பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பினாரா???

⭐⭐பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பினாரா???⭐⭐




✍கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் இயேசுவை இறைவன் என்று நம்புகின்றனர். கிறிஸ்தவத்தை உருவாக்கியதில் இயேசுவுக்கு அடுத்து பவுலுக்கு முக்கின பங்கு உண்டு. அப்படிப்பட்ட பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பினாரா என்று பார்த்தால் கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்து இருக்கிறது. பவுல் இயேசுவை இறைவன் என்று நம்பவில்லை என்று அவரது நிருபங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

✍பவுலின் நிரூபங்கள் உட்பட பைபிளின் எந்த எழுத்தாளர்களும் இயேசுவை இறைவன் என்று சொல்லவில்லை.

✍பவுல் தனது நிருபங்களில் என்ன சொல்கிறார் என்பதை கீழே பார்ப்போம்.

✍திமோத்தேயின் முதல் கடிதத்தில் பவுல் பின்வருமாறு எழுதுகிறார்.

✍1 திமோத்தேயு 5:21. நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

✍மேற்கண்ட வசனத்தில் தேவனையும் இயேசுவையும் தனித்தனியே அடையாளப்படுத்துகிறார். இதற்கு அடுத்த அதிகாரத்தலும் இதேப்போன்று வேறுப்பாட்டை பயன்படுத்துகிறார்.

➡️1 திமோத்தேயு 6:14. எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

✍மேலேயுள்ள வசனத்தில் எல்லாவற்றையும் உயிரோடு இருக்க செய்வது கர்த்தர் என்று சொல்வதோடு இயேசுவை சாட்சியாளராக மட்டுமே வேறுப்படுத்தி அடையாளப்படுத்துகிறார். இந்த வசனத்தின் மூலம் பவுல் தேவன் என்று சொல்ல வருவது கர்த்தர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

✍பைபிளில் பல இடங்களில் இயேசு கர்த்தர்(Lord)  என்று அழைக்கப்படுவதால் இயேசுவை இறைவன் என்று நினைக்கின்றனர். இந்த அடையாளப்பெயர் மாஸ்டர் அல்லது ஆசிரியர் ஆகியோருக்கும் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பைபிளில் இந்த வார்த்தை பயன்பாடு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1 பேதுரு 3:6ல் ஆப்ராஹமை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

✍மேலும் பவுல் இறைவன் என்பவர் எப்படிபட்டவர் என்பதையும் தெளிவாக சொல்கிறார்.

➡️1 திமோத்தேயு 6:16. ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

✍1 திமோத்தேயுவில் பவுல் கர்த்தர் மற்றும் இயேசு இருவரையும் பற்றி பேசினாலும்  1 திமோத்தேயு 6:16ல் தேவன் எப்படிபட்டவர் என்று தெளிவுப்படுத்துகிறார். அதாவது ஓருவராகவும், மரணம் இல்லாதவராகவும், மனிதரில் ஒருவரும் பார்க்க முடியாதவராகவும் கர்த்தர் இருக்கிறார் என்று பவுல் சொல்கிறார். ஆனால் இயேசுவோ மரணித்தவராகவும்(பைபிள் படி) மனிதர்களால் காணப்பட்டவராகவும் இருந்தார். அதனால் தான்  பவுல் தனது நிரூபங்களில் கர்த்தரையும் இயேசுவையும் வேறுப்படுத்தி அடையாளப்படுத்துகிறார்.

✍மேலும் இயேசுவை கர்த்தரின் ஊழியக்காரர் என்றே சொல்கிறார்.

➡️அப்போஸ்தலர் 17:31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

✍ஒரு நாளில் கர்த்தர் தான் நியமித்த இயேசு என்னும் மனிதனை கொண்டு நியாயம் தீர்ப்பார் என்று சொல்கிறார். மரித்தோரில் இருந்து எழுந்த இயேசு(பவுலின் கூற்றுப்படி)  நியாயத்தீர்ப்பு செய்தாலும் இயேசுவை மனிதனாகவே பவுல் இங்கு அடையாளப்படுத்துகிறார்.

✍இன்னும் இயேசுவை கர்த்தரின் ஊழியன் என்றே பவுல் சொல்கிறார்.

➡️அப்போஸ்தலர் 3:13 நம் முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள் தன்னுடைய ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தியிருக்கிறார்;

✍மேலும் பவுல் ஒரே தேவன் என்று கர்த்தர் ஒருவரையே அடையாளப்படுத்துகிறார்.

➡️எபேசியர் 4:6. எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

✍இன்னும் பவுல் இறைவன் என்று அடையாளப்படுத்தும் கர்த்தர் ஒருவரிடமே தன்னுடைய வணக்கத்தை காட்டுகிறார்.

➡️ரோமர் 14:11. அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

➡️எபேசியர் 3:15. நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,

✍இயேசு கர்த்தருக்கு கீழ்ப்பட்டு இருப்பார் என்றே பவுல் கூறுகிறார். கர்த்தரும் இயேசுவும் சமம் என்று பவுல் நம்பியிருந்தால் இயேசு கர்த்தருக்கு கீழ்பட்டு இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லையே.

➡️1 கொரிந்தியர் 15:28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

✍மேலேயுள்ள பவுலின் வார்த்தைகளை கொண்டு இயேசுவை இறைவன் என்று பவுல் நம்பவில்லை என்பதையும், கர்த்தர் ஒருவரையே இறைவன் என்று நம்பினார் என்றும் தெளிவாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்