இஸ்லாத்தில் ஆன்மீகம்

இஸ்லாத்தில் ஆன்மீகம்




✍விரிந்த ஒரு கருத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டிய ஆன்மீகம் என்ற பகுதி, இஸ்லாத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மனிதன் அழகான ஓர் உடலமைப்பைப் பெற்றிருப்பது போலவே, அழகான ஓர் ஆன்மாவையும் அவன் பெற்றிருக்கின்றான். ஒருவன் தனது உடலை அழகுபடுத்திக்கொள்வதற்காகக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அவனது ஆன்மாவை நெறிப்படுத்திக் கொள்வதற்காகவும் கொடுக்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. எனவேதான் மனித ஆன்மா பற்றிய அழகான போதனைகளை அறிமுகப்படுத்தி, ஆன்மீக மேம்பாட்டுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது, உலக வாழ்க்கையிலிருந்து பிரிந்த ஒரு துறையாக ஆன்மீகத்தை இஸ்லாம் கருதவில்லை என்பதைக் காட்டுகின்ற அதேவேளை, இஸ்லாத்தின் தனிச் சிறப்பம்சமாகவும் காணப்படுகிறது.

✍மனிதன் அடிப்படையில் உடல், அறிவு, ஆன்மா என்ற மூன்று முக்கிய கூறுகளால் ஆக்கப்பட்டவனாவான். இவற்றுள் உடலைத் தவிர்த்து ஆன்மாவையோ; ஆன்மாவைத் தவிர்த்து உடலையோ இஸ்லாம் முக்கியத்துவப்படுத்தி நோக்குவதில்லை. “அல்லாஹ் அழகானவன்; அவன் அழகையே விரும்புகிறான்” என்ற ஹதீஸ், உடலையும் உள்ளத்தையும் சம நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது. உடல் அழகாகவும் ஆன்மா அசிங்கமாகவும் அல்லது ஆன்மா அழகாகவும் உடல் அசிங்கமாவும் இருக்கும் நிலையை இஸ்லாம் ஆதரிப்பதில்லை.

✍ஆன்மீகத் துறையை மேம்பாடடையச் செய்வதற்கு இஸ்லாம் காட்டும் வழி முறைகளில் முக்கியமானது இக்லாஸ்.

🌟🌟இக்லாஸ்🌟🌟

 ➡️“செயல்கள் யாவும் எண்ணங்களைப்பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். புகாரி,முஸ்லிம்

✍இந்த ஹதீஸ்  எமது  ஒவ்வொரு செயலுக்கும்தூய எண்ணம் அவசியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.  நம்முடைய எண்ணத்தின்அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்குஅல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.

➡️ “நிச்சயமாக அல்லாஹ் உங்கள்தோற்றங்களையோ, உங்கள்பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக,உங்கள் உள்ளங்களையும், உங்கள்செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

 ➡️   “மறுமையில் தீர்ப்புக் கூறப்படும்அந்நாளில் ஓர் உயிர்த்தியாகிஅல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார்.அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான்செய்த அருட்கொடைகளை எடுத்துக்காட்டுவான். அவரும் அதை உணர்ந்துகொள்வார். அவரிடம் ‘எனக்காக என்னசெய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயேகொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார்.அப்பொழுது இறைவன்: ‘நீ பொய்சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்படவேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய்.அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்றுகூறுவான். பிறகு (மலக்குகளை அழைத்து)அம்மனிதரை நரகில் முகம் குப்புறதள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். : (முஸ்லிம்)

✍இந்த ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம்எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக்கொள்ளலாம். படைத்த இறைவனுக்கு ஒருமனிதன் செய்யக்கூடிய அதிகபட்ச தியாகமாகஎன்ன செய்ய முடியுமோ, அந்த தியாகத்தை,அதாவது உயிரை அல்லாஹ்வின் பாதையில்இழந்துள்ளார். இதை யாரும் மறுக்க முடியாது.அவ்வளவு எளிதாக யாரும் செய்ய முடியாததியாகத்தைச் செய்தபோது எண்ணம்சரியில்லாத காரணத்தினால் அவர் நரகத்திற்குசெல்வதை இந்த நபிமொழி நமக்குஉணர்த்துகிறது.

✍ இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடையஇறைவனுக்கு செய்ய வேண்டிய நல்லஅமல்களை பேருக்காகவும், புகழுக்காகவும்,பணத்திற்காகவும் செய்யக்கூடியபரிதாபகரமான சூழ்நிலைகளை பார்க்கிறோம்.அவர்கள் இது குறித்து எந்தவிதமான வருத்தமும்இல்லாமல் மிக எளிதாக செயல்படுகிறார்கள்.இவர்களைப் பற்றித்தான் படைத்த இறைவன்அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

 ➡️  “எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும்,அதன் அலங்காரத்தையும் (மட்டுமே)நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரியகூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும்.அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில்நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. ➡️(இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும்அழிந்து விட்டன. அவர்கள் செய்துகொண்டிருப்பவையும்வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)

✍எனவே, நம்முடைய அமல்களை தூயஎண்ணத்துடன் செய்ய செய்யவேண்டும்.மற்றவர்கள் பார்ப்பதற்காக, புகழ்வதற்காக என்றுசெயல்பட்டால் மறுமையில் நாம் மிகப் பெரியநஷ்டத்தை சந்திக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்