குர்ஆன் இறைவேதமே ➖ ஒரு பார்வை

குர்ஆன் இறைவேதமே ✍ஒரு புத்தகம் எழுதப்பட்ட காலத்தின் பின்னணியோடு அதனை நோக்கும்போது அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். இது வேதங்களுக்கும் பொருந்தும். குர்ஆன் இறக்கப்பட்ட பின்னணியோடு அதில் சொல்லப்பட்ட செய்திகளை ஆராய்ந்தால் அது ஒரு இறை வேதம் தான் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும். 💎பிரபஞ்ச விரிவாக்கம்💎 ✍குர்ஆன் இறக்கப்பட்ட 23 ஆண்டு காலத்தில் குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகளை கண்டறியும் எந்த சூழ்நிலையையும் உபகரணங்களையும் முஹம்மது நபி கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு குர்ஆன் கூறும் இப்பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மையை சொல்லலாம். ⭐மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். (அல்குர்ஆன் 51:47) ✍17ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக தான் இந்த பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மை கண்டறியப்பட்டது. இந்த உண்மை எந்த ஒரு அறிவியல் உபகரணமும் இல்லாமல் படிப்பறிவில்லாத ஒருவரால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று. குர்ஆனில் சொல்லப்படும் இந்த அறிவியல் உண்மை முஹம்மது நபி இறைவனிடமிருந்து தான் இந்த வே...