கிறிஸ்தவர்களுக்கான அழைப்பு


💎 கிறிஸ்தவர்களுக்கான அழைப்பு 💎







✍அல்லாஹ் மனிதர்களை படைத்து  அவர்களுக்கு நேர் வழி காட்ட வேதங்களை கொடுத்தான். சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தி காட்டுவதாக  வேதம் உள்ளது. மனிதர்களுக்கு வேதத்தை   விளக்கப்படுத்த மனிதர்களிலிருந்தே தனது தூதர்களையும் தேர்ந்தெடுத்து அல்லாஹ் அனுப்பினான். இறைத்தூதர்கள் மனிதர்களுக்கு சத்தியத்தின் பக்கம் அழைப்பு கொடுக்கவும் அசத்தியத்தை குறித்து தெளிவான எச்சரிக்கையையும் கொடுத்தனர். சத்தியத்தையும் அசத்தியத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அல்லாஹ் மனிதர்களுக்கு கொடுத்துள்ளான்.

💎(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
(அல்குர்ஆன் 18:29)

✍சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்த்து தேர்ந்தெடுக்கும் பக்குவத்தோடு தான் மனிதனை அல்லாஹ் படைத்துள்ளான். இன்னும் நேர் வழி காட்டும் சட்டங்களையும் அல்லாஹ் நமக்கு இறக்கியுள்ளான்.  எவர் அல்லாஹ்வின் தூதர்களை ஏற்றுக் கொண்டு சத்தியத்தின் பாதையில் நிலைத்து நிற்கிறாரோ அவர்களுக்கு சுவனமும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நரகத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளான்.

💎இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
(அல்குர்ஆன் 3:85)

✍இறப்பு என்பது உறுதியான ஒன்று என்பதை அறிந்து இருந்தும் மனிதன் "நாளை" எனும் எதிர்காலத்திற்காக ஓடுகின்றான். "நாளை" என்பதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று இவ்வுலகியல் ரீதியான நாளை. மற்றொன்று இறப்புக்கு பிறகு உள்ள மறுமையை குறிக்கும் நாளை. மனிதனோ இறப்பு என்பது நிச்சயமான ஒன்று என்பதை அறிந்து இருந்தும் "மறுமை எனும் நாளை" தேடாமல் இவ்வுலகியல் சார்ந்த "நாளை எனும் நாளுக்காக" ஓடுகின்றான்.

💎ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் 59:18)

✍நிச்சயம் ஒருநாள் நாம் மற்றவர்களின் நினைவில் மட்டும் இருப்பவர்களாக இவ்வுலகை கடந்து செல்வோம். நேற்று இருந்த எத்தனையோ பேர் இன்று இருப்பதில்லை. மரணம் என்பதும் அதனை தொடர்ந்து மறுமையும் நிச்சயமானது. நாம் "மறுமை எனும் நாளைக்காக" நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். நம்மை படைத்த அல்லாஹ்வை சந்திக்கும் நாளை எதிர்பார்த்தவர்களாக வாழும் பக்குவத்தை அடைய அல்லாஹ் நமக்கு அருள் செய்வானாக.

✍என் கிறிஸ்தவ சகோதரர்களே சற்று சிந்தியுங்கள். பொதுவாக இருந்து சிந்தியுங்கள். அனைத்து தீர்க்கதரிசிகளும் வணங்கிய அந்த ஒரே இறைவனின் பக்கம் பாருங்கள். திரித்துவம் எனும் மனித கற்பனையை பின்பற்றி உங்களது  "நாளை எனும் மறுமையை" இழந்து விட வேண்டாம். இயேசு உட்பட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அனைத்து ஊழியக்காரர்களும்  அல்லாஹ்வையே வணங்கியுள்ளனர். அல்லாஹ்வை மட்டுமே வணங்கிய அந்த தீர்க்கதரிசிகளை மற்றும் அவர்களை பின்பற்றிய மக்களை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அவர்கள் தங்கள் மறுமையை பற்றி சிறிதும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உங்களது நிலையை சிந்தித்து பாருங்கள். எந்த ஒரு ஆதாரமும் இல்லாத திரித்துவத்தை நம்பி உங்கள் வாழ்க்கையை இழக்க போகிறீர்களா?

✍கர்த்தரால் அதாவது அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஊழியக்காரர்களில் திரித்துவத்தை நம்பிய எவரேனும் ஒருவர் உண்டா? கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட திரித்துவத்தை பின்பற்றாத போது எந்த தைரியத்தின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை திரித்துவத்தின் பக்கம் கொண்டு செல்கிறீர்கள்? நரகத்தை நம்பும் நீங்கள் திரித்துவம் எனும் மனித கற்பனையை நம்ப முயற்சிப்பது ஏன்? கர்த்தரை மட்டுமே வணங்கிய அனைவருக்கும் சுவனமும், அல்லாஹ்வின் பொருத்தமும்  உண்டு. இதற்கு கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஊழியக்காரர்களும் சாட்சி.  திரித்துவத்தை நம்பியவர்கள்  கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றோ அல்லது நாளை மறுமையில் அல்லாஹ்வின் மன்னிப்பை பெற முடியும் என்றோ எந்த சாட்சியத்தையாவது  தீர்க்கதரிசிகளை கொண்டு உங்களால் நிருபிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது சகோதரர்களே. திரித்துவம் எனும் மனித கற்பனையை விட்டுப் வெளியே வாருங்கள். அனைத்து தூதர்களும் வணங்கிய அந்த ஏக இறைவனிடம் உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.

💎நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.

💎நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன் 98:6-7)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்