கிறிஸ்தவர்களே..... உங்கள் இரட்சிப்பு முஹம்மது நபியை பின்பற்றுவதன் மூலமே...
கிறிஸ்தவர்களே..... உங்கள் இரட்சிப்பு முஹம்மது நபியை பின்பற்றுவதன் மூலமே...
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
(அல்குர்ஆன் 95:4)
(அல்குர்ஆன் 95:4)
சக ஜீவராசிகளுக்கு மத்தியில் தனித்து தெரிபவன் மனிதன். தனது அறிவாற்றலால் தனித்து நிற்கும் மனிதனை அழகிய படைப்பாக அல்லாஹ் படைத்துள்ளான்.
நன்மையும் தீமையையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்ட மனிதன் தனது எண்ணங்கள் மற்றும் செயல்களை கொண்டு அல்லாஹ்வின் பக்கம் நெருங்குகின்றான். இறுதியில் அல்லாஹ்வின் அன்பை ஒருவன் பெற்றுவிட்டால் அவன் அனைவராலும் நேசிக்க கூடியவனாக மாறுகின்றான்.
7485. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல்(அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்தில் 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.128
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு
உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல்(அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல்(அலை) அவர்கள் வானத்தில் 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.128
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு
ஒவ்வொரு காலத்திலும் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நாம் இறைவனை அடைய முடியும். இது ஒரு மறுக்க முடியாத உண்மை. மோஸேயும் இயேசுவும் அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இறைவனை அடையும் வழிகாட்டிகளாக வாழ்ந்தனர்.
ஆனால் இந்த உலக வாழ்வின் இறுதி கட்டத்தில் வாழும் நாம் இறுதி நபியான முஹம்மது நபியை நேசித்து அவரை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நம்மை படைத்த அந்த ஏக இறைவனான அல்லாஹ்வின் அன்பையும் மன்னிப்பையும் பெற முடியும்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 3:31)
(அல்குர்ஆன் 3:31)
உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்ட இறுதி நபியை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நாம் நம் இரட்சிப்பை அடைய முடியும். பாவங்களில் இருந்து விடுதலை பெறவும், நம்மை படைத்தவனின் அன்பை பெறவும் முஹம்மது நபியை பின்பற்றுவது என்பது அவசியமான ஒன்றாகும். எந்த தீர்க்கதரிசியாலும் போதிக்கப்படாத திரித்துவத்தை நம்பி உங்கள் வாழ்க்கையை பயனற்றதாக ஆக்கி விட வேண்டாம். முஹம்மது நபி அவர்கள் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றார்.
செவி தாழ்த்துங்கள்.
செவி தாழ்த்துங்கள்.
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
கருத்துகள்
கருத்துரையிடுக