அகிலத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி





இந்த உலகம் அறியாமை எனும் இருளில் மூழ்கி கிடந்த போது, உண்மையான ஏக இறைவனை வணங்காமல் சிலை வணக்கம் செய்து தங்கள் மறுமை வாழ்க்கையை மக்கள் இழந்து கொண்டிருந்த போது  மக்கள், உயர்வு தாழ்வு கற்பித்து தீண்டாமையில் உலகம் மனிதனை மனிதன் அடிமைப்படித்தி கொண்டிருந்த போது மனிதர்களுக்கு நேர்வழி காட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வினால்  முஹம்மது நபி அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் அருளாகவும், நபியாகவும் அனுப்பப்பட்டார்.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்குர்ஆன் 21:107)

முஹம்மது நபி அவர்கள் நேர்வழி காட்டும் அருளாக உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டவர் என்பதை அல்லாஹ் தனது திருமறையில் தெளிவாக சொல்கிறான். முஹம்மது நபி அவர்கள் தனது எதிரிகளிடத்திலும் இரக்கம் காட்டுபவராகவே நடந்துள்ளார். நபியின் தோழர்கள் காபிர்களை சபிக்க முஹம்மது நபியிடம் கேட்டபோது "நான் சபிப்பதற்காக அனுப்பப்படவில்லை, அருளாக தான் அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறி தனது எதிரிகளை சபிக்கவோ அல்லது அவர்களுக்கெதிராக பிரார்த்தனை செய்யவோ மறுத்தார்.

5065. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்" என்று  கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. 

பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்
நபியவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய  மக்காவிற்கு வெளியே தாயிஃப் நகருக்கு சென்றபோது அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாமல், நபியவர்களை இழிவுப்படுத்தி, தங்களது சிறார்களை கொண்டு மூன்று மைல் தூரம் கல்லால் அடித்து விரட்டினார்கள்.  தனது தூதரை கல்லால் அடித்த மக்களுக்கு தண்டனை புகட்ட அல்லாஹ் தனது வானவர்களை முஹம்மது நபியிடம் அனுப்பி வைத்தான். ஆனால் முஹம்மது நபி அவர்கள் அந்த ஊர் மக்களை அழிக்க சொல்லாமல் பொறுமையை கையாண்டார்கள்.

3231. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், '(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது 'அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். 'கர்னுஸ் ஸஆலிப்' என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, 'உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, 'முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)' என்று கூறினார். உடனே, '(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)' என்று சொன்னேன்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

இந்த சம்பவம் முஹம்மது நபி அவர்கள் தனது எதிரிகளிடத்திலும் எவ்வாறு மெண்மையையும், இரக்கத்தையும் மேற்கொண்டார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்