இயேசு கர்த்தரின் மனித ரூபமா?
இயேசு கர்த்தரின் மனித ரூபமா?
பைபிளில் திரித்துவத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தடுமாறும் கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையை நிலைநிறுத்த பைபிள் வசனங்களை திரித்து விளக்கம் அளிப்பது என்பது வாடிக்கையான ஒன்று தான். கிறிஸ்தவர்களின் இந்த கட்டுக் கதைகள் அவர்களுக்கு ஒரு நன்மையும் தரப் போவதில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. பைபிளை பல மதத்தவர்களும் படிக்கின்றனர். அதனால் கிறிஸ்தவர்களின் ஏமாற்று வேலைகள் யாரிடமும் பலிக்காது என்பதை கிறிஸ்தவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தாங்கள் நம்பும் திரித்துவத்தை நிலைநிறுத்த கர்த்தரின் மனித ரூபம் தான் இயேசு என்று பைபிள் வசனத்தை திரித்து கூறுகின்றனர்.
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்தவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். எபிரேயர் 1:3
இயேசு கர்த்தரின் மனித ரூபம் என்றால் அது ஆதி முதலே சுயமாக இருந்து இருக்க வேண்டும். ஆனால் கர்த்தர் அந்த மகிமையை கொடுத்து இருப்பதாக பவுல் சொல்கிறார். கர்த்தர் மனித ரூபம் என்றால் அவர் ஏன் அந்த மகிமையை கர்த்தரிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற கேள்விக்கு கிறிஸ்தவர்களிடம் பதில் இல்லை. அதுமட்டுமல்ல இயேசு மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் கர்த்தரின் சுரூபத்தில் தான் படைக்கப்பட்டுள்ளதாக பைபிள் கூறுகிறது.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்;
ஆதியாகமம் 1
ஆதியாகமம் 1
இயேசு கர்த்தரின் சுரூபம் என்பதால் இறைவன் என்று சொன்னால் மனிதர்கள் அனைவரும் இறைவன் என்று சொல்ல வேண்டிய நிலை கிறிஸ்தவர்களுக்கு வரும்.
கிறிஸ்தவர்கள் சொல்வது போன்று இயேசு கர்த்தரின் மனித ரூபம் என்றால் அதை ஏன் இயேசு சொல்லவில்லை? இயேசு தனது வாழ்நாளில் என்றும் தன்னை கர்த்தர் என்றோ அல்லது கர்த்தரின் மனித ரூபம் என்றோ ஏன் சொல்லவில்லை? இதுப்போன்ற கேள்விகளுக்கு கிறிஸ்தவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
(யோவான் 4:24)
(யோவான் 4:24)
தேவன் ஆவியாயிருக்கிறார் என்றும் அவரை மட்டுமே வணங்க வேண்டும் என்று கிறிஸ்தவர்கள் நம்பும் இயேசுவே சொல்கிறார். இதன் பொருள் என்ன என்று கிறிஸ்தவர்கள் அறிவார்களா? கிறிஸ்தவர்கள் சொல்வது போன்று இயேசு இறைவன் என்றால் இயேசு ஏன் கர்த்தர் மட்டுமே கடவுள் என்று பொய் சொல்ல வேண்டும்?
பழைய ஏற்பாட்டில் நான் ஒன்றும் மனிதனோ அல்லது மனிதக்குமாரனோ இல்லை என்று கர்த்தர் தெள்ளத்தெளிவாக சொல்லும்போது இயேசு கர்த்தரின் மனித ரூபமாக இருக்க வாய்ப்பே இல்லை.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?
(எண்ணாகமம் 23:19)
(எண்ணாகமம் 23:19)
இயேசு தனது வாழ்நாளில் தன்னை கர்த்தர் என்றோ அல்லது கர்த்தரின் மனித ரூபம் என்றோ எங்கும் சொல்லவில்லை என்பதற்கு பைபிளே ஆதாரம்.
இயேசுவை தனது தாசன் என்றே கர்த்தர் சொல்கிறார்.
18. இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
(மத்தேயு 12)
(மத்தேயு 12)
இன்னும் கர்த்தரின் தாசன் தான் இயேசு என்று பைபிள் தெளிவாக சொல்லும்போது அதை மறுத்து இயேசுவை கர்த்தரின் மனித ரூபம் என்று சொல்வது கிறிஸ்தவர்கள் பொய்க்கு பிதாவாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக