1 கொரிந்தியர் 8:6 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?

⭐⭐1 கொரிந்தியர் 8:6 இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா?⭐⭐




➡️1கொரிந்தியர் 8
6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
But to us there is but one God, the Father, of whom are all things, and we in him; and one Lord Jesus Christ, by whom are all things, and we by him.

✍மேற்கண்ட இந்த வசனம் இயேசுவை இறைவன் என்று சொல்வதற்கு ஆதாரமாக கிறிஸ்தவர்கள் காட்டுகின்றனர். உண்மையில் இந்த வசனம் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா என்று ஆராய்ந்து பார்த்தால் இயேசுவை இறைவன் என்று இந்த வசனம் சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

✍மேற்கண்ட வசனத்தில் "பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு. அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது" என்பதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

✍அடுத்த வாசகமான "இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்" என்பதில் தான் கிறிஸ்தவர்கள் குழம்பி போயுள்ளனர். இதனை பற்றி விரிவாக கீழே காண்போம்.

✍இதனை இரண்டு பகுதிகளாக பிரித்து  பார்க்கலாம்.

1. இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும்நமக்குண்டு.

2.அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்"

🚫🚫இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தர்(Lord):🚫🚫

✍மேற்கண்ட வசனம் தேவன்(God) என்று பிதாவையும், கர்த்தர்(lord) என்று இயேசுவையும் தனித்தனியே அடையாளப்படுத்தி காட்டுகிறது. இந்த வசனத்தில் இயேசுவை கர்த்தர் என்று குறிக்க கிரேக்கத்தில்(greek) "Kyrios" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பழைய ஏற்பாட்டில் இந்த சொல் தாவீதை Lord என்று குறிக்க Kyrios என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர்.

➡️1 kings 1
47. ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலபடுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.
And moreover the king's servants came to bless our lord king David, saying, God make the name of Solomon better than thy name, and make his throne greater than thy throne. And the king bowed himself upon the bed.





➡️ஆதலால் lord என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால் எவரையும் இறைவன் என்று சொல்ல முடியாது என்பதை மேற்கண்ட வசனத்தில் இருந்து பரிந்து கொள்ள முடியும்.

✍சிலுவையில் அறையப்பட்ட(பைபிள் படி) இயேசுவை பிதாவாகிய கர்த்தர்  தான் ஆண்டவராக உண்டாக்கியதாக கீழ்கண்ட வசனம் கூறுவதை பார்க்கலாம்.

➡️Acts 2:
36. ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
Therefore let all the house of Israel know assuredly, that God hath made that same Jesus, whom ye have crucified, both Lord and Christ.

✍இப்படி கர்த்தரால் ஆண்டவர் மற்றம் கிறிஸ்துவாக ஆக்கப்பட்ட இயேசு எப்படி இறைவன் ஆக முடியும் என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

🚫🚫இப்போது இரண்டாவது பாகத்தை பற்றி பார்க்கலாம்.🚫🚫

➡️2. அவர்(இயேசு) மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்":

✍படைப்புகள் அனைத்தும் இயேசுவின் மூலமாகத் தான் கர்த்தரால் படைக்கப்பட்டனர் என்று இந்த வதனத்தை நாம் புரிந்து கொண்டால் அது பைபிளுக்கே முரணாக அமையும். பழைய ஏற்பாட்டில் கர்த்தர் படைப்புகளை பற்றி பேசும்போது இயேசுவின் மூலமாகத்தான் படைக்கப்பட்டதாக எங்கும் சொல்லவில்லை. கர்த்தரே அனைத்தையும் படைத்ததாக பழைய ஏற்பாடு போதிக்கிறது.

➡️ஏசாயா 45:
12. நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷர்களைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

➡️சங்கீதம் 148:
3. சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள்.

➡️4. வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

➡️5. அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

✍மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் கர்த்தர் ஒருவரையே படைப்பாளராக சொல்கின்றன.

✍இந்த வாசகம்(இயேசுவின் மூலம் சகலமும் உண்டாயிற்று என்ற வாசகம்) படைப்புகளை குறித்து பேசவில்லை. மாறாக சபையின் வழிமுறை பற்றியே பேசுகிறது. அதாவது சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவை உட்கொள்ளலாம் என்ற புதிய வழிமுறையை குறித்தே இதற்கு அடுத்தடுத்த வசனங்கள் பேசுகின்றன. திருச்சபைக்கு இந்த வெளிப்பாடு புதியது. இதற்கு முன்பு சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவு உட்கொள்ள தடை இருந்தது குறிப்பிடத்தக்கது.

➡️1 கொரிந்தியர் 1
8. போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.

✍ஆதலால் இந்த வசனம் எந்த வகையிலும் இயேசுவை இறைவன் என்று சொல்வவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்