இயேசு இறைமகனா??
இயேசு இறைமகனா??
psalms 82
6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
பைபிளில் ஒருவரை தேவன் என்று என்றோ அல்லது தேவனின் மகன் என்று சொல்வதினால் அவரை இறைவன் என்று சொல்ல முடியாது. மேலே குறிப்பிட்ட வசனத்தில் இஸ்ரவேலர்களை தேவர்கள் என்றும் கர்த்தரின் மகன் என்று குறிப்பிட்டுள்ளதில் இருந்து இதனை நாம் புரிந்து கொள்ளலாம். இறைவனின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை மகிமைப்படுத்தும் விதமாகவே இதுப்போன்ற சொல்லாடலை பைபிள் பயன்படுத்துகிறது.
john 3
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16ல் இருந்து யெகோவா தேவன் நம் பாவங்களுக்காக மரிப்பதற்காக பூமியில் இறங்கி வந்தார் என்பதை நிரூபிக்க கிறிஸ்தவர்கள் முயல்கிறார்கள். இயேசு கடவுளுடைய தனித்த மகனாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அவரை கடவுளுக்கு ஒரே மகனாக ஆக்குகிறார்கள். ஆனால் அவர்களின் வேதமோ அவர்களின் இந்த நம்பிக்கைக்கு முரணாக போதிக்கிறது.
எபிரேயர் 11:
17. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
18. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
19. தனக்கு ஒரேபேறான குமாரனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
இன்னும் "ஒரேபேறான குமாரன்" என்னும் சொல் பயன்பாடு ஈசாக்கிற்கு பயன்படுத்தப்பட்டது என்று நாம் காண்கிறோம். ஆனால் ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: இஸ்மவேல், ஈசாக்கு. இஸ்மவேல் ஈசாக்கை விட 13 வயது மூத்தவர். ஆப்ராஹமுக்கு இரண்டு மகன்கள் இருக்கும்போது பைபிள் ஒரே போறான குமாரன் என்று ஈசாக்கை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மக்களை மகிமைப்படுத்த இதைப் போன்ற வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. அவ்வாறே இந்த வசனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பலியாக கடவுளுக்கு ஈசாக்கை(பைபிள்படி) மகிமைப்படுத்துகிறது.
ஆகையால், யோவான் 3:16 ல் இயேசு கடவுளின் "ஒரேபேறான குமாரன்" என்று சொல்லப்பட்டதன் நோக்கம் மற்ற இஸ்ரவேலர்களில் இருந்து இறைவனின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பதற்கே தவிர இயேசு கடவுளின் ஒரே மகன் என்ற அர்த்தத்திலோ அல்லது இயேசு இறைவன் என்ற அர்த்தத்திலோ பயன்படுத்தப்படவில்லை.
யாத்திராகமம் 4
22. அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
இங்கே இஸ்ரவேல் மக்கள் கர்த்தரால் "குமாரன்" என்று மட்டுமல்ல, அவருடைய சேஷ்டப்புத்திரன்(முதல் மகன்) என்றும் அழைக்கப்படுகிறார்கள்!! இது இஸ்ரவேல் மக்கள் யெகோவா என்று அர்த்தமா? நாம் இஸ்ரவேலரை யெகோவா அல்லது கடவுளாக வணங்க வேண்டும் என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை !!!
சங்கீதம் 2
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை(தாவீது) நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.
மேலேயுள்ள இந்த வசனத்தில் கர்த்தர் தாவீதை நோக்கி தனது மகன் மற்றும் begotten son என்றும் சொல்கிறார். இதனால் தாவீது இறைவனாகி விட முடியுமா? நிச்சயமாக முடியாது.
மேலேயுள்ள வசனங்களில் இருந்து இயேசு கர்த்தரின் மகன் என்று அழைக்கப்படுவதன் நோக்கம் அவர் கர்த்தருடைய பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதே அதாவது இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தருடைய தூதனாக இருந்தது தான் என்பதை புரிந்து கொள்ளலாம்.
psalms 82
6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
பைபிளில் ஒருவரை தேவன் என்று என்றோ அல்லது தேவனின் மகன் என்று சொல்வதினால் அவரை இறைவன் என்று சொல்ல முடியாது. மேலே குறிப்பிட்ட வசனத்தில் இஸ்ரவேலர்களை தேவர்கள் என்றும் கர்த்தரின் மகன் என்று குறிப்பிட்டுள்ளதில் இருந்து இதனை நாம் புரிந்து கொள்ளலாம். இறைவனின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை மகிமைப்படுத்தும் விதமாகவே இதுப்போன்ற சொல்லாடலை பைபிள் பயன்படுத்துகிறது.
john 3
16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16ல் இருந்து யெகோவா தேவன் நம் பாவங்களுக்காக மரிப்பதற்காக பூமியில் இறங்கி வந்தார் என்பதை நிரூபிக்க கிறிஸ்தவர்கள் முயல்கிறார்கள். இயேசு கடவுளுடைய தனித்த மகனாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அவரை கடவுளுக்கு ஒரே மகனாக ஆக்குகிறார்கள். ஆனால் அவர்களின் வேதமோ அவர்களின் இந்த நம்பிக்கைக்கு முரணாக போதிக்கிறது.
எபிரேயர் 11:
17. மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது, ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்
18. ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி,
19. தனக்கு ஒரேபேறான குமாரனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
இன்னும் "ஒரேபேறான குமாரன்" என்னும் சொல் பயன்பாடு ஈசாக்கிற்கு பயன்படுத்தப்பட்டது என்று நாம் காண்கிறோம். ஆனால் ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்: இஸ்மவேல், ஈசாக்கு. இஸ்மவேல் ஈசாக்கை விட 13 வயது மூத்தவர். ஆப்ராஹமுக்கு இரண்டு மகன்கள் இருக்கும்போது பைபிள் ஒரே போறான குமாரன் என்று ஈசாக்கை அடையாளப்படுத்துகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மக்களை மகிமைப்படுத்த இதைப் போன்ற வார்த்தைகளை பைபிள் பயன்படுத்துகிறது. அவ்வாறே இந்த வசனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பலியாக கடவுளுக்கு ஈசாக்கை(பைபிள்படி) மகிமைப்படுத்துகிறது.
ஆகையால், யோவான் 3:16 ல் இயேசு கடவுளின் "ஒரேபேறான குமாரன்" என்று சொல்லப்பட்டதன் நோக்கம் மற்ற இஸ்ரவேலர்களில் இருந்து இறைவனின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பதற்கே தவிர இயேசு கடவுளின் ஒரே மகன் என்ற அர்த்தத்திலோ அல்லது இயேசு இறைவன் என்ற அர்த்தத்திலோ பயன்படுத்தப்படவில்லை.
யாத்திராகமம் 4
22. அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
இங்கே இஸ்ரவேல் மக்கள் கர்த்தரால் "குமாரன்" என்று மட்டுமல்ல, அவருடைய சேஷ்டப்புத்திரன்(முதல் மகன்) என்றும் அழைக்கப்படுகிறார்கள்!! இது இஸ்ரவேல் மக்கள் யெகோவா என்று அர்த்தமா? நாம் இஸ்ரவேலரை யெகோவா அல்லது கடவுளாக வணங்க வேண்டும் என்று அர்த்தமா? நிச்சயமாக இல்லை !!!
சங்கீதம் 2
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை(தாவீது) நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
I will declare the decree: the LORD hath said unto me, Thou art my Son; this day have I begotten thee.
மேலேயுள்ள இந்த வசனத்தில் கர்த்தர் தாவீதை நோக்கி தனது மகன் மற்றும் begotten son என்றும் சொல்கிறார். இதனால் தாவீது இறைவனாகி விட முடியுமா? நிச்சயமாக முடியாது.
மேலேயுள்ள வசனங்களில் இருந்து இயேசு கர்த்தரின் மகன் என்று அழைக்கப்படுவதன் நோக்கம் அவர் கர்த்தருடைய பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதே அதாவது இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தருடைய தூதனாக இருந்தது தான் என்பதை புரிந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக