அலை அலையாய் மக்கள் இஸ்லாத்தை நோக்கி
அலை அலையாய் மக்கள் இஸ்லாத்தை நோக்கி
2018இன் கடந்த 5 மாதங்களில் மட்டும் ஏறத்தாழ வெளிநாட்டில் இருந்து குடியேறிய 3000 நபர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டுள்ளனர் என்று ஓமன் நாட்டின் மத விவகாரத்துறை அமைச்சர் ஓமன் டைம்ஸ் என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார்.
மதம் மாறியவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவார்கள்.
ஓமன் அமைச்சகம் "குர்ஆன் உங்களிடம் பேசுகிறது" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற இரண்டு நபர்கள் இஸ்லாத்தை நோக்கிய தங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் 800 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கத்தின் இறுதியில் 26பேர் இஸ்லாத்தை ஏற்று கொண்டனர். சென்ற வருடம் நடந்த நிகழ்வில் 72 பேர் இஸ்லாத்தை ஏற்று கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதம் மாறியவர்களில் பெரும்பாலோர் மீடியாக்களில் பரப்பப்படும் இஸ்லாம் பற்றிய அவதூறான நம்பிக்கையுடன் ஓமன் வந்தவர்கள் என்றும், பின்பு உண்மை இஸ்லாத்தை கண்டு வியந்து இஸ்லாத்தை ஏற்று கொண்டவர்கள் என்றும் ஓமன் நாட்டின் அமைச்சர் கூறியுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.....
கருத்துகள்
கருத்துரையிடுக