முஹம்மது நபி இறைத் தூதர் என்பதற்கான ஆதாரங்கள்


💎💎முஹம்மது நபி இறைத் தூதர் என்பதற்கான ஆதாரங்கள் 💎💎






💎முந்தைய தீர்க்கதரிசிகள் கொண்டு வந்த ஒரே இறை கொள்கையை உண்மைப்படுத்தியது 💎

✍முஹம்மது நபியின் தூதுத்துவம் முந்தைய தீர்க்கதரிசிகள் கொண்டு வந்த அந்த ஏக இறைவனை உண்மைப்படுத்தியதோடு அந்த ஒரே இறைவனையே வணங்கும்படி செய்தது. முஹம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட இறுதி வேதமான குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தியது.

➡️இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
(உபகாரம் 6:4)

➡️(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
(அல்குர்ஆன் 112:1)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

💎முந்தைய வேதங்களில் முஹம்மது நபியின் வருகையை குறித்து சொல்லப்பட்டுள்ளது💎 

✍இயேசுவின் வருகையை குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டு இருந்தாலும் எவ்வாறு யூதர்கள் அந்த வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து இயேசுவை இறைத்தூதர் என்று நம்பவில்லையோ அவ்வாறே பைபிளில் முஹம்மது நபியின் வருகையை குறித்து சொல்லப்பட்டு இருந்தாலும் அந்த வசனங்களுக்கு தவறான விளக்கம் கொடுத்து யூத கிறிஸ்தவர்கள் முஹம்மது நபியை நம்ப மறுக்கின்றனர்.

✍முஹம்மது நபியின் வருகையை குறித்து பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடும் ஆகிய இரண்டும் சாட்சியம் பகருகின்றன.

✍பழைய ஏற்பாட்டில் முஹம்மது நபியின் வருகையை குறித்து மோஸேக்கு சொல்லப்பட்ட தீர்க்கதரிசினம்.

➡️18. உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

➡️19. என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
(உபாகமம் 18)

✍புதிய ஏற்பாட்டில் தேற்றவாளனாகிய முஹம்மது நபியின் வருகையை குறித்து இயேசுவின் போதனைகள்:

➡️7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

➡️8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
(யோவான் 16)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎முஹம்மது நபி இயேசுவை உண்மைப்படுத்துதல்💎

✍முஹம்மது நபியின் காலத்தில் சிலை வணக்கம் செய்யும் அரபுகளுக்கு அடுத்ததாக யூதர்களே இருந்தனர். இன்னும் சொல்வதாக இருந்தால் முஹம்மது நபி ஹிஜ்ரத் செய்த மதினாவில் அரபுகளுக்கு அடுத்தாற் போன்று யூதர்களே இருந்தனர். யூதர்கள் இயேசுவை மேசியா என்று நம்பிக்கை கொள்ளாதவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. முஹம்மது நபி யூதர்களை தனது மதத்தின் மீது கவர வேண்டும் என்று நினைத்து இருந்தால் இயேசுவை மேசியா இல்லை என்று சொல்லி இருந்தால் போதுமானதாக இருந்து இருக்கும். ஆனால் முஹம்மது நபியோ அல்லாஹ்வின் உண்மையான தீர்க்கதரிசி என்பதால் அவர் இயேசுவின் அதிசய பிறப்பையும், இயேசு செய்த அற்புதங்களையும், இயேசு மேசியா என்பதையும் உண்மைப்படுத்தினார். இது முஹம்மது நபி அவர்கள் உண்மை தீர்க்கதரிசி என்பதை உண்மைப்படுத்துகிறது.

➡️அப்பொழுது அல்லாஹ் கூறுவான்; "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து, நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்). இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரளையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்). இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்). அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறியவேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.
(அல்குர்ஆன் 5:110)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துதல்💎

✍இந்த உலகில் உள்ள  மதங்கள் அனைத்தும் தங்கள் மதத்திற்கு என்று தனி வேதத்தை கொண்டுள்ளன. அதே போன்று யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்களுக்கென்று வேத நூல்களை வைத்துள்ளனர். முஹம்மது நபி ஏனைய அனைத்து மதங்களையும் தவிர்த்துவிட்டு யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களை உண்மைப்படுத்துகிறார். தோரா(தவ்ராத்) ஜபூர்(சங்கீதம்) மற்றும் இன்ஜீல்(சுவிசேஷம்) ஆகிய வேதங்கள் அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட வேதங்கள் என்று சாட்சியம் கூறுகின்றார். உலகில் உள்ள ஏனைய மதங்களை தவிர்த்து விட்டு முஹம்மது நபி ஏன் யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களை உண்மைப்படுத்த வேண்டும். ஏனெனில் முஹம்மது நபியை எந்த இறைவன் தீர்க்கதரிசியாக தேர்ந்தெடுத்தானோ அந்த இறைவனால் அனுப்பப்பட்ட வேதம் என்பதால் தான் அதனை உண்மைப்படுத்துகிறார்.

➡️"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் 3:84)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎ஆப்ராஹமின் மார்க்கம் இஸ்லாம்💎

✍அல்லாஹ்வின் நண்பர் என்று போற்றப்படும் ஆப்ராஹம் ஒரு யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மாறாக அவர் அனைவரையும் படைத்த அந்த ஏக இறைவனையே வணங்குபவராக இருந்தார் என்று வரலாறு பதிவு செய்துள்ளது. அதனை குர்ஆனும் உண்மைப்படுத்துகிறது.

➡️இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
(அல்குர்ஆன் 3:67)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍முஹம்மது நபி வாழ்க்கையும் அவர் கொண்டு வந்த இறுதி வேதமான குர்ஆனும்  முஹம்மது நபி அவர்களை  ஒரு இறைத் தூதர் தான் என்பதை  உண்மைப்படுத்துகிறது.

➡️(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்குர்ஆன் 21:107)

✍ஆன்மீகத்திலும், அரசியலிலும், நீதிபதியாகவும், ஒரு போர் தளபதியாகவும், சமூக சீர்திருத்தம் செய்வதிலும், சிதறி கிடந்த அரபுக்களை இணைத்து ரோம் பாரசீக சாம்ராஜ்யங்களை எதிர்க்கும் அளவுக்கு வலிமையான அமைப்பை உருவாக்கியவதிலும், பொருளாதார மாற்று அமைப்பை கொண்டு வந்ததிலும்,  அரபு நாடுகளில் இருந்து சிலை வணக்கத்தை ஒழித்து கட்டியதிலும் நபியின் தூதுத்துவம் நடுநிலையோடு சிந்திக்கும் அனைவருக்கும் புரியும். இறைவனின் வழிகாட்டுதல் இல்லாமல் கல்வி அறிவற்ற ஒருவர் இவ்வாறு பல துறைகளிலும் எவ்வாறு வழிகாட்ட முடியும் என்பதை சிந்தித்து பாருங்கள். உலக வரலாற்றில் முஹம்மது நபியை போன்று எந்த ஒரு மனிதனும் பல துறையிலும் வழிகாட்டியாக இருந்ததில்லை. முஹம்மது ஓர் இறைத்தூதர் தான் என்பது நடுநிலையாக சிந்திக்கும் எவரும் அவரது வாழ்வில் இருந்தும் அவர் கொண்டு வந்த வேதத்தின் மூலமாகவும் புரிந்து கொள்வர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்