முஸ்லீம்களின் பாவத்தை யூதக் கிறிஸ்தவர்கள் சுமப்பார்களா?

முஸ்லீம்களின் பாவத்தை யூதக் கிறிஸ்தவர்கள் சுமப்பார்களா?






☞5344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள்மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்.இவ்வாறே நான் கருதுகிறேன்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூரவ்ஹ் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள், "இவ்வாறே நான் கருதுகிறேன் எனும் ஐயப்பாட்டைத் தெரிவித்த அறிவிப்பாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார்கள்.
அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற (அவர்களுடைய புதல்வரான) அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், "இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தா உம்முடைய தந்தை அறிவித்துள்ளார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "ஆம்" என்றேன்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 49. பாவமீட்சி

🌟🌟இந்த ஹதிஸ் பற்றி ஆராய்வோம்.🌟🌟

✍ஒரு ஹதிஸ் மற்றொரு ஹதிஸுக்கு விளக்கமாக அமையும். இது எல்லா ஆதார நூல்களுக்கும் பொருந்தும் பைபிள்  உட்பட. அந்த அடிப்படையில் நீங்க குறிப்பிட்ட  ஹதிஸ் சொல்ல வரும் செய்தி என்னவென்று மற்ற ஹதிஸ்களை கொண்டு பார்ப்போம். 

✍ஒவ்வொரு மனிதனுக்கும் சொர்க்கம் மற்றும் நரகத்தில்  அவனுக்கென்று இடம் ஒதுக்கப்படுகிறது .  அந்த மனிதன் முஸ்லீமாக மரணிக்கும்போது சொர்க்கத்தை அடைந்து  கொள்கின்றான். அவனுடைய நரக இடத்தை யூத மற்றும் கிறிஸ்தவர்கள்  அல்லாஹ்வின் மார்க்கத்தை நிராகரித்த காரணத்தால்  அடைந்து கொள்கிறார்கள்.

☞6569. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தம் இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமையவேண்டும் என்பதற்காகவே (காட்டப்படுகிறது.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்

✍உங்களுக்கு  ஒரு கேள்வி எழலாம். ஏன் முஸ்லீம்களின் பாவம் யூத மற்றும் கிறிஸ்தவர்கள் மீது போடப்படுகிறது. அதற்கான பதில் இதோ:

☞கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்) இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.16:25

✍ஒரு மனிதன் மற்றொருவரை வழிக்கெடுத்தால், வழிக்கெடுக்கப்பட்டவன் செய்யும் பாவத்தினால் சுமக்கும் பாவச்சுமையை போன்று வழிக்கெடுத்தவனும் சுமப்பான். அவ்வாறே முஸ்லீம்களை வேதக்காரர்களை வழிக்கெடுக்கும்போது, முஸ்லீம்கள்  அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பதால் அந்த பாவத்தில் இருந்து மீண்டு சொர்க்கம்  அடைவார்கள். ஆனால் யூத மற்றும் கிறிஸ்தவர்களோ அல்லாஹ்வை மார்கக்த்தை ஏற்காத காரணத்தால் அந்த பாவச்சுமையினால் முஸ்லீம்கள் செல்ல இருந்த நரகத்தை அடைவார்கள். வேதக்காரர்களால் முஸ்லீம்கள் வழிக்கெடுக்கப்படுவார்கள் என்று முஹம்மது நபியின் முன்னறிவிப்பும் உள்ளது.

☞5184. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்" என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு யாரை?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 47. கல்வி

💎வழிக்கெடுக்கும் யூத கிறிஸ்தவர்கள்💎

✍யூத கிறிஸ்தவர்களால் முஸ்லீம்கள் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் முஸ்லீம்களே இவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

✍சினிமா தொலைக்காட்சி சேனல்கள் செய்தி நிறுவனம் போன்ற மீடியா துறையில் ஆதிக்கம் செலுத்தும் கிறிஸ்தவர்கள் அந்த துறையின் மூலமாக விபச்சாரம் போதை கொலை கொள்ளை போன்ற கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் பரவ செய்து மக்களை வழிக்கெடுக்கும் பாவத்தை திறம்பட செய்கின்றனர்.

✍பிற நாடுகளின் வளங்களின் மீது  பேராசை கொள்ளும் கிறிஸ்தவ நாடுகள் அந்த வளங்களை கொள்ளையடிக்க உள்நாட்டு குழப்பங்களை பிற நாடுகளின் மீது ஏற்படுத்தி அதன் மூலமாக அந்த வளங்களை கொள்ளையடித்து பிற நாட்டு மக்களை வறுமையில் ஆழ்த்தி அதன் மூலம் பாவங்களை செய்ய தூண்டுகின்றனர்.

✍காலணித்துவம் ஏகாதிபத்தியம் போன்ற கொள்கையை பின்பற்றி உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்த நாடுகளின் வளங்களை கொள்ளையடித்தும் அந்த நாடுகளை வறுமையில் ஆழ்த்தும் பல கோடிக்கணக்கான மக்கள் தங்களை தாங்களே அழித்து கொள்ளக் காரணமாக இருந்தவர்கள் தான் கிறிஸ்தவர்கள்.

✍ஏழைகளை மேலும் ஏழைகளாகாவும், பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் உலகமயமாக்கல் போன்ற கொள்கையை பயன்படுத்தி இன்றும் பெரும்பாலான மக்களை வறுமையில் ஆழ்த்தும் பாவத்தை செய்பவர்கள் தான் கிறிஸ்தவ நாடுகள்.

✍உலக வங்கிகள் மூலமாக ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை கிடைக்க விடாமலும், பணக்காரர்களுக்கு தகுந்த சூழ்நிலையையும் ஏற்படுத்தி பாவங்களை செய்ய தூண்டும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர்கள் தான் கிறிஸ்தவர்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

⭐⭐எமது தளம் பற்றி⭐⭐

✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.

✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.

✍மாற்று மதத்தவர்களுக்கு  இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு  கொடுக்கும் தளம் இது.

✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.

✍இந்த அழைப்பு மற்றவர்களுக்கும் சேர பதிவுகளை SHARE செய்யுங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்