அக்-03 மஸ்ஜித் திறப்பு நாள்
ஜெர்மனியில் ஆண்டுதோறும் அக்டோபர் 3ம் தேதி நாடு முழுவதும் உள்ள மசூதிகளை பார்வையிட ஆயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாதவர்கள் மசூதி திறப்பு நாள்(Open mosque day) என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
"100,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் இஸ்லாம் பற்றி மேலும் அறியவும் மற்றும் முஸ்லிம்களுடன் உரையாடுவதற்கும் இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது," என ஜெர்மனியின் முஸ்லீம் ஒருங்கிணைப்புக் குழுவின் (KRM) செய்தித் தொடர்பாளர் Burhan Kesici, தி அனடூலு செய்தி நிறுவனம் மேற்கோளிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, 900 ஜெர்மன் மஸ்ஜிதுகளில் உள்ள இமாம்கள் இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய விளக்கங்களை மாற்று மதத்தவர்களுக்கு அளித்தனர். மேலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 ம் தேதி, ஜெர்மனியில் உள்ள முஸ்லீம் சமூகம் மசூதி திறப்பு தினத்திற்காக வெவ்வேறு மதங்களின் பார்வையாளர்களை வரவேற்கிறது.
"பொதுமக்களுக்கு எங்கள் கதவுகளைத் திறப்பதன் மூலம், முஸ்லீம்கள் வெளிப்படையானவர்கள் என்பதையும், உரையாடலுக்கு காத்திருக்கிறோம் என்பதையும், மேலும் இந்த சமுதாயத்தில் முஸ்லீம்களும் ஒரு அங்கம் என்பதையும் நாங்கள் காட்ட விரும்புகின்றோம் என்று கேசிசி விளக்கினார்.
"மக்கள் எதைப் பற்றி குறைவாக தெரிந்து வைத்துள்ளார்களோ, அதைப் பற்றி மேலும் கவலையும் அச்சமும் கொள்வது இயல்பானது. அத்தகைய அச்சங்கள் மற்றவர்களுடைய கெட்ட எண்ணங்கள் மற்றும் பிரச்சாரத்தால் மேலும் அதிகமாக்கப்படலாம். மேலும் வெளிப்படைத்தன்மையும், பேச்சுவார்த்தையும் மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதும் இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும். "என்று கேசிசி விளக்கமளித்தார்.
81 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி, மேற்கு ஐரோப்பாவில் பிரான்சிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் மக்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினராக உள்ள இந்திய முஸ்லீம்களும் மற்ற மதங்களை சார்ந்தவர்களிடத்தில் உள்ள இஸ்லாம் பற்றிய அச்சங்கள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க இதுப்போன்ற கலந்துரையாடல்களை நடத்துவது காலத்தின் அவசியம்.
"100,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் இஸ்லாம் பற்றி மேலும் அறியவும் மற்றும் முஸ்லிம்களுடன் உரையாடுவதற்கும் இது ஒரு வாய்ப்பை அளிக்கிறது," என ஜெர்மனியின் முஸ்லீம் ஒருங்கிணைப்புக் குழுவின் (KRM) செய்தித் தொடர்பாளர் Burhan Kesici, தி அனடூலு செய்தி நிறுவனம் மேற்கோளிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, 900 ஜெர்மன் மஸ்ஜிதுகளில் உள்ள இமாம்கள் இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் பற்றிய விளக்கங்களை மாற்று மதத்தவர்களுக்கு அளித்தனர். மேலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 3 ம் தேதி, ஜெர்மனியில் உள்ள முஸ்லீம் சமூகம் மசூதி திறப்பு தினத்திற்காக வெவ்வேறு மதங்களின் பார்வையாளர்களை வரவேற்கிறது.
"பொதுமக்களுக்கு எங்கள் கதவுகளைத் திறப்பதன் மூலம், முஸ்லீம்கள் வெளிப்படையானவர்கள் என்பதையும், உரையாடலுக்கு காத்திருக்கிறோம் என்பதையும், மேலும் இந்த சமுதாயத்தில் முஸ்லீம்களும் ஒரு அங்கம் என்பதையும் நாங்கள் காட்ட விரும்புகின்றோம் என்று கேசிசி விளக்கினார்.
"மக்கள் எதைப் பற்றி குறைவாக தெரிந்து வைத்துள்ளார்களோ, அதைப் பற்றி மேலும் கவலையும் அச்சமும் கொள்வது இயல்பானது. அத்தகைய அச்சங்கள் மற்றவர்களுடைய கெட்ட எண்ணங்கள் மற்றும் பிரச்சாரத்தால் மேலும் அதிகமாக்கப்படலாம். மேலும் வெளிப்படைத்தன்மையும், பேச்சுவார்த்தையும் மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதும் இந்த பிரச்சினைக்கு தீர்வாக அமையும். "என்று கேசிசி விளக்கமளித்தார்.
81 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி, மேற்கு ஐரோப்பாவில் பிரான்சிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய முஸ்லீம் மக்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினராக உள்ள இந்திய முஸ்லீம்களும் மற்ற மதங்களை சார்ந்தவர்களிடத்தில் உள்ள இஸ்லாம் பற்றிய அச்சங்கள் மற்றும் சந்தேகங்களை தீர்க்க இதுப்போன்ற கலந்துரையாடல்களை நடத்துவது காலத்தின் அவசியம்.
கருத்துகள்
கருத்துரையிடுக