யார் பரம்பொருள்?

யார் பரம்பொருள்? ✍ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உயர்ந்த கொள்கைக்கு மாறாக போதிக்கப்படும் பல தெய்வ கோட்பாடானது தனது இயல்பிலேயே பல முரண்பாடுகளையும், தன்னை பின்பற்றும் மக்களுக்கிடையே உயர்வு தாழ்வையும் போதிக்கிறது என்பதற்கு இந்து மதம் மாபெரும் சான்றாக உள்ளது. யார் பரம்பொருள்(பரம்பிரம்மம்) என்பதை தனது விசுவாசிகளுக்கு சொல்வதில் இந்து மத வேதங்கள் தோல்வியை அடைந்து விட்டன. ஒரு சில உதாரணங்களை பார்ப்போம். 💎விஷ்ணு💎 ✍கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தனது விஸ்வரூப காட்டும்போது எல்லா தேவர்களும் (சிவன், பிரம்மா,,....) தனக்குள் இருப்பதாக கூறுகிறார்(?) ➡️Bg 11.15 — அர்ஜுனன் கூறினான்: எனது அன்பிற்குரிய இறைவனே, கிருஷ்ணா! எல்லா தேவர்களும், பற்பல இதர உயிரினங்களும் உமது உடலில் சிறப்பாக வீற்றிருப்பதை நான் காண்கிறேன். தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரம்மதேவர், சிவபெருமான், பல்வேறு ரிஷிகள் மற்றும் திவ்யமான நாகங்களையும் நான் காண்கின்றேன். கீதையில், 10 அத்தியாயத்தில் நேரடியாக கிருஷ்ணர் கூறுவதாவது ... ➡️Bg 10.8 — ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. - ...