இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பும் முஸ்லீம்கள்
⭐⭐இயேசுவின் இரண்டாம் வருகையை நம்பும் முஸ்லீம்கள்.⭐⭐
✍இந்த உலக வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்கரிய நபராக இயேசு பார்க்கப்படுகின்றார்.
✍கிறிஸ்தவர்கள் இயேசுவை மேசியா என்றும், கர்த்தரின் மகன் என்றும், மனிதர்களை இரட்சிப்பதற்காக கொடுக்கப்பட்ட பலியாகவும் பார்க்கின்றனர்.
✍இயேசு எந்த இனத்தில் இருந்து வந்தாரோ அந்த யூத இனம் இயேசுவை மேசியா இல்லை என்று சொல்கிறது.
✍நாத்திகர்களில் சிலர் இயேசுவை கற்பனை நாயகனாக பார்க்கின்றனர்.
✍இவர்களில் இருந்து வேறுப்பட்ட இயேசுவை முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதாவது இயேசு இஸ்ரவேல் மக்களுக்காக அனுப்பபட்ட மேசியா என்றும் நம்மை படைத்த ஒரே இறைவனின் அடியாராகவும் இயேசு பார்க்கப்படுகிறார்.
✍முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இயேசுவை பற்றி பல விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டாலும் இயேசுவின் இரண்டாம் வருகையை நம்புவதில் ஒன்றுப்படுகின்றனர்.
✍முஸ்லீம்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகயை பார்ப்பதற்கு முன்பு இயேசுவின் மரணம் குறித்தான சர்ச்சையை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
➡️4:157 இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
➡️4:158 ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
✍இயேசு யூதர்கள் மற்றும் ரோமர்களால் கொல்லப்படவில்லை என்றும் சிலுவை மரணத்தில் இருந்து இயேசுவை காப்பாற்றி மேலே உயர்த்தி கொண்டதாகவும் குர்ஆன் சொல்கிறது.
✍மனிதர்களின் பாவத்திற்காக இயேசு பலி கொடுக்கப்பட்டார் என்ற கொள்கையை இஸ்லாம் அருவருப்பாகவே பார்க்கின்றது.
⭐⭐இயேசுவின் இரண்டாம் வருகயை குறித்து முஸ்லீம்களின் நம்பிக்கையை பார்க்கலாம்.⭐⭐
👉இயேசு அல்லாஹ்வின் தூதர் மற்றும் அவரது அடியார்.
👉இயேசுவின் இரண்டாம் வருகை இறுதிகாலத்தின் முன் நடக்கும் சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
👉இயேசு முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட சட்டங்களை பின்பற்றுபவராகவும், அதன் அடிப்படையிலேயே ஆட்சியும் செய்வார்.
👉தன்னை பற்றிய கிறிஸ்தவர்களின் தவறான நம்பிக்கையை தகர்த்து எறிவார்.
👉தஜ்ஜால் என்னும் அந்தி கிறிஸ்துவை அழிப்பார். (ஸஹீஹ் முஸ்லீம் 5553)
👉அனைவரும் முஸ்லீம்களாக இருப்பார்கள். ஆதலால் ஜிஸ்யா வரியை நீக்குவார்.
➡️2222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்
✍நபி இயேசுவை பின்பற்றுபவர்களும் முஹம்மது நபியை பின்பற்றுபவர்களும் இயேசுவின் இரண்டாம் வருகையில் ஒரே அணியாக அதாவது முஸ்லீம்களாக இருப்பார்கள்.
✍இந்த உலக வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்கரிய நபராக இயேசு பார்க்கப்படுகின்றார்.
✍கிறிஸ்தவர்கள் இயேசுவை மேசியா என்றும், கர்த்தரின் மகன் என்றும், மனிதர்களை இரட்சிப்பதற்காக கொடுக்கப்பட்ட பலியாகவும் பார்க்கின்றனர்.
✍இயேசு எந்த இனத்தில் இருந்து வந்தாரோ அந்த யூத இனம் இயேசுவை மேசியா இல்லை என்று சொல்கிறது.
✍நாத்திகர்களில் சிலர் இயேசுவை கற்பனை நாயகனாக பார்க்கின்றனர்.
✍இவர்களில் இருந்து வேறுப்பட்ட இயேசுவை முஸ்லீம்கள் நம்புகின்றனர். அதாவது இயேசு இஸ்ரவேல் மக்களுக்காக அனுப்பபட்ட மேசியா என்றும் நம்மை படைத்த ஒரே இறைவனின் அடியாராகவும் இயேசு பார்க்கப்படுகிறார்.
✍முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இயேசுவை பற்றி பல விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டாலும் இயேசுவின் இரண்டாம் வருகையை நம்புவதில் ஒன்றுப்படுகின்றனர்.
✍முஸ்லீம்கள் நம்பும் இயேசுவின் இரண்டாம் வருகயை பார்ப்பதற்கு முன்பு இயேசுவின் மரணம் குறித்தான சர்ச்சையை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
➡️4:157 இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
➡️4:158 ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
✍இயேசு யூதர்கள் மற்றும் ரோமர்களால் கொல்லப்படவில்லை என்றும் சிலுவை மரணத்தில் இருந்து இயேசுவை காப்பாற்றி மேலே உயர்த்தி கொண்டதாகவும் குர்ஆன் சொல்கிறது.
✍மனிதர்களின் பாவத்திற்காக இயேசு பலி கொடுக்கப்பட்டார் என்ற கொள்கையை இஸ்லாம் அருவருப்பாகவே பார்க்கின்றது.
⭐⭐இயேசுவின் இரண்டாம் வருகயை குறித்து முஸ்லீம்களின் நம்பிக்கையை பார்க்கலாம்.⭐⭐
👉இயேசு அல்லாஹ்வின் தூதர் மற்றும் அவரது அடியார்.
👉இயேசுவின் இரண்டாம் வருகை இறுதிகாலத்தின் முன் நடக்கும் சம்பவமாக பார்க்கப்படுகின்றது.
👉இயேசு முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட சட்டங்களை பின்பற்றுபவராகவும், அதன் அடிப்படையிலேயே ஆட்சியும் செய்வார்.
👉தன்னை பற்றிய கிறிஸ்தவர்களின் தவறான நம்பிக்கையை தகர்த்து எறிவார்.
👉தஜ்ஜால் என்னும் அந்தி கிறிஸ்துவை அழிப்பார். (ஸஹீஹ் முஸ்லீம் 5553)
👉அனைவரும் முஸ்லீம்களாக இருப்பார்கள். ஆதலால் ஜிஸ்யா வரியை நீக்குவார்.
➡️2222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்
✍நபி இயேசுவை பின்பற்றுபவர்களும் முஹம்மது நபியை பின்பற்றுபவர்களும் இயேசுவின் இரண்டாம் வருகையில் ஒரே அணியாக அதாவது முஸ்லீம்களாக இருப்பார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக