யோவான் 14:9 இயேசுவை கர்த்தர் என்று சொல்கிறதா?


💎💎யோவான் 14:9 இயேசுவை கர்த்தர் என்று சொல்கிறதா?💎💎






⭐யோவான் 14
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

🌟9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

✍கிறிஸ்தவர்கள் மேற்கண்ட வசனங்களை காட்டி இயேசுவை இறைவன் என்று கூறுகின்றனர். உண்மையில் இந்த வசனங்கள் இயேசுவை இறைவன் என்று சொல்கிறதா என்று ஆராயலாம்.

✍மேற்கண்ட வசனத்தில் இருந்து கர்த்தரும் இயேசுவும் ஒரே நபர் தான் என்று சொல்வது திரித்துவ நம்பிக்கைக்கே விரோதமாக அமையும். ஏனெனில் திரித்துவ நம்பிக்கைப்படி பிதாவும் இயேசுவும் பரிசுத்த ஆவியும்  தனித்தனி நபர்கள் என்பதே. ஒரு நாட்டின் தூதருடன் செய்யப்படும் உடன்படிக்கை  அந்த நாட்டுடன் செய்யும் உடன்படிக்கையாகவே  பார்க்கப்படுகிறது. அவ்வாறே மேற்கண்ட  வசனமும் இயேசுவை கண்டால் கர்த்தரை கண்டதாக சொல்வது என்பது ஆன்மீக அடிப்படையில்  சொல்லப்பட்ட ஒன்று தான் என்பதை புரிந்து கொள்ளலாம்.  அதாவது கர்த்தரால் அனுப்பப்பட்ட இயேசுவை நம்புவது என்பது கர்த்தரை நம்புவதாக அமையும்.

🌟யாத்திராகமம் 33:
20. நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.

✍கர்த்தரை காண முடியாது என்றும் கண்டவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்றும்  பழைய ஏற்பாடு தெளிவாக சொல்லும்போது பிலிப் இயேசுவிடம் கர்த்தரை காட்ட சொல்வது நகைப்புக்குரியது. பிலிப்பின் முட்டாள்தனமான கேள்விக்கு  பதிலளிக்கும் விதமாக பிதாவினால் அனுப்பப்பட்ட தன்னை கண்டவர் பிதாவை கண்டதாக அமையும் என்று ஆன்மீக அடிப்படையில் இயேசு சொல்கிறார்.

✍தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
(யோவான் 1:18)

✍ கர்த்தரை கண்டவன் உயிரோடு இருக்க முடியாது என்று இருக்கும்போது ஏன் இயேசு தன்னை கண்டவன் பிதாவை கண்டான் என்று சொல்ல வேண்டும்? ஏனெனில் கர்த்தர் தன்னை தீர்க்கதரிசிகள் மூலமாக வெளிப்படுத்துவதாக பழைய ஏற்பாட்டில் சொல்லுகிறார். ஆதலால் தீர்க்கதரிசியான இயேசுவின் மூலமாக பிதா தன்னை வெளிப்படுத்துவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


🌟6. அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
(எண்ணாகமம் 12:6)

✍ஆகவே இயேசு கர்த்தரை வெளிப்படுத்துவதால் அவரை இறைவன் என்று சொல்ல முடியாது, தீர்க்கதரிசி என்றே சொல்ல முடியும்.

🌟1 யோவான் 2:
3. அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

✍கர்த்தரால் சொல்லப்பட்ட கற்பனைகளை பின்பற்றுபவதன் மூலம் கர்த்தரை அறிய முடியும் என்று பைபிள் போதிக்கிறது.  இயேசுவின் காலத்தில் கர்த்தரின் கற்பனைகள் இயேசுவின் மூலமாகவே அந்த மக்களுக்கு போதிக்கப்பட்டது. அதனால் தான் தன்னை கண்டவன் பிதாவை அறிந்து கொள்வான் என்ற அடிப்படையில் தான் இயேசு பிலிப்பிடம் அவ்வாறு சொல்கிறார்.
 
🌟28. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

✍அதே யோவான் அதிகாரத்தில் பிதா தன்னை காட்டிலும் பெரியவர் என்று சொல்கிறார். இப்படி சொன்ன இயேசு எப்படி தன்னையும் கர்த்தரையும் சமமாக்கி இருக்க முடியும்? நிச்சயமாக இல்லை.

✍அதே அதிகாரத்தில்  கர்த்தரின் கட்டளையின்படி தான் செயல்படுவதாக கூறுகிறார். கர்த்தரின் கட்டளையின் படி  செயல்படும ஒருவர் எப்படி கர்த்தருக்கு சமமாக முடியும் என்பதை கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டும்.  

🌟31. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
(யோவான் 14:31)

✍இந்த வசனத்தின் படி கர்த்தரின் கட்டளையின் படி செயல்படும் அவரது ஊழியக்காரர் என்றே தன்னை இயேசு  அடையாளப்படுத்துகிறார்.

✍கிறிஸ்தவர்கள்  குறிப்பிட்ட யோவான் புத்தகத்தின் 14வது அதிகாரத்தில் இயேசு பேசியதாக உள்ள மற்ற வசனங்கள் இயேசுவை கர்த்தரின் அடியாராக தெளிவாக காட்டுகிறது. ஒரு புத்தகத்தின் முன் பின் வசனங்களையும் சேர்த்து படிக்க வேண்டும். அப்போது தான் அதன் முழு அர்த்தமும் புரியும். இடையில் ஒரு வசனத்தை உருவி வைத்து கொண்டு இயேசுவை இறைவன் என்று சொல்வது அறிவீனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்