பவுல் சொல்கிறார்: பழைய ஏற்பாடு சட்டங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது
பவுல் சொல்கிறார்: பழைய ஏற்பாடு சட்டங்கள் மனிதர்களால் எழுதப்பட்டது
✍அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட முந்தைய வேதமான பைபிள் இஸ்ரவேலர்களால் கறைப்பட்டு விட்டது என்று முஸ்லீம்கள் ஆரம்பம் முதல் சொல்லி வருகின்றனர். இதனை மறுத்து வரும் கிறிஸ்தவர்கள் உண்மையில் அவர்கள் பைபிளை பற்றிய முழுமையான அறிவு இல்லாததையே காட்டுகிறது. ஏனெனில் இயேசுவுக்கு அடுத்து அவர்கள் மதிக்கும் மக முக்கிய நபரும் கிறிஸ்தவத்தின் ஸ்தாபகருமான பவுலே பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும், அந்த கட்டளைகள் "சுய இஷ்டமான ஆராதனை" என்று சொல்லி பைபிளில் மனித கரங்கள் ஊடுருவி உள்ளதை உறுதிப்படுத்துகிறார்.
➡️21. மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
கொலோசெயர் 2
கொலோசெயர் 2
✍பவுலுடைய காலத்தில் இஸ்ரவேலர்கள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நியாயப்பிராமணத்தின் படி சில உணவுகளை உண்டும், சில உணவுகளை தடுத்து கொண்டு சாப்பிடாமல் இருந்து வந்தனர். யூதர்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட சட்டங்களை பின்பற்றி அத்தகைய உணவுகளை உட்கொள்ளாமல் இருந்து வந்தனர். அவர்களை குறித்தே பவுல் இங்கு பேசுகிறார். அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களை பின்பற்ற தேவையில்லை என்று சொல்லுகிறார்.
➡️17. கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.
லேவியராகமம் 3
லேவியராகமம் 3
➡️7. பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
➡️8. இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
லேவியராகமம்11
லேவியராகமம்11
✍ஆனால் இத்தகைய நியாயப்பிரமாணங்களை இயேசு தனது சிலுவைப்பலியில் அழித்து விட்டதாக பவுல் சொல்லுகிறார். பவுலின் வார்த்தைகளை நம்பிய கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நியாயப்பிராமண சட்டங்களை விட்டும் தங்களை விடுவித்து கொண்டனர்.
➡️சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
(எபேசியர் 2:15)
(எபேசியர் 2:15)
➡️14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
➡️15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
✍நியாயப்பிரமாண சட்டங்களை பின்பற்ற தேவையில்லை என்று பவுல் தான் சொல்கிறாரே தவிர இயேசு அவ்வாறு போதிக்கவில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தீர்க்கதரிசியும் நியாயப்பிரமாணங்களை பின்பற்ற வேண்டாம் என்று போதிக்கவில்லை. இயேசுவின் காலத்தில் அவரை கடுமையாக எதிர்த்து இயேசுவின் போதனைகளை அழிக்க வேண்டும் என்று நினைத்த பவுல் தான் பின்னாளில் இயேசுவுக்கு விரோதமான போதனைகளை இயேசுவின் பெயரால் கொண்டு வந்தார்.
✍பழைய ஏற்பாட்டில் தடுக்கப்பட்ட உணவுகளை குறித்து பவுல் பேசும் போது அத்தகைய சட்டங்கள் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், அத்தகைய சட்டங்கள் மனிதர்களின் "சுய இஷ்டமான ஆராதனை" என்றும், அந்த சட்டங்களை பின்பற்றுவதால் உடலுக்கு மட்டுமே நன்மை என்றும் வேறொன்றுக்கும் பிரயோஷனப்படாது என்று பவுல் சொல்லுகிறார்.
➡️23. இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.
கொலோசேயர் 2
கொலோசேயர் 2
✍இஸ்ரவேலர்கள் இத்தனை காலங்களாக பின்பற்றி வந்த நியாயப்பிரமான சட்டங்கள் மனிதர்களால் சொல்லப்பட்டவை என்று பவுல் சொல்லுகிறார். இயேசு உட்பட அத்தனை தீரக்கதரிசிகளாலும் உறுதிப்படுத்தப்பட்ட நியாயப்பிரமாண சட்டங்களை மனிதர்களின் சொந்த கற்பனை என்று சொல்லும் பவுலை எந்த அடிப்படையில் நம்புவது என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.
➡️21. மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
கொலோசெயர் 2
கொலோசெயர் 2
✍ஒருவேளை பவுல் சொன்னது உண்மையென்றால் பழைய ஏற்பாடு கறைப்பட்டு விட்டது என்பதற்கு பவுலின் இந்த வார்த்தைகளே ஆதாரமாக இருக்கும். அல்லது பவுல் சொன்னது பொய்யென்றால் புதிய ஏற்பாட்டில் பவுல் போன்றவர்களின் மனித கற்பனை புகுந்து கறைப்பட்டு விட்டது என்பதும் உண்மையாகி விடும். கிறிஸ்தவர்கள் இதில் எதை நம்பினாலும் பைபிள் கறைப்பட்டு விட்டது என்பதை மறுக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக