1 திமோத்தி 3:16 தேவன் மனிதனாக வந்தார் என்று போதிக்கிறதா?
1 திமோத்தி 3:16 தேவன் மனிதனாக வந்தார் என்று போதிக்கிறதா?
இன்றைய கிறிஸ்தவர்கள் 1 திமோத்தி 3:16 வசனத்தை ஆதாரமாக வைத்து கொண்டு கர்த்தர் மனிதனாக வந்தார் என்று கருத்தை பரப்பி வருகின்றனர். உண்மையில் இந்த வசனம் அவ்வாறு தான் சொல்கிறதா என்று பார்ப்போம்.
இந்த வசனத்தின் கிரேக்க மூல மொழியில் தேவன் மனிதனாக வந்தார் என்று சொல்லப்படாமல், "அவர்" மனிதனாக வந்தார் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. இங்கு "அவர்" என்று இயேசுவை குறித்தே சொல்லப்பட்டுள்ளது.
தேவன் மனிதனாக வந்தார் என்று கிங் ஜேம்ஸ் வெர்ஷன் பைபிள் மட்டுமே அவ்வாறு மாற்றி மொழிப்பெயர்த்துள்ளனர். மற்ற மொழிப்பெயர்ப்பு பைபிளில் "அவர்" மனிதனாக வந்தார் என்று தான் மொழிப்பெயர்த்துள்ளனர். உதாரணத்திற்கு கத்தோலிக்க பைபிளிலும், புதிய உலக மொழிப்பெயர்ப்பு பைபிளிலும் தேவன் என்ற சொல்லுக்கு பதிலாக "அவர்" என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். இதைப்போல ஆங்கில மொழிப்பெயர்ப்பு பைபிளிலும் "அவர்(he)" என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளனர்.
கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக்குரிய உடலில் வந்தார், பரலோகத்துக்குரிய உடலில் நீதியுள்ளவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், தேவதூதர்களுக்குக் காணப்பட்டார், மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார், உலக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்டார், மகிமையில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.’
New World translation bible
16 நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு; "மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்
Catholic bible
இவ்வாறு கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்தை தங்கள் விருப்பதற்கு ஏற்றாற் போல் தவறான அர்த்தம் கொடுத்து மொழிப்பெயர்ப்பு செய்து அதை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை வழிக்கெடுத்து வருகின்றனர் என்பதற்கு இந்த வசனம் ஒரு ஆதாரம்.
1 தீமோத்தேயு 3:16 வசனம் கர்த்தர் தான் மனிதனாக வந்தார் என்று சொல்லவில்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
இன்றைய கிறிஸ்தவர்கள் 1 திமோத்தி 3:16 வசனத்தை ஆதாரமாக வைத்து கொண்டு கர்த்தர் மனிதனாக வந்தார் என்று கருத்தை பரப்பி வருகின்றனர். உண்மையில் இந்த வசனம் அவ்வாறு தான் சொல்கிறதா என்று பார்ப்போம்.
இந்த வசனத்தின் கிரேக்க மூல மொழியில் தேவன் மனிதனாக வந்தார் என்று சொல்லப்படாமல், "அவர்" மனிதனாக வந்தார் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. இங்கு "அவர்" என்று இயேசுவை குறித்தே சொல்லப்பட்டுள்ளது.
தேவன் மனிதனாக வந்தார் என்று கிங் ஜேம்ஸ் வெர்ஷன் பைபிள் மட்டுமே அவ்வாறு மாற்றி மொழிப்பெயர்த்துள்ளனர். மற்ற மொழிப்பெயர்ப்பு பைபிளில் "அவர்" மனிதனாக வந்தார் என்று தான் மொழிப்பெயர்த்துள்ளனர். உதாரணத்திற்கு கத்தோலிக்க பைபிளிலும், புதிய உலக மொழிப்பெயர்ப்பு பைபிளிலும் தேவன் என்ற சொல்லுக்கு பதிலாக "அவர்" என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். இதைப்போல ஆங்கில மொழிப்பெயர்ப்பு பைபிளிலும் "அவர்(he)" என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளனர்.
கடவுள்பக்தியின் பரிசுத்த ரகசியம் நிச்சயமாகவே மகத்தானது: ‘அவர் பூமிக்குரிய உடலில் வந்தார், பரலோகத்துக்குரிய உடலில் நீதியுள்ளவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார், தேவதூதர்களுக்குக் காணப்பட்டார், மற்ற தேசத்து மக்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார், உலக மக்களால் நம்பிக்கை வைக்கப்பட்டார், மகிமையில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.’
New World translation bible
16 நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு; "மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்
Catholic bible
இவ்வாறு கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்தை தங்கள் விருப்பதற்கு ஏற்றாற் போல் தவறான அர்த்தம் கொடுத்து மொழிப்பெயர்ப்பு செய்து அதை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை வழிக்கெடுத்து வருகின்றனர் என்பதற்கு இந்த வசனம் ஒரு ஆதாரம்.
1 தீமோத்தேயு 3:16 வசனம் கர்த்தர் தான் மனிதனாக வந்தார் என்று சொல்லவில்லை என்பதை மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக