அல்லாஹ் மிக்க அன்புடையவன்


அல்லாஹ்  மிக்க அன்புடையவன்

(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையவனாகவும் இருக்கின்றேன்."
குர்ஆன் 15:49




சர்வவல்லமையுள்ள அல்லாஹ் அவனுடைய படைப்புகளிடத்தில் அன்பும் இரக்கமும் நிறைந்தவன். இந்த உலகில் உள்ள எல்லா அருட்கொடைகளும், நன்மையும், அவனுடைய இரக்கத்தின் தெளிவான சான்றுகளாக இருக்கின்றன. உண்மையில், நம்முடைய தாய்மார்களை விட அல்லாஹ்  நம்மீது மிகுந்த இரக்கமுள்ளவன் என்றே இஸ்லாம் போதிக்கின்றது.

5999. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்


இந்த உலகில் உயிரினங்களுக்கிடையே காணப்படுகின்ற அன்பு என்பதாவது  அல்லாஹ்வினிடத்தில் உள்ள அன்பின் ஒரு சதவீதம் மட்டுமே.  இந்த அன்பின் காரணமாகவே தாய் தன் பிள்ளையின் மீதும், கணவனும் மனைவியும், நண்பர்களும் தங்களுக்குள் அன்பை பரிமாறி கொள்கின்றனர்.

6000. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்


அல்லாஹ்வுடைய இரக்கத்திலிருந்தே, நாம் துடிக்கின்ற இதயங்களையும் , காணுகின்ற கண்களையும்  கேட்கும் காதுகளையும், சுவைக்கும் நாவையும், சிந்திக்கும் அறிவையும் நாம் பெற்றோம். அல்லாஹ்வுடைய இரக்கத்தில் இருந்தே நாம் உயிர் பெற்றோம். நாம் முன்பு அவரிடம் இருந்து ஒருபோதும் இதனை கேட்டதில்லை.


என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது
குர்ஆன் 7:156


இந்த உலகில் உள்ள எல்லா அருட்கொடைகளும், நன்மையும், அல்லாஹ்வின் இரக்கத்தின் வெளிப்பாடுகளே என்பதை நாம் மறந்து விடக்கூடாது.


பாவங்களை மன்னிப்பதும் அல்லாஹ்வின்  கருணைக்கு மற்றொரு உதாரணம். ஏனென்றால் மனிதர்கள் பூரணத்துவம் பெற்றவர்கள் அல்ல, அவர்கள் தவறு செய்யக் கூடியவர்கள் தான் என்பதை அல்லாஹ் அறிந்திருக்கின்றான். பாவம் செய்த அடியார்கள் தனது அருளின் மீது நிராசை அடைந்து விட வேண்டாம் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கின்றான்.

"என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்" (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
குர்ஆன் 39:53

இன்னும் எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக தமது பாவங்களுக்காக மன்னிப்பு தேடி, அந்த பாவத்தில் இருந்து விலகி நற்செயல்கள் செய்து வருகிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவராக இருக்கின்றான்.

"எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்" (என்று கூறினோம்).
குர்ஆன் 20:82


நிச்சயமாக அல்லாஹ் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கின்றான். அவனுடைய இரக்கம் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான்

இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை  நீங்கள் எண்ண முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
குர்ஆன் 16:18

இந்த உலகில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நாம் கணக்கிட முடியாது அளவுக்கு எண்ணற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்