குர்ஆன் இறைவேதமே ➖ ஒரு பார்வை
குர்ஆன் இறைவேதமே
✍ஒரு புத்தகம் எழுதப்பட்ட காலத்தின் பின்னணியோடு அதனை நோக்கும்போது அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். இது வேதங்களுக்கும் பொருந்தும். குர்ஆன் இறக்கப்பட்ட பின்னணியோடு அதில் சொல்லப்பட்ட செய்திகளை ஆராய்ந்தால் அது ஒரு இறை வேதம் தான் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
💎பிரபஞ்ச விரிவாக்கம்💎
✍குர்ஆன் இறக்கப்பட்ட 23 ஆண்டு காலத்தில் குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகளை கண்டறியும் எந்த சூழ்நிலையையும் உபகரணங்களையும் முஹம்மது நபி கொண்டிருக்கவில்லை.
உதாரணத்திற்கு குர்ஆன் கூறும் இப்பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மையை சொல்லலாம்.
⭐மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
(அல்குர்ஆன் 51:47)
✍17ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக தான் இந்த பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மை கண்டறியப்பட்டது. இந்த உண்மை எந்த ஒரு அறிவியல் உபகரணமும் இல்லாமல் படிப்பறிவில்லாத ஒருவரால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று. குர்ஆனில் சொல்லப்படும் இந்த அறிவியல் உண்மை முஹம்மது நபி இறைவனிடமிருந்து தான் இந்த வேதத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
💎கரு வளர்ச்சி💎
✍முஹம்மது நபியை(கிபி 632) போன்று இல்லாமல் அரிஸ்டாட்டில்(கிமு 384) கல்வியறிவு பெற்றவராகவும், அறிவியவாளராகவும், அறிவியல் விவாதங்களில் ஈடுபடுவராகவும் இருந்தார். இவர் கருவானது பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தில் இருந்து உருவாகுகிறது என்னும் கருத்தை கொண்டிருந்தார். அரிஸ்டாட்டிலின் இந்த கருவியல் கொள்கை குறைபாடுள்ளது என்பதால் பின்னர் அறிவியலாளர்களால் கைவிடப்பட்டது.
✍17ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கருவின் வளர்ச்சி குறித்து தங்களுக்குள் மோதி கொண்டிருந்த காலம். அந்நேரத்தில் கரு என்பது ஏற்கனவே உருவான சிறிய வடிவிலான மனிதன் என்ற கோட்பாடு பரவலாக பேசப்பட்டு வந்தது. இவ்வாறு சொல்பவர்களை பிரிஃபார்மஸனிஷ்ட்ஸ்(Preformationists) என்று அழைத்தனர். இருந்தாலும் இந்த
பிரிஃபார்மஸனிஷ்ட்ஸ்களால் எவ்வாறு இந்த முன்பே உருவான கரு எப்படி வந்தது என்பதற்கான மூலத்தை அறியாமல் இருந்தனர்.
✍18ஆம் நூற்றாண்டில் பிரிஃபார்மஸனிஷ்ட்ஸ் பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்தாக இருந்ததால் அரிஸ்டாட்டிலின் கருவியல் கருத்து கைவிடப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட செல் கோட்பாடு கருவியல் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது. 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் கண்டுபிடிப்பு கருவியல் வளர்ச்சியின் படித்தரங்களை கண்டறிய உதவியது.
🌟களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.(அல்குர்ஆன் 23:12-14)
✍கருவியல் சம்பந்தமாக பல நூற்றாண்டு கால அறிவியல் முன்னேற்றங்களை ஒரு படிப்பறிவில்லாத ஒருவர் எப்படி தனது புத்தகத்தில் சொல்ல முடியும்? கல்வியறிவு இல்லாத முஹம்மது நபி அவர்கள் தனது வாழ்நாளில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கான சூழ்நிலையையும் முஹம்மது நபி கொண்டிருக்கவில்லை.
💎கடல் பிளவு💎
🌟அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:53)
🌟(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் 76:2)
✍முஹம்மது நபி வாழ்ந்த இடம் பாலைவனம் சார்ந்த பகுதியாகும். அவர் எந்த ஒரு ஆராய்ச்சியும் கடலில் மேற்கொள்ளவுமில்லை. கடல் ஆராய்ச்சியாளராலும் அறிந்திடாத இந்த உண்மை கல்வியறிவு இல்லாத முஹம்மது நபியால் இறைவனில் வழிகாட்டுதல் இல்லாமல் எவ்வாறு சொல்லியிருக்க முடியாது.
✍குர்ஆனில் பல்வேறு அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் மேலே பார்த்துள்ளோம். இறைவனின் வழிகாட்டுதல் இல்லாமல் பல துறைகள் சார்ந்த அறிவியல் உண்மைகளை கல்வியறிவு இல்லாத ஒருவரால் எவ்வாறு சொல்லியிருக்க முடியும் என்பது சிந்தித்து பார்க்கும் எவரும் அவர் ஒரு இறைத்தூதர் தான் என்பதையும் குர்ஆன் ஒரு இறை வேதம் என்பதையும் உணர்ந்து கொள்வர்.
💎எழுத்துப்பணி💎
✍எழுத்துப் பணி என்பது சாதாரண காரியமல்ல. ஒரு புத்தகத்தை எழுதி முடிக்க அதற்கு தேவைப்படும் அமைதியான சூழ்நிலையும், மனதை சிதறடிக்காத ஒருமுகப்பட்ட எண்ணங்களும் அதற்கு தேவை. எழுத்துப்பணியை குறித்து எழுத்தாளர்களின் கருத்துகளை பார்த்தால் இதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
💎எழுத்துப்பணி என்பது கடினமானது. மறுமையின் கொடிய தண்டனைகளை இருந்து தப்பிக்க வைக்கும் அளவுக்கு பூமியில் நரகத்தை எழுத்தாளர்களுக்கு உணர வைக்கும்.
-ஜெஸ்ஸாமீன் வெஸ்ட்
💎எழுத்துப் பணி என்பது எளிமையானது. வெற்று காகிதத்தை எடுத்து உற்று பார்த்து முன்னெற்றியில் இருந்து ரத்த துளிகள் சிந்தும் அளவுக்கு நீங்கள் அந்த பணியை செய்ய வேண்டும்.
-ஜீன் ஃபோவ்லர்
இந்த கடினமான எழுத்துப்பணியை செய்யும் அளவுக்கு கால சூழ்நிலையையோ அல்லது கல்வியறிவையேயோ முஹம்மது நபி பெற்றிருக்கவில்லை.
💎💎வாழ்விற்கான போராட்டம்💎💎
✍முந்தைய தீரக்கதரிசிகள் கொண்டு வந்த அந்த ஒரே இறை கோட்பாட்டை முஹம்மது நபி மக்காவில் பிரச்சாரம் செய்ய தொடங்கிய போது அவரது வாழ்வு பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. கல்லடிகளும் வசை சொற்களும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தலும் முஹம்மது நபியை பின்தொடர்ந்தன. இன்னும் முஹம்மது நபியை கண்காணித்தலும் அவரை கொலை செய்யும் முயற்சிகளும் அரபு சிலை வணங்கிகளால் மேற்கொள்ளப்பட்டன. கொலை முயற்சியில் இருந்து தப்பித்து முஹம்மது நபி மக்காவை துறந்து மதினாவிற்கு சென்றார். மதினா செல்லும் வழியிலும் மக்கத்து எதிரிகளால் பின்தொடரப்பட்டார். மதினாவிற்கு சென்று இஸ்லாமிய சமூகத்தை கட்டியமைத்த போதிலும் மக்கத்து சிலை வணங்கிகள் மதினாவின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்தனர்.
✍பத்து வருட கால மதீனா ஆட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போர்களை நடத்தியுள்ளார். அதில் 29 போர்களில் முஹம்மது நபி நேரடியாக கலந்துள்ளார். இவ்வாறு போராட்ட களமாக தான் முஹம்மது நபியின் வாழ்க்கை இருந்தது. இத்தகைய போராட்டமான வாழ்க்கையில் முஹம்மது நபி எவ்வாறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒரு வேதத்தை கொண்டு வந்திருக்க முடியும்? இறைவனின் வழிகாட்டுதல் இல்லாமல் முஹம்மது நபியால் அறிவியல் உண்மைகளும் வரலாற்று உண்மைகளும் வாழ்க்கை சட்டங்களும் நிறைந்த நேர்த்தியான ஒரு வேதத்தை கொண்டு வர சாத்தியமே கிடையாது. முஹம்மது நபியின் காலச் சூழ்நிலை குர்ஆனின் ஆசிரியராக அவராக இருக்க வாய்ப்பே இல்லை என்று காட்டுவதோடு குர்ஆன் இறை வேதமே என்பதையும் உறுதி செய்கிறது.
✍ஒரு புத்தகம் எழுதப்பட்ட காலத்தின் பின்னணியோடு அதனை நோக்கும்போது அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். இது வேதங்களுக்கும் பொருந்தும். குர்ஆன் இறக்கப்பட்ட பின்னணியோடு அதில் சொல்லப்பட்ட செய்திகளை ஆராய்ந்தால் அது ஒரு இறை வேதம் தான் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
💎பிரபஞ்ச விரிவாக்கம்💎
✍குர்ஆன் இறக்கப்பட்ட 23 ஆண்டு காலத்தில் குர்ஆனில் சொல்லப்பட்ட செய்திகளை கண்டறியும் எந்த சூழ்நிலையையும் உபகரணங்களையும் முஹம்மது நபி கொண்டிருக்கவில்லை.
உதாரணத்திற்கு குர்ஆன் கூறும் இப்பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மையை சொல்லலாம்.
⭐மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
(அல்குர்ஆன் 51:47)
✍17ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக தான் இந்த பிரபஞ்சத்தின் விரிவடையும் தன்மை கண்டறியப்பட்டது. இந்த உண்மை எந்த ஒரு அறிவியல் உபகரணமும் இல்லாமல் படிப்பறிவில்லாத ஒருவரால் கண்டுபிடிக்க முடியாத ஒன்று. குர்ஆனில் சொல்லப்படும் இந்த அறிவியல் உண்மை முஹம்மது நபி இறைவனிடமிருந்து தான் இந்த வேதத்தை பெற்றிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
💎கரு வளர்ச்சி💎
✍முஹம்மது நபியை(கிபி 632) போன்று இல்லாமல் அரிஸ்டாட்டில்(கிமு 384) கல்வியறிவு பெற்றவராகவும், அறிவியவாளராகவும், அறிவியல் விவாதங்களில் ஈடுபடுவராகவும் இருந்தார். இவர் கருவானது பெண்ணின் மாதவிடாய் ரத்தத்தில் இருந்து உருவாகுகிறது என்னும் கருத்தை கொண்டிருந்தார். அரிஸ்டாட்டிலின் இந்த கருவியல் கொள்கை குறைபாடுள்ளது என்பதால் பின்னர் அறிவியலாளர்களால் கைவிடப்பட்டது.
✍17ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் கருவின் வளர்ச்சி குறித்து தங்களுக்குள் மோதி கொண்டிருந்த காலம். அந்நேரத்தில் கரு என்பது ஏற்கனவே உருவான சிறிய வடிவிலான மனிதன் என்ற கோட்பாடு பரவலாக பேசப்பட்டு வந்தது. இவ்வாறு சொல்பவர்களை பிரிஃபார்மஸனிஷ்ட்ஸ்(Preformationists) என்று அழைத்தனர். இருந்தாலும் இந்த
பிரிஃபார்மஸனிஷ்ட்ஸ்களால் எவ்வாறு இந்த முன்பே உருவான கரு எப்படி வந்தது என்பதற்கான மூலத்தை அறியாமல் இருந்தனர்.
✍18ஆம் நூற்றாண்டில் பிரிஃபார்மஸனிஷ்ட்ஸ் பெரும்பாலான அறிவியலாளர்களின் கருத்தாக இருந்ததால் அரிஸ்டாட்டிலின் கருவியல் கருத்து கைவிடப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட செல் கோட்பாடு கருவியல் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது. 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் கண்டுபிடிப்பு கருவியல் வளர்ச்சியின் படித்தரங்களை கண்டறிய உதவியது.
🌟களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.(அல்குர்ஆன் 23:12-14)
✍கருவியல் சம்பந்தமாக பல நூற்றாண்டு கால அறிவியல் முன்னேற்றங்களை ஒரு படிப்பறிவில்லாத ஒருவர் எப்படி தனது புத்தகத்தில் சொல்ல முடியும்? கல்வியறிவு இல்லாத முஹம்மது நபி அவர்கள் தனது வாழ்நாளில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதற்கான சூழ்நிலையையும் முஹம்மது நபி கொண்டிருக்கவில்லை.
💎கடல் பிளவு💎
🌟அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
(அல்குர்ஆன் 25:53)
🌟(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் 76:2)
✍முஹம்மது நபி வாழ்ந்த இடம் பாலைவனம் சார்ந்த பகுதியாகும். அவர் எந்த ஒரு ஆராய்ச்சியும் கடலில் மேற்கொள்ளவுமில்லை. கடல் ஆராய்ச்சியாளராலும் அறிந்திடாத இந்த உண்மை கல்வியறிவு இல்லாத முஹம்மது நபியால் இறைவனில் வழிகாட்டுதல் இல்லாமல் எவ்வாறு சொல்லியிருக்க முடியாது.
✍குர்ஆனில் பல்வேறு அறிவியல் உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் மேலே பார்த்துள்ளோம். இறைவனின் வழிகாட்டுதல் இல்லாமல் பல துறைகள் சார்ந்த அறிவியல் உண்மைகளை கல்வியறிவு இல்லாத ஒருவரால் எவ்வாறு சொல்லியிருக்க முடியும் என்பது சிந்தித்து பார்க்கும் எவரும் அவர் ஒரு இறைத்தூதர் தான் என்பதையும் குர்ஆன் ஒரு இறை வேதம் என்பதையும் உணர்ந்து கொள்வர்.
💎எழுத்துப்பணி💎
✍எழுத்துப் பணி என்பது சாதாரண காரியமல்ல. ஒரு புத்தகத்தை எழுதி முடிக்க அதற்கு தேவைப்படும் அமைதியான சூழ்நிலையும், மனதை சிதறடிக்காத ஒருமுகப்பட்ட எண்ணங்களும் அதற்கு தேவை. எழுத்துப்பணியை குறித்து எழுத்தாளர்களின் கருத்துகளை பார்த்தால் இதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
💎எழுத்துப்பணி என்பது கடினமானது. மறுமையின் கொடிய தண்டனைகளை இருந்து தப்பிக்க வைக்கும் அளவுக்கு பூமியில் நரகத்தை எழுத்தாளர்களுக்கு உணர வைக்கும்.
-ஜெஸ்ஸாமீன் வெஸ்ட்
💎எழுத்துப் பணி என்பது எளிமையானது. வெற்று காகிதத்தை எடுத்து உற்று பார்த்து முன்னெற்றியில் இருந்து ரத்த துளிகள் சிந்தும் அளவுக்கு நீங்கள் அந்த பணியை செய்ய வேண்டும்.
-ஜீன் ஃபோவ்லர்
இந்த கடினமான எழுத்துப்பணியை செய்யும் அளவுக்கு கால சூழ்நிலையையோ அல்லது கல்வியறிவையேயோ முஹம்மது நபி பெற்றிருக்கவில்லை.
💎💎வாழ்விற்கான போராட்டம்💎💎
✍முந்தைய தீரக்கதரிசிகள் கொண்டு வந்த அந்த ஒரே இறை கோட்பாட்டை முஹம்மது நபி மக்காவில் பிரச்சாரம் செய்ய தொடங்கிய போது அவரது வாழ்வு பெரும் நெருக்கடிக்குள்ளாகியது. கல்லடிகளும் வசை சொற்களும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தலும் முஹம்மது நபியை பின்தொடர்ந்தன. இன்னும் முஹம்மது நபியை கண்காணித்தலும் அவரை கொலை செய்யும் முயற்சிகளும் அரபு சிலை வணங்கிகளால் மேற்கொள்ளப்பட்டன. கொலை முயற்சியில் இருந்து தப்பித்து முஹம்மது நபி மக்காவை துறந்து மதினாவிற்கு சென்றார். மதினா செல்லும் வழியிலும் மக்கத்து எதிரிகளால் பின்தொடரப்பட்டார். மதினாவிற்கு சென்று இஸ்லாமிய சமூகத்தை கட்டியமைத்த போதிலும் மக்கத்து சிலை வணங்கிகள் மதினாவின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்தனர்.
✍பத்து வருட கால மதீனா ஆட்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போர்களை நடத்தியுள்ளார். அதில் 29 போர்களில் முஹம்மது நபி நேரடியாக கலந்துள்ளார். இவ்வாறு போராட்ட களமாக தான் முஹம்மது நபியின் வாழ்க்கை இருந்தது. இத்தகைய போராட்டமான வாழ்க்கையில் முஹம்மது நபி எவ்வாறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒரு வேதத்தை கொண்டு வந்திருக்க முடியும்? இறைவனின் வழிகாட்டுதல் இல்லாமல் முஹம்மது நபியால் அறிவியல் உண்மைகளும் வரலாற்று உண்மைகளும் வாழ்க்கை சட்டங்களும் நிறைந்த நேர்த்தியான ஒரு வேதத்தை கொண்டு வர சாத்தியமே கிடையாது. முஹம்மது நபியின் காலச் சூழ்நிலை குர்ஆனின் ஆசிரியராக அவராக இருக்க வாய்ப்பே இல்லை என்று காட்டுவதோடு குர்ஆன் இறை வேதமே என்பதையும் உறுதி செய்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக