இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குர்ஆன் இறைவேதமே ➖ ஒரு பார்வை

படம்
குர்ஆன் இறைவேதமே  ✍ஒரு புத்தகம் எழுதப்பட்ட காலத்தின் பின்னணியோடு அதனை நோக்கும்போது அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். இது வேதங்களுக்கும் பொருந்தும். குர்ஆன் இறக்கப்பட்ட பின்னணியோடு அதில் சொல்லப்பட்ட செய்திகளை ஆராய்ந்தால் அது ஒரு இறை வேதம் தான் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும். 💎பிரபஞ்ச விரிவாக்கம்💎 ✍குர்ஆன் இறக்கப்பட்ட 23 ஆண்டு காலத்தில் குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகளை கண்டறியும் எந்த சூழ்நிலையையும் உபகரணங்களையும் முஹம்மது நபி கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு குர்ஆன் கூறும் இப்பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மையை சொல்லலாம். ⭐மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். (அல்குர்ஆன் 51:47) ✍17ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக தான் இந்த பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மை கண்டறியப்பட்டது. இந்த உண்மை எந்த ஒரு அறிவியல் உபகரணமும் இல்லாமல் படிப்பறிவில்லாத ஒருவரால்  கண்டுபிடிக்க  முடியாத ஒன்று. குர்ஆனில் சொல்லப்படும் இந்த அறிவியல் உண்மை முஹம்மது நபி இறைவனிடமிருந்து தான் இந்த வே...

ஸ்காட்லாந்து சர்ச் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து புதிய சட்டத்தை கொண்டு வந்தது

படம்
ஸ்காட்லாந்து சர்ச் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து புதிய சட்டத்தை கொண்டு வந்தது ஸ்காட்லாந்து சர்ச் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஆதரித்து புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஸ்காட்லாந்து கிறிஸ்தவ அரசாங்கம் ஓரினச் சேர்க்கை திருமணத்தை ஆதரித்து சட்டம் கொண்டு வந்த போதிலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகே ஸ்காட்லாந்து சர்ச் இந்த திருமணத்தை ஆதரித்து சட்டத்தை இயற்றியுள்ளது. உலக மக்களை திருப்திபடுத்த கர்த்தரின் கட்டளைக்கு மாறு செய்ய கிறிஸ்தவ சபை முடிவு செய்துவிட்டது. பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது. (லேவியராகமம் 18:22) கிறிஸ்தவர்களுக்கு இது ஒன்றும் புதிது அல்ல. கர்த்தர் வெறுக்கின்ற ஒன்றை மக்களை திருப்திபடுத்துவதற்காக அதனை ஆதரித்து மக்களுக்கு தவறாக போதிப்பது என்பது கிறிஸ்தவர்களுக்கு பொறுத்தவரை வழக்கமான ஒன்று தான். இதுப்போன்று தான் மூன்றாம் நூற்றாண்டில் கர்த்தரும் இயேசுவும் போதிக்காத திரித்துவத்தை  ஆதரித்து சபையில் தீர்மானத்தை கொண்டு வந்து மக்களிடம் அதை போதிக்க ஆரம்பித்தனர். திரித்துவத்திற்கான ஆதாரம் எதிலும் இல்லாத போதிலும் கிறிஸ்தவ சபைகள்...

முஸ்லீம்களின் பாவத்தை யூதக் கிறிஸ்தவர்கள் சுமப்பார்களா?

படம்
முஸ்லீம்களின் பாவத்தை யூதக் கிறிஸ்தவர்கள் சுமப்பார்களா? ☞5344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்.இவ்வாறே நான் கருதுகிறேன். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூரவ்ஹ் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள், "இவ்வாறே நான் கருதுகிறேன் எனும் ஐயப்பாட்டைத் தெரிவித்த அறிவிப்பாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்கள். அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற (அவர்களுடைய புதல்வரான) அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தா உம்முடைய தந்தை அறிவித்துள்ளார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "ஆம்" என்றேன். ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 49. பாவமீட்சி 🌟🌟இந்த ஹதிஸ் பற்றி ஆராய்வோம்.🌟🌟 ✍ஒரு ஹதிஸ் மற்றொரு ஹதிஸ...

இந்து மதம்: இறைவன் ஒருவனே

படம்
இந்து மதம்: இறைவன் ஒருவனே சிவன் தான் உயர்ந்த கடவுள் என்றும் அவரே அனைத்தையும் படைத்தார் என்றும் சைவர்கள் நம்புகின்றனர். விஷ்ணு தான் உயர்ந்த கடவுள் என்றும் அவரே அனைத்தையும் படைத்தார் என்று வைணவர்கள் நம்புகின்றனர். இருவருமே தங்கள் நம்பிக்கைக்கான ஆதாரத்தை இந்து மத வேதங்களில் இருந்தே கொடுக்கின்றனர்.  சைவர்கள் தங்கள் வேதத்தில் குளறுபடிகளை செய்துவிட்டனர். அதனால் சிவன் தான் உயர்ந்த கடவுள் என்பதை ஏற்க முடியாது என்று வைணவர்களும், வைணவர்கள் தங்கள் வேதத்தில் குளறுபடிகளை செய்துவிட்டார்கள் என்றும் அதனால் விஷ்ணுவை உயர்ந்த கடவுள் என்று ஏற்க முடியாது என்று சொல்லி சைவர்களும் சொல்கின்றனர்.  உண்மையில் இந்து மத வேதங்கள் கறைப்படுத்தப்பட்டு விட்டன என்பதற்கு இவர்களே சாட்சியாளர்களாக உள்ளனர். சைவர்களின் வேதங்களை வைணவர்கள் மறுப்பதும், வைணவர்களின் வேதங்களை சைவர்கள் மறுப்பதும் இந்துக்களது வேதங்கள் கறைப்பட்டு விட்டன  என்பதை உறுதிப்படுத்துகிறது. ரிக் வேதம் 7.40.5 கூறுகிறது 'ருத்திரர் தனக்கு தேவையான சக்தியை  விஷ்ணுவிடமிருந்து பெறுகிறார் என்று. விஷ்ணுவின் கருணையா...

அலை அலையாய் மக்கள் இஸ்லாத்தை நோக்கி

படம்
அலை அலையாய் மக்கள் இஸ்லாத்தை நோக்கி   2018இன் கடந்த 5 மாதங்களில் மட்டும் ஏறத்தாழ வெளிநாட்டில் இருந்து குடியேறிய 3000 நபர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டுள்ளனர் என்று ஓமன் நாட்டின்  மத விவகாரத்துறை அமைச்சர் ஓமன் டைம்ஸ் என்ற பத்திரிக்கைக்கு  பேட்டியளித்துள்ளார். மதம் மாறியவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவார்கள். ஓமன் அமைச்சகம் "குர்ஆன் உங்களிடம் பேசுகிறது" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கில்  புதிதாக இஸ்லாத்தை ஏற்ற இரண்டு நபர்கள் இஸ்லாத்தை நோக்கிய தங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் 800 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கத்தின் இறுதியில் 26பேர் இஸ்லாத்தை ஏற்று கொண்டனர். சென்ற வருடம் நடந்த நிகழ்வில்  72 பேர் இஸ்லாத்தை ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதம் மாறியவர்களில் பெரும்பாலோர் மீடியாக்களில் பரப்பப்படும் இஸ்லாம் பற்றிய அவதூறான நம்பிக்கையுடன் ஓமன் வந்தவர்கள் என்றும்,  பின்பு உண்மை இஸ்லாத்தை கண்டு வியந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட...

முஹம்மது நபி இறைத் தூதர் என்பதற்கான ஆதாரங்கள்

படம்
💎💎முஹம்மது நபி இறைத் தூதர் என்பதற்கான ஆதாரங்கள் 💎 💎 💎 முந்தைய தீர்க்கதரிசிகள் கொண்டு வந்த ஒரே இறை கொள்கையை உண்மைப்படுத்தியது 💎 ✍முஹம்மது நபியின் தூதுத்துவம் முந்தைய தீர்க்கதரிசிகள் கொண்டு வந்த அந்த ஏக இறைவனை உண்மைப்படுத்தியதோடு அந்த ஒரே இறைவனையே வணங்கும்படி செய்தது. முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட இறுதி வேதமான குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தியது. ➡️இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (உபகாரம் 6:4) ➡️(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (அல்குர்ஆன் 112:1) ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ 💎 முந்தைய வேதங்களில் முஹம்மது நபியின் வருகையை குறித்து சொல்லப்பட்டுள்ளது💎  ✍இயேசுவின் வருகையை குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருந்தாலும் எவ்வாறு யூதர்கள் அந்த வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து இயேசுவை இறைத்தூதர் என்று நம்பவில்லையோ அவ்வாறே பைபிளில் முஹம்மது நபியின் வருகையை குறித்து சொல்லப்பட்டு இருந்தாலும் அந்த வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து யூத கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியை நம்ப மறுக்கின்றனர். ✍முஹம்மது நபிய...

கிறிஸ்தவர்களே..... உங்கள் இரட்சிப்பு முஹம்மது நபியை பின்பற்றுவதன் மூலமே...

படம்
கிறிஸ்தவர்களே..... உங்கள் இரட்சிப்பு முஹம்மது நபியை பின்பற்றுவதன் மூலமே... திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல்குர்ஆன் 95:4) சக ஜீவராசிகளுக்கு மத்தியில் தனித்து தெரிபவன் மனிதன். தனது அறிவாற்றலால் தனித்து நிற்கும் மனிதனை அழகிய படைப்பாக  அல்லாஹ் படைத்துள்ளான். நன்மையும் தீமையையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்ட மனிதன் தனது எண்ணங்கள் மற்றும் செயல்களை கொண்டு அல்லாஹ்வின் பக்கம்  நெருங்குகின்றான். இறுதியில் அல்லாஹ்வின் அன்பை ஒருவன் பெற்றுவிட்டால் அவன் அனைவராலும் நேசிக்க கூடியவனாக மாறுகின்றான். 7485. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல்(அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்தில் 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப...

இயேசு கர்த்தரின் மனித ரூபமா?

படம்
இயேசு கர்த்தரின் மனித ரூபமா? பைபிளில் திரித்துவத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தடுமாறும் கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை நிலைநிறுத்த பைபிள் வசனங்களை திரித்து விளக்கம் அளிப்பது என்பது வாடிக்கையான ஒன்று தான். கிறிஸ்தவர்களின் இந்த கட்டுக் கதைகள் அவர்களுக்கு ஒரு நன்மையும் தரப் போவதில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. பைபிளை பல மதத்தவர்களும் படிக்கின்றனர். அதனால் கிறிஸ்தவர்களின் ஏமாற்று வேலைகள் யாரிடமும் பலிக்காது என்பதை கிறிஸ்தவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தாங்கள் நம்பும் திரித்துவத்தை நிலைநிறுத்த கர்த்தரின் மனித ரூபம் தான் இயேசு என்று பைபிள் வசனத்தை திரித்து கூறுகின்றனர்.  இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்தவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.  எபிரேயர் 1:3 இயேசு கர்த்தரின் மனித ரூபம் என்றால் அது ஆதி முதலே சுயமாக இருந்து இருக்க வேண்டும். ஆனால் கர்த்தர் அந்த மகி...
படம்
அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி இந்த உலகம் அறியாமை எனும் இருளில் மூழ்கி கிடந்த போது, உண்மையான ஏக இறைவனை வணங்காமல் சிலை வணக்கம் செய்து தங்கள் மறுமை வாழ்க்கையை மக்கள் இழந்து கொண்டிருந்த போது  மக்கள், உயர்வு தாழ்வு கற்பித்து தீண்டாமையில் உலகம் மனிதனை மனிதன் அடிமைப்படித்தி கொண்டிருந்த போது மனிதர்களுக்கு நேர்வழி காட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வினால்  முஹம்மது நபி அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் அருளாகவும், நபியாகவும் அனுப்பப்பட்டார். (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107) முஹம்மது நபி அவர்கள் நேர்வழி காட்டும் அருளாக உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டவர் என்பதை அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாக சொல்கிறான். முஹம்மது நபி அவர்கள் தனது எதிரிகளிடத்திலும் இரக்கம் காட்டுபவராகவே நடந்துள்ளார். நபியின் தோழர்கள் காபிர்களை சபிக்க முஹம்மது நபியிடம் கேட்டபோது "நான் சபிப்பதற்காக அனுப்பப்படவில்லை, அருளாக தான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறி தனது எதிரிகளை சபிக்கவோ அல்லது அவர்களுக்...

முஹம்மது நபியவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை இல்லறத்திற்கு கட்டாயப்படுத்தினாரா?

படம்
முஹம்மது நபியவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை இல்லறத்திற்கு கட்டாயப்படுத்தினாரா? திரித்துவத்திற்கு ஆதாரம் தேடி பைபிள் வசனத்துக்கு பொய்யான விளக்கம் சொல்லி அலையும் கிறிஸ்தவர்கள், இப்போது இஸ்லாத்தில் சொல்லப்பட்ட விசயங்களை தவறான விளக்கம் கொடுத்து திரித்து இஸ்லாத்தை விமர்சிக்கின்றனர். இவர்களது நோக்கம் உண்மையில் சத்தியத்தை அறிந்து அதன் பக்கம் மற்றவர்களை அழைப்பது அல்ல, மாறாக சத்தியத்தை அறிந்து அதனை விட்டும் மக்களை திசை திருப்புவது ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். அதன் ஒரு பகுதியாக நபியை பெண் மோகம் கொண்டவராக சித்தரிக்கும் வேலையில் ஒரு ஹதிஸை எடுத்து அதற்கான விளக்கத்தை திரித்து கூறி மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த ஹதில்: 5255. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி(ஸ...

யோவான் 14:9 இயேசுவை கர்த்தர் என்று சொல்கிறதா?

படம்
💎💎 யோவான் 14:9 இயேசுவை கர்த்தர் என்று சொல்கிறதா? 💎💎 ⭐யோவான் 14 8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 🌟9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? ✍கிறிஸ்தவர்கள் மேற்கண்ட வசனங்களை காட்டி இயேசுவை இறைவன் என்று கூறுகின்றனர். உண்மையில் இந்த வசனங்கள் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா என்று ஆராயலாம். ✍மேற்கண்ட வசனத்தில் இருந்து கர்த்தரும் இயேசுவும் ஒரே நபர் தான் என்று சொல்வது திரித்துவ நம்பிக்கைக்கே விரோதமாக அமையும். ஏனெனில் திரித்துவ நம்பிக்கைப்படி பிதாவும் இயேசுவும் பரிசுத்த ஆவியும்  தனித்தனி நபர்கள் என்பதே. ஒரு நாட்டின் தூதருடன் செய்யப்படும் உடன்படிக்கை  அந்த நாட்டுடன் செய்யும் உடன்படிக்கையாகவே  பார்க்கப்படுகிறது. அவ்வாறே மேற்கண்ட  வசனமும் இயேசுவை கண்டால் கர்த்தரை கண்டதாக சொல்வது என்பது ஆன்மீக அடிப்படையில்  சொல்லப்பட...

பத்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மஸ்ஜித்

படம்
பத்து ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட மஸ்ஜித் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால்..... இந்த உலகில் மிக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதங்களில் ஒன்று இஸ்லாம். இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான பிரச்சாரம் திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லீம்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் என்றாலும்  இந்த பிரச்சாரங்கள் முஸ்லீம் அல்லாதவர்களை இஸ்லாத்தினை பற்றி அறியும் ஆவலை தூண்டியும் விடுகிறது என்பதை மறுக்க முடியாது. இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் சில சமயங்களில் முஸ்லீம் விரோத மனப்பாங்கு உள்ளவர்களையும்  முஸ்லீம்களுக்கு நண்பர்களாக்கி விடுகிறது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றைத் தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம். பிரிட்டனில் உள்ள லிங்கான்(lincoln) என்று பகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பல எதிர்ப்புகளையும் மீறி முதல்  மஸ்ஜித் திறக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டுமானத்திற்கான தொடக்கத்தில் எதிர்த்தவர்களில் லான் டர்ரண்டும் ஒருவர். லான் டர்ரண்டு ஒரு முன்னாள் இராணுவ வீரர். தனது வீட்டில் பிரிட்டன் மற்றும் செயின்ட் ஜார்ஜின் சிலுவை கொடியை பறக்க விடும் அ...

இயேசு கர்த்தருக்கு சமமானவரா?

படம்
இயேசு கர்த்தருக்கு சமமானவரா? ✍அசத்தியத்தை எத்தனை தான் அழகாக காட்டினாலும் அது அசத்தியம் என்பதற்கான ஆதாரத்தை தாங்கி கொண்டு தான் இருக்கும்.  அதுப்போல தான் இயேசுவை இறைவன் என்று கிறிஸ்தவர்கள் எத்துனை அழகாக காட்டினாலும், பைபிளை முழுமையாக படிக்கும் எவரும் இயேசுவை இறைவன் என்று சொல்ல மாட்டார்கள். இயேசுவை கர்த்தரின் ஊழியக்காரர் என்றே சொல்வார்கள்.  அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம் வாருங்கள். ✍இறைவனது அறிவாற்றல் எல்லையற்றது. பிறரிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய தேவையற்றவனாக இறைவன் இருக்கின்றான் என்பதை நமது அறிவு நமக்கு சொல்லும் விசயம். இதை பைபிளும் சொல்கிறது. 💎நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. (சங்கீதம் 147:5) ✍பழைய ஏற்பாடு கர்த்தரின் அறிவு அளவற்றது என்று கூறுகிறது. ஆம் அது உண்மைதான். நாமெல்லாரும் அறிவை இறைவனிடமிருந்து தான் பெற்றுள்ளோம். ஆனால் நம் இறைவன் அறிவோ அளவற்றது. இத்தகைய அளவற்ற அறிவுள்ள கர்த்தருக்கு சமமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் இயேசு எப்படிப்பட்டவர்? அவரது அறிவு கர்த்தருக்கு இணையானதா என்று ஆ...

இயேசு: நான் அவர்தான்

படம்
இயேசு: நான் அவர்தான்  எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால்.... எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளும் போது தான் அதன் உண்மை தன்மைமை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒரு வேதம் என்றால் அதனை முழுமையாக படித்த பிறகே அது சொல்ல வரும் விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள முடியும். ஒரு உரையாடல் என்றாலும் அதனை முழுமையாக கேட்கும்போது தான் அதனை சரிவர புரிந்து கொள்ள முடியும். இதுதான் இயற்கையான விதி. இயேசுவின் உரையாடலில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகளை(வசனங்களை) எடுத்து கொண்டு அவரை இறைவன் என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவர்கள் இயேசுவை சாதாரண மனிதனாக காட்டும் அவரது  உரையாடலில் உள்ள மறுபகுதியை மறைக்க பார்க்கின்றனர். உண்மையை மறைத்து இயேசுவை இறைவனாக்க பார்க்கின்றனர். இந்த விசயத்தில் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். உண்மையை என்ன தான் மறைக்க பார்த்தாலும் அது வெளிவரவே செய்யும். பழைய ஏற்பாட்டில் கர்த்தரை இறைவன் என்று தெள்ளத்தெளிவாக சொல்வது போல் இயேசுவை இறைவன் என்று சொல்லும் ஒரு வசனமும் இல்லை. ஆயினும் சில வசனங்களை திரித்து இயேசுவை இறைவனாக சித்தரிக்க கிறிஸ்தவ...

இஸ்லாம் ஒரு அழகிய வாழ்க்கை நெறி

படம்
இஸ்லாம் ஒரு அழகிய வாழ்க்கை நெறி ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பகுதியில்  இருந்து நான் வருகிறேன். இஸ்லாம் பற்றி நான் அறிந்தவள் அல்ல. நான் இஸ்லாத்தை பற்றி அடக்குமுறை செய்யும் மதமாகவே அறிந்து இருந்தேன். நான் மலேசியா செல்லும் வரை இல்லாமை பற்றி இந்த எண்ணமே என்னில் இருந்தது. அங்கு சென்ற பிறகு நான் நினைத்திராத வகையில் அல்லாஹ் என்னை வழிநடத்தினான். மேற்குலகம் தங்கள் நாட்டு பெண்களுக்கு கொடுத்த உரிமையை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் முஸ்லீம் பெண்களுக்கு கொடுத்திருந்ததை அறிந்தேன்.  மரினா மஹாதீர் போன்ற ஆளுமை வாய்ந்த பெண்களின் சந்திப்பு இஸ்லாம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள உதவியது. என் வாழ்க்கையை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைக்க முடியும் என்று நம்பினேன். இஸ்லாத்திற்கு திரும்பினேன். அல்ஹம்துலில்லாஹ்.. ஒரே இறைவனான அல்லாஹ்வை ஒவ்வொரு நாளும் வணங்கும் அழகிய வாழ்க்கை முறையே இஸ்லாம். ஏன் பெண்கள் தங்கள் அழகை மறைத்து கொள்ள வேண்டும் என்பதை குறித்து முஸ்லீம் மற்றும் முஸ்லிமல்லாத பலரிடம் இது குறித்து பேசியிருந்தேன். எனக்கு இஸ்லாம் பற்றிய அறிமுகம் செய்த இமாம் மற்றும் அவரது மனைவ...

பவுல் சொல்கிறார்: பழைய ஏற்பாடு சட்டங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது

படம்
பவுல் சொல்கிறார்: பழைய ஏற்பாடு  சட்டங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது  ✍அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட முந்தைய வேதமான பைபிள் இஸ்ரவேலர்களால் கறைப்பட்டு விட்டது என்று முஸ்லீம்கள் ஆரம்பம் முதல் சொல்லி வருகின்றனர். இதனை மறுத்து வரும் கிறிஸ்தவர்கள் உண்மையில் அவர்கள் பைபிளை பற்றிய முழுமையான அறிவு இல்லாததையே காட்டுகிறது. ஏனெனில் இயேசுவுக்கு அடுத்து அவர்கள் மதிக்கும் மக முக்கிய நபரும் கிறிஸ்தவத்தின் ஸ்தாபகருமான பவுலே பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும், அந்த கட்டளைகள் "சுய இஷ்டமான ஆராதனை" என்று சொல்லி பைபிளில் மனித கரங்கள் ஊடுருவி உள்ளதை உறுதிப்படுத்துகிறார். ➡️21. மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? கொலோசெயர் 2 ✍பவுலுடைய காலத்தில் இஸ்ரவேலர்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நியாயப்பிராமணத்தின் படி சில உணவுகளை உண்டும்,  சில உணவுகளை தடுத்து கொண்டு சாப்பிடாமல் இருந்து வந்தனர். யூதர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட சட்டங்களை பின்...

கிறிஸ்தவர்களுக்கான அழைப்பு

படம்
💎 கிறிஸ்தவர்களுக்கான அழைப்பு 💎 ✍அல்லாஹ் மனிதர்களை படைத்து  அவர்களுக்கு நேர் வழி காட்ட வேதங்களை கொடுத்தான். சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தி காட்டுவதாக  வேதம் உள்ளது. மனிதர்களுக்கு வேதத்தை   விளக்கப்படுத்த மனிதர்களிலிருந்தே தனது தூதர்களையும் தேர்ந்தெடுத்து அல்லாஹ் அனுப்பினான். இறைத்தூதர்கள் மனிதர்களுக்கு சத்தியத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கவும் அசத்தியத்தை குறித்து தெளிவான எச்சரிக்கையையும் கொடுத்தனர். சத்தியத்தையும் அசத்தியத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அல்லாஹ் மனிதர்களுக்கு கொடுத்துள்ளான். 💎(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) ம...

இஸ்லாத்தின் பார்வையில் இயேசு

படம்
இஸ்லாத்தின் பார்வையில் இயேசு ☞வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய  ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன்  அல்லாஹ் ஒருவன் தான்;.  அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 4:171 ✍இயேசு அல்லாஹ்வின புறத்தில் இருந்து வந்த வார்த்தை என்று இங்கு குறிப்பிடப்படுகிறது. ...