அல்லாஹ் ஏன் பைபிளை பாதுகாக்கவில்லை?

அல்லாஹ் ஏன் பைபிளை பாதுகாக்கவில்லை?





➡️அல்லாஹ் குர்ஆனில்  முந்தைய வேதங்கள் பற்றி கூறும்போது அவைகள் மனிதர்களால் சிதைக்கப்பட்டு விட்டதாக கூறுகின்றான்.

➡️5:13அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்;. அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர். எனவே நீர் அவர்களை மன்னத்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

➡️5:14அன்றியும் எவர்கள் தங்களை, "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்;. ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்)  பகுதியை மறந்து விட்டார்கள்;. ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்;. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி  அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்.

✍இவ்வாறு முந்தைய வேதங்கள் கறைபடிந்ததாக அல்லாஹ் சொல்லும்போது அல்லாஹ் ஏன் முந்தைய வேதங்களை(பைபிள்) பாதுகாக்கவில்லை என்று கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்புவதை நாம் காண்கிறோம்.

⭐⭐அல்லாஹ் ஏன் முந்தைய வேதங்கள் மனிதர்களால் சிதைக்கப்பட அனுமதித்தான்? ⭐⭐ 

✍ஏனெனில் அல்லாஹ் முந்தைய வேதங்களை பாதுகாக்கும் பொறுப்பை இஸ்ரவேவர்களிடம் கொடுத்து இருந்தான்.  அந்த வேதத்தை கொண்டு தீர்க்கதரிசிகளும் வேத அறிஞர்களும் தீர்ப்பளித்து வந்தனர். ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் தங்களது அத்தகைய கடமையை செய்ய தவறியதோடு வேதத்தில் தங்களது சொந்த கருத்துகளையும் சேர்த்துவிட்டனர். அல்லாஹ்வுடன அவர்கள் செய்த உடன்படிக்கையையும்  முறித்து விட்டனர்.

➡️குர்ஆன் 5:44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்;. இறை பக்தி நிறைந்த மேதை(ரப்பானிய்யூன்)களும், அறிஞர்(அஹ்பார்)களும் - அவர்கள்  அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்;. முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.

✍முந்தைய வேதங்களை பாதுகாக்கும் பொறுப்பு இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்த விசயத்தை பைபிளும் உண்மைப்படுத்துகிறது.

➡️நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி. நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
உபாகமம் 4:2

✍இவ்வாறு இஸ்ரவேலர்கள் தங்களது வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டும் அதை அலட்சியப்படுத்தினர். அதன் விளைவு பைபிளில் மனிதனின் சொந்த கருத்துக்களும், ஆபாசமான வார்த்தைகளும், முரண்பாடான வசனங்களும், முந்தைய தீரக்கதரிசிகள்  அறிந்திராத ஆதிபாவமும் திரித்துவமும்  சிலுவைப்பலியும் நிறைந்ததாகவும் இருக்கிறது.

✍முஹம்மது நபியோடு தீர்க்கதரிசிகளின் வருகை நிறைவு பெறுவதால் இறுதி வேதமான குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் தன்னளவில் வைத்துக் கொண்டான். அதனால்தான் தனது வசனத்தோடு ஒன்றையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது என்று முஸ்லீம்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை.

➡️அல்குர்ஆன் 15:9  நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்