இஸ்லாத்தின் பார்வையில் இயேசு
இஸ்லாத்தின் பார்வையில் இயேசு
☞வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
4:171
✍இயேசு அல்லாஹ்வின புறத்தில் இருந்து வந்த வார்த்தை என்று இங்கு குறிப்பிடப்படுகிறது.
☞மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
3:45
3:45
✍அல்லாஹ் குர்ஆனில் பல்வேறு அடையாளப் பெயர்களைவெவ்வேறு தீர்க்கதரிசிகளுக்கு கொடுத்துள்ளான். ஒரு தீர்க்கதரிசிக்கு ஒரு அடையாளப்பெயர் கொடுக்கப்படுவதால், வேறு யாரும் அந்த பண்புக்கு பொருத்தமானவர் யாரும் இல்லை என்று அர்த்தமாகாது. உதாரணத்திற்கு நபி ஆபிரகாம் (ஸல்) குர்ஆனில் அல்லாஹ்வின் நண்பர் கலீலுல்லாஹ் என்று குறிப்பிடப்படுகிறார். மற்ற தீர்க்கதரிசிகள் யாரும் அல்லாஹ்வின் நண்பராக இல்லை என்று அர்த்தம் ஆகாது. மோசஸ் நபியவர்கள் குர்ஆனில் கலீமுல்லாஹ் என்று அழைக்கப்படுகின்றார். இதனால் மற்ற தீர்க்கதரிசிகள் யாரிடமும் அல்லாஹ் பேசவில்லை என்ற அர்த்தம் ஆகாது. கடவுள் மற்றவர்களிடம் பேசவில்லை என்று இது அர்த்தப்படுத்தாது. இதேபோல், இயேசு நபியவர்கள் குர்ஆனில், "அல்லாஹ்வின் வார்த்தை(கலிமத்துல்லாஹ்) என்று குறிப்பிடப்பட்டதால், மற்ற நபிமார்களில் யாரும் அல்லாஹ்வின் வார்த்தையாக இல்லை என்று அர்த்தமாகாது.
🌟🌟அல்லாஹ்வின் வார்த்தை 🌟🌟
☞அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.3:59
✍இயேசுவின் படைப்பை ஆதாமின் படைப்போடு அல்லாஹ் குர்ஆனில் ஒப்பீடு செய்கின்றான். ஏனெனில் இருவரும் அல்லாஹ்வின் வார்த்தையால் உருவானவர்கள்.
✍அல்லாஹ்வின் வார்த்தையால் உருவானதால் இயேசுவை வணங்கும் வேண்டும் என்றால் அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்தையும் வணங்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஒன்றை படைக்க விரும்பினால் 'ஆகுக' என்று சொல்வதுதான் உடனே அது உண்டாகிவிடும்.
☞(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.2:117
✍வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் ஆகு எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது.
🌟🌟அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த ஆன்மா🌟🌟
✍இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது.
✍என்னுடைய கை என்று சொல்கிறோம். என்னுடைய பேனா என்றும் சொல்கிறோம். இரண்டிலும் என்னுடைய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
✍என்னுடைய கை என்பது என்னில் ஒரு பகுதியாக இருக்கும் கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
✍என்னுடைய பேனா என்று சொல்லும்போது என்னில் ஒரு பகுதியான பேனா என்று பொருள் கொள்ள மாட்டோம். கை எப்படி எனது உறுப்பாக உள்ளதோ அது போல் பேனா எனது உறுப்பாக இல்லாததே இதற்குக் காரணம்.
☞15:29. "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் நான் ஊதும்போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' (என்று கூறினான்).
✍15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை.
✍ஆதம் (அலை) பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறப்படும்போது எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் ஈஸா நபி பற்றி அல்லாஹ்வின் உயிர் என்று கூறுவதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
✍ஆதாம் மற்றும் இயேசு உட்பட நம் அனைவரது உயிரும் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருகின்றது என்று குர்ஆன் கூறுகின்றது.
☞பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.32:9
✍ஆன்மாவே கடவுள் என்று சிலை வழிப்பாட்டாளர்கள் சொல்வது போன்று இஸ்லாம் சொல்லவில்லை.
உயிர் என்பது அல்லாஹ்வின் கட்டளையினால் உண்டான ஒன்றாகும் என்றே குர்ஆன் கூறுகின்றது.
உயிர் என்பது அல்லாஹ்வின் கட்டளையினால் உண்டான ஒன்றாகும் என்றே குர்ஆன் கூறுகின்றது.
☞(நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக.17:85
✍பிறகு ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று ஈஸா நபியைக் குறிப்பிட வேண்டும்?
✍பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
☞19:34 இவர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
☞19:35 அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
✍இயேசுவை பற்றி குறிப்பிடும் போது புதல்வர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் அல்லாஹ்வுக்கு இல்லை என்று குர்ஆன் தெளிவாக சொல்கிறது.
✍இயேசு தன்னை அல்லாஹ்வின் அடியானாகவே தன்னை அடையாயப்படுத்தி கொள்கிறார்.
☞19:30 "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
✍இவ்வாறாக குர்ஆன் இயேசுவை அல்லாஹ்வின் அடியார் மற்றும் தூதராக அடையாளப்படுத்துகிறது. இதே போன்றே பைபிளும் இயேசுவை கர்த்தரின் ஊழியக்காரன் என்றே சொல்கிறது. பழைய ஏற்பாட்டில் கர்த்தரை தேவன் என்று தெள்ளத்தெளிவாக சொல்வது போல் இயேசுவை தேவன் என்று தெளிவாக சொல்லும் ஒர் வசனமும் பைபிளில் இல்லை என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக