சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜெர்மன் கத்தோலிக்க பாதிரியார்கள்
ஜெர்மன் கத்தோலிக்க பாதிரியர்கள் 3677 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
ஜெர்மனி கத்தோலிக்க சபையால் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கசிந்தது. அந்த அறிக்கையின் படி 1946 முதல் 2014 வரை 3677 சிறுவர்கள் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஆறில் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
1670 மத குருமார்கள் பாலியல் துஷ்பிரயோக குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
தேவாலயத்தின் செய்தி தொடர்பாளர் இச்செயல் வெட்கக்கேடானது என்று சொல்லி தன் கண்டனத்தை கூறியுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 38% மதக்குருமார்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அதுவும் சிறிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
27 ஜேர்மன் மறைமாவட்டங்களில் இருந்து 38,000 ஆவணங்களைப் பயன்படுத்தி, மூன்று ஜேர்மன் பல்கலைக் கழகங்களால் இந்த ஆய்வு தொகுக்கப்பட்டன. பல ஆவணங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அதன் ஆய்வு ஆசிரியர்கள் துஷ்பிரயோகத்தின் உண்மையான அளவு இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
கிறிஸ்தவ மதக்குருமார்களால் உலகம் முழுவதும் சிறுவர்களும் பெண்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வல்லரசு நாடான ஜெர்மனியும் கிறிஸ்தவ மதக்குருமார்களின் பாலியல் தொல்லைக்கு தப்பவில்லை.
இனியாவது விழித்து கொள்வார்களா?
https://www.google.co.in/amp/s/www.bbc.co.uk/news/amp/world-europe-45500072
ஜெர்மனி கத்தோலிக்க சபையால் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமங்களை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கசிந்தது. அந்த அறிக்கையின் படி 1946 முதல் 2014 வரை 3677 சிறுவர்கள் பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும் 13 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஆறில் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
1670 மத குருமார்கள் பாலியல் துஷ்பிரயோக குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
தேவாலயத்தின் செய்தி தொடர்பாளர் இச்செயல் வெட்கக்கேடானது என்று சொல்லி தன் கண்டனத்தை கூறியுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் 38% மதக்குருமார்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அதுவும் சிறிய ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
27 ஜேர்மன் மறைமாவட்டங்களில் இருந்து 38,000 ஆவணங்களைப் பயன்படுத்தி, மூன்று ஜேர்மன் பல்கலைக் கழகங்களால் இந்த ஆய்வு தொகுக்கப்பட்டன. பல ஆவணங்கள் அழிக்கப்பட்ட நிலையில் அதன் ஆய்வு ஆசிரியர்கள் துஷ்பிரயோகத்தின் உண்மையான அளவு இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
கிறிஸ்தவ மதக்குருமார்களால் உலகம் முழுவதும் சிறுவர்களும் பெண்களும் பாதிக்கப்பட்ட நிலையில் வல்லரசு நாடான ஜெர்மனியும் கிறிஸ்தவ மதக்குருமார்களின் பாலியல் தொல்லைக்கு தப்பவில்லை.
இனியாவது விழித்து கொள்வார்களா?
https://www.google.co.in/amp/s/www.bbc.co.uk/news/amp/world-europe-45500072
கருத்துகள்
கருத்துரையிடுக