும், மனிதனது எதிர்காலம் பற்றிய  அறிவில்லாத பலவீனமான  இறைவனாக கர்த்தர்  இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மனிதனது செயல்களை கண்டு துக்கமடையும் பலவீனமான இறைவன்தான் கர்த்தர் என்று பைபிள் போதிக்கிறது. தான் மாறதவர் என்ற தனது வார்த்தையோடு முரண்பட்டு கர்த்தர் மனிதனை படைத்ததற்காக மனம் மாறி வருத்தப்படுகிறார். 


✍உண்மையில் இறைவன் தனது வார்த்தையோடு முரண்படுகிறாரா அல்லது பைபிளில் மனித கரங்களால் சிதைக்கப்பட்டுவிட்டதா என்பதை சிந்திப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்