திரித்துவத்தை நிராகரிக்கும் குர்ஆனும் பைபிளும்

திரித்துவத்தை நிராகரிக்கும் குர்ஆனும் பைபிளும்




✍இயேசு உட்பட இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவ இறைவனை நம்பி வழி கெட்ட கிறிஸ்தவர்கள் தறிகெட்டு நரகம் நோக்கி பாயுகின்றனர். உண்மையில் இவர்கள் நம்பும் வேதமான பைபிளும் திரித்துவத்தை நிராகரிக்கிறது. கிறிஸ்தவர்கள் இறைவன் என்று வணங்கும் இயேசுவும் கர்த்தர் ஒருவரையே தேவன் என்று போதிக்கிறார்.

✍முந்தைய தீர்க்கதரிசிகள் எதை அடிப்படையாக கொண்டு தன் மக்களை வழிநடத்தினார்களோ அதன் பக்கமே குர்ஆனும் அழைக்கின்றது. இருந்தபோதும் தங்கள் மனங்களில் உள்ள அறியாமையின் காரணமாகவே இஸ்லாத்தை கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கின்றனர். இஸ்ரவேலர்களின் தூதராக இயேசு வந்த போது யூதர்கள் தங்களிடம் உள்ள அறியாமையின் காரணமாகவே இயேசுவை நிராகரித்தனர். அதே தவறை கிறிஸ்தவர்கள் செய்து தங்கள் அறியாமையை காட்டுகின்றனர்.

✍திரித்துவத்தை பைபிள் போதிக்கவில்லை என்றாலும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக அது உள்ளது. திரித்துவத்தை குர்ஆன் தெள்ளத்தெளிவாக நிராகரித்து அல்லாஹ் ஒருவனே இறைவன் என்பதை உறுதிப்படுத்துகிறது. பைபிளும் குர்ஆனின் செய்தியை உண்மைப்படுத்தி அதற்கு சாட்சியம் பகருகின்றது.

குர்ஆன்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் (இவ்வாறு) சொல்வதை விட்டும்  விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
(அல்குர்ஆன் 5:73)

பழைய ஏற்பாடு:-
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;

5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்;
(யாத்திராகமம் 20)

4. இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
(உபாகமம் 6:4)

புதிய ஏற்பாடு:-
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
(மாற்கு 12)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்