ஏசாயா 7:14 இயேசுவை பற்றி பேசுகிறதா?
ஏசாயா 7:14 இயேசுவை பற்றி பேசுகிறதா??
ஏசாயா 7:14 வசனத்தை கிறிஸ்தவர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமின்றி இயேசுவோடு பொருத்தி பார்க்கின்றனர். அந்த வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை அறிவோர் அந்த வசனம் இயேசுவை பற்றி பேசவில்லை என்பதை புரிந்து கொள்வர்.
ஏசாயா 7வது அதிகாரம் யூதாவின் போர் சூழ்நிலையை பற்றி பேசுகிறது.
ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும் பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் ஆகாஸ் ஆண்டு வந்த யூதா தேசத்தின் மேல் போர் தொடுத்து வந்தார்கள்.
அந்த போரில் சிரியாவும் இஸ்ரவேலும் வெற்றி பெற முடியவில்லை.
அந்த நேரத்தில் யூதா தேசத்து அரசன் ஆகாஸுக்கும் அவனது மக்களும் எதிரிகளால் கலக்கமடைந்து இருந்தார்கள் என்றும் அவர்களை கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக சில தீர்க்கதரிசினங்களை யூதாவை மக்களை பலப்படுத்துகிறார்.
அந்த தீர்க்கதரிசினம் யாதெயில் இன்னும் 65 வருடங்களில் எதிரி தேசங்கள் அழிந்து விடும் என்பதே.
8. சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்.
அந்த தீர்கக்தரிசினத்திற்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட்டது. அந்த அடையாளத்தை ஏசாயா 7:14-16 வசனங்கள் பேசுகின்றன.
14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
15. தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
16. அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
அதாவது ஒரு இளம் பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கும். அதன் பெயர் இம்மானுவேல் என்றும், நன்மை தீமை அறியும் வயது வரும்வரை வெண்ணெயையும் தேனும் சாப்பிடுவார் என்றும், அந்த பருவ வயதை அவர் அடைவதற்கு முன்பே யூதா தேசத்து அரசன் வெறுக்கும் அந்த இரண்டு தேசங்களும்(சிரியா மற்றும் இஸ்ரேல்) அதன் ராஜாக்களால் கைவிடப்படும் என்று அதன் அடையாளம் சொல்லப்படுகிறது என்பதை மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஆகாஸூம் அவரது மக்களும் இறந்த நீண்ட காலம்(700 ஆண்டுகளுக்கு பிறகு) ஆன பிறகா ஆகாஸூக்கு கொடுக்கப்பட்ட கர்த்தரின் அடையாளம் நடக்கும்(?) என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும். அத்தகைய அடையாளம் முட்டாள்தனமானது.
இயேசு பிறக்கும்போது யூதா தேசமும் இருக்கவில்லை. அதன் அரசன் ஆகாஸூம் இருக்கவில்லை. ஆதலால் இந்த அடையாளம் எந்த வகையிலும் இயேசுவை குறிக்காது என்பதை புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக