குற்றச்சாட்டுக்கு பதில்: சூரியன் சுடு நீரில் மறைவதாக ஹதிஸ்கள் சொல்கின்றதா?
குற்றச்சாட்டுக்கு பதில்: சூரியன் சுடு நீரில் மறைவதாக ஹதிஸ்கள் சொல்கின்றதா?
அபூதர் அறிவிக்கிறார்: நான் அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) பின்னால் அமர்ந்து ஒரு கழுதையின் சவாரி செய்தபோது சூரியன் அஸ்தமித்தது: அப்போது இது எங்கே அஸ்தமிக்கிறது தெரியுமா என்று நபியவர்கள் கேட்டார்கள்; அதற்கு நான் அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அது சூடான நீரில் மறைகிறது என்று கூறினார்.
(Sunan Abu Dawud, Hadith 3991)
மேற்கண்ட ஹதிஸை கொண்டு கிறிஸ்தவர்கள் சூரியன் சுடு நீரில் மறைகிறது என்று இந்த ஹதிஸ் கூறுவதாகவும் இது அறிவியலுக்கு முரண்பட்டது என்றும் வாதிடுகின்றனர். இதன் உண்மை நிலை என்னவென்று ஆராயலாம்.
அதே அறிவிப்பாளர் வரிசையில் சொல்லப்பட்ட மற்றொரு நீண்ட ஹதிஸ் முஸ்னத் அஹமது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ தர்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒருமுறை நான் நபி (ஸல்) அவர்களுடன் சேனம் பூட்டப்பட்ட கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தேன். நபி என்னிடம் கேட்டார்: ஓ அபூதர்! சூரியன் எங்கே அஸ்தமிக்கிறது என்று உமக்கு தெரியுமா என்று கேட்டார். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். அதற்கு அவர் கூறினார்: அது மர்மமான நீரில் மறைகிறது, பிறகு அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது உதயமாகும் காலத்தை அடையும் போது அல்லாஹ் அதற்கு உதயமாக அனுமதி தருகிறான். அல்லாஹ் எப்போது அஸ்தமிக்கும் இடத்திலேயே சூரியனை உதயமாக்க நினைக்கிறானோ அப்போது அதனை தடுத்துக்கின்றான். பிறகு சூரியன் தன் இறைவனிடம் கூறும்: என்னுடைய இறைவனே! நான் பயணிக்க நீண்ட தூரம் உள்ளது என்று (கூறி அனுமதி கேட்கும்): அப்போது அல்லாஹ் அதனை அஸ்தமிடத்த இடத்திலேயே மீண்டும் உதிக்க (சூரியனை) சொல்லுவான். நம்பிக்கையற்றவர்கள் அதன் பிறகு நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு ஒரு நன்மையும் தராது. (முஷ்னத் அஹமது, ஹதீஸ் 21459 அல்-ரிஷாலா பதிப்பு.)
மேற்கண்ட ஹதிஸ் பலவீனமானது ஆகும். இந்த ஹதிஸின் அறிவிப்பாளர்கள் வரிசை நம்பகமானது என்றாலும் மற்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதிஸோடு இந்த ஹதிஸ் முரண்படுகிறது.
இந்த ஹதிஸ் ஆறு வேறுப்பட்ட அறிவிப்பாளர்கள் வரிசையில் மற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரியன் சுடு நீரில் மறைகிறது என்ற வரி ஒரே ஒருவரது அறிவிப்பாளர் வரிசை வழியாக மட்டும் வருகிறது. இந்த வரி மற்ற அறிவிப்பாளர்கள் வரிசை வழியாக வரும் ஹதிஸ்களில் இல்லை. இதுப்போன்ற ஹதிஸ்களை ஸாத்(முரண்பாடான ஹதிஸ்) வகை என்று ஹதிஸ் துறையில் குறிப்பிடுவர்.
ஒரு அறிவிப்பாளர் வழி வந்த ஹதிஸ்கள் மற்ற அறிவிப்பாளர்கள் வழி வந்த அதே ஹதிஸ்களோடு முரண்பட்ட நிலைக்கு ஸாத் வகை ஹதிஸ் என்பர். அதே சமயம் அந்த ஹதிஸ்கள் நம்பகமான அறிவிப்பாளர் வரிசையை கொண்டு இருக்கும்.
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் வரிசை படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் மற்றவர்களோடு முரண்பட்ட நிலையில் ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசை சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அல் ஹக்கம் பின் உதைய்பா வழி வருகின்ற இந்த ஹதிஸ் மட்டும் மற்ற ஐந்து அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதிஸில் இருந்து மாறுப்படுகின்றது.
அல் ஹக்கம் பின் உதைய்பாவின் ஹதிஸை சூஃப்யான் பின் ஹூசைன் என்பவர் அறிவிக்கிறார். இவர் நம்பகமானவர் தான் என்றாலும் தனது அறிவிப்பில் தவறுகளை செய்யக் கூடியவர் என்று முஹம்மது இப்னு ஸாத் அவர்கள் தனது நூலில் கூறுகின்றார். (Tabaqat al-Kubra, Dar al-Kotob al-Ilmiyya, Beirut, 1990, vol.7 p.227 No. 3417)
இதே ஹதிஸ் மற்ற அறிவிப்பாளர் வழியாக வந்தது புகாரி, முஸ்லிம், ஹில்யா அல் அவுலியா போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு புஹாரியில் பதியப்பட்ட ஹதிஸை பார்க்கலாம்.
3199. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு' என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்' என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்' என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
மேற்கண்ட ஹதிஸில் சூரியன் சுடு நீரில் மறைகிறது என்ற வார்த்தை இல்லாமல் இருப்பதை நாம் பார்க்கலாம். சூரியன் சுடு நீரில் மறைகின்றது என்ற வரி அறிவிப்பாளர் செய்த தவறு என்பதை மற்ற அறிவிப்பாளர்கள் வழியாக வந்த இதே ஹதிஸ்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
அபூதர் அறிவிக்கிறார்: நான் அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) பின்னால் அமர்ந்து ஒரு கழுதையின் சவாரி செய்தபோது சூரியன் அஸ்தமித்தது: அப்போது இது எங்கே அஸ்தமிக்கிறது தெரியுமா என்று நபியவர்கள் கேட்டார்கள்; அதற்கு நான் அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அதற்கு அவர் அது சூடான நீரில் மறைகிறது என்று கூறினார்.
(Sunan Abu Dawud, Hadith 3991)
மேற்கண்ட ஹதிஸை கொண்டு கிறிஸ்தவர்கள் சூரியன் சுடு நீரில் மறைகிறது என்று இந்த ஹதிஸ் கூறுவதாகவும் இது அறிவியலுக்கு முரண்பட்டது என்றும் வாதிடுகின்றனர். இதன் உண்மை நிலை என்னவென்று ஆராயலாம்.
அதே அறிவிப்பாளர் வரிசையில் சொல்லப்பட்ட மற்றொரு நீண்ட ஹதிஸ் முஸ்னத் அஹமது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபூ தர்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒருமுறை நான் நபி (ஸல்) அவர்களுடன் சேனம் பூட்டப்பட்ட கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தேன். நபி என்னிடம் கேட்டார்: ஓ அபூதர்! சூரியன் எங்கே அஸ்தமிக்கிறது என்று உமக்கு தெரியுமா என்று கேட்டார். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். அதற்கு அவர் கூறினார்: அது மர்மமான நீரில் மறைகிறது, பிறகு அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது உதயமாகும் காலத்தை அடையும் போது அல்லாஹ் அதற்கு உதயமாக அனுமதி தருகிறான். அல்லாஹ் எப்போது அஸ்தமிக்கும் இடத்திலேயே சூரியனை உதயமாக்க நினைக்கிறானோ அப்போது அதனை தடுத்துக்கின்றான். பிறகு சூரியன் தன் இறைவனிடம் கூறும்: என்னுடைய இறைவனே! நான் பயணிக்க நீண்ட தூரம் உள்ளது என்று (கூறி அனுமதி கேட்கும்): அப்போது அல்லாஹ் அதனை அஸ்தமிடத்த இடத்திலேயே மீண்டும் உதிக்க (சூரியனை) சொல்லுவான். நம்பிக்கையற்றவர்கள் அதன் பிறகு நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு ஒரு நன்மையும் தராது. (முஷ்னத் அஹமது, ஹதீஸ் 21459 அல்-ரிஷாலா பதிப்பு.)
மேற்கண்ட ஹதிஸ் பலவீனமானது ஆகும். இந்த ஹதிஸின் அறிவிப்பாளர்கள் வரிசை நம்பகமானது என்றாலும் மற்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதிஸோடு இந்த ஹதிஸ் முரண்படுகிறது.
இந்த ஹதிஸ் ஆறு வேறுப்பட்ட அறிவிப்பாளர்கள் வரிசையில் மற்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரியன் சுடு நீரில் மறைகிறது என்ற வரி ஒரே ஒருவரது அறிவிப்பாளர் வரிசை வழியாக மட்டும் வருகிறது. இந்த வரி மற்ற அறிவிப்பாளர்கள் வரிசை வழியாக வரும் ஹதிஸ்களில் இல்லை. இதுப்போன்ற ஹதிஸ்களை ஸாத்(முரண்பாடான ஹதிஸ்) வகை என்று ஹதிஸ் துறையில் குறிப்பிடுவர்.
ஒரு அறிவிப்பாளர் வழி வந்த ஹதிஸ்கள் மற்ற அறிவிப்பாளர்கள் வழி வந்த அதே ஹதிஸ்களோடு முரண்பட்ட நிலைக்கு ஸாத் வகை ஹதிஸ் என்பர். அதே சமயம் அந்த ஹதிஸ்கள் நம்பகமான அறிவிப்பாளர் வரிசையை கொண்டு இருக்கும்.
இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் வரிசை படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் மற்றவர்களோடு முரண்பட்ட நிலையில் ஹதிஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசை சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அல் ஹக்கம் பின் உதைய்பா வழி வருகின்ற இந்த ஹதிஸ் மட்டும் மற்ற ஐந்து அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதிஸில் இருந்து மாறுப்படுகின்றது.
அல் ஹக்கம் பின் உதைய்பாவின் ஹதிஸை சூஃப்யான் பின் ஹூசைன் என்பவர் அறிவிக்கிறார். இவர் நம்பகமானவர் தான் என்றாலும் தனது அறிவிப்பில் தவறுகளை செய்யக் கூடியவர் என்று முஹம்மது இப்னு ஸாத் அவர்கள் தனது நூலில் கூறுகின்றார். (Tabaqat al-Kubra, Dar al-Kotob al-Ilmiyya, Beirut, 1990, vol.7 p.227 No. 3417)
இதே ஹதிஸ் மற்ற அறிவிப்பாளர் வழியாக வந்தது புகாரி, முஸ்லிம், ஹில்யா அல் அவுலியா போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு புஹாரியில் பதியப்பட்ட ஹதிஸை பார்க்கலாம்.
3199. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு' என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்' என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்' என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்
மேற்கண்ட ஹதிஸில் சூரியன் சுடு நீரில் மறைகிறது என்ற வார்த்தை இல்லாமல் இருப்பதை நாம் பார்க்கலாம். சூரியன் சுடு நீரில் மறைகின்றது என்ற வரி அறிவிப்பாளர் செய்த தவறு என்பதை மற்ற அறிவிப்பாளர்கள் வழியாக வந்த இதே ஹதிஸ்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக