சீனாவின் முஸ்லீம் இன சுத்திகரிப்பு

சீனாவின் முஸ்லீம் இன சுத்திகரிப்பு





"அல்-அன்டலுசியாவின் கடைசி முஸ்லீம் மாநிலமான கிரேனாடாவின் நஸ்ரிட் எமிரேட் ஐபீரிய தீபகற்பத்தில் 781 ஆண்டுகால முஸ்லீம்களின் ஆட்சியை கடந்து 1492 ஆம் ஆண்டில் விழுந்தது.

ஒரு தசாப்தம் கழித்து, 1502 ல் ஸ்பெயினில் [கிறிஸ்தவ] காஸ்டிலியர்கள் இஸ்லாமைத் தடை செய்தனர்.

ஸ்பெயினில் இருந்த முஸ்லிம்கள் (அரேபியர்கள் மற்றும் பெர்பர்கள்) ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாற வற்புறுத்தப்பட்டனர். மதம் மாறாதவர்கள் கொல்லப்பட்டனர். 1492க்குப் பிறகு கிறித்துவ மதத்திற்கு மாறிய முஸ்லிம்கள் 'மொரிசோஸ்' என்று அழைக்கப்பட்டனர்.

மொரிஸ்கோ கிளர்ச்சியாளர்களின் கடைசி இருப்பிடம் கிரானடாவின் புறநகர் பகுதியில் உள்ள அல்புஜாராஸ் மலைகள் ஆகும்.

காஸ்டிலியர்கள் நடைமுறைப்படுத்திய கொள்கைகளில் ஒன்று, வருடத்திற்கு இருமுறை அல்புஜராஸ் மலைத்தொடர்களுக்கு தங்களது வீரர்களை அனுப்பி வைத்து பன்றிகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகிறதா மற்றும் பன்றி உணவு உட்கொள்ளப்படுகிறதா என்று ஆய்வு செய்வார்கள்.

காஸ்டியன் வீரர்கள் மொரிசியஸின் வீடுகளில் நுழைந்து தங்கள் முன்னிலையில் பன்றி இறைச்சி சாப்பிட சொல்வார்கள். பன்றி இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் புதிய அரசு மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு தங்களது விசுவாசத்தை காட்ட சொல்லுவார்கள்.

பன்றி இறைச்சியை சாப்பிடும்போது  வாந்தி எடுத்தாலோ அல்லது முகம் சுளித்தாலோ, அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இறுதியில் கொல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்த்தவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

1609 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் மன்னரான பிலிப் III, மொரிசோஸின் மீது நம்பிக்கையிழந்து அவர்களை ஸ்பெயினை விட்டும் வெளியேற்றினார்.

இது 500 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பெயினில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம். இன்று அது மறுரூபமெடுத்து சீனாவில் முஸ்லீம்களுக்கெதிராக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பத்து இலட்சத்திற்கும் அதிகமான உய்கூர் முஸ்லீம்கள் சீன அரசாங்கத்தால் சித்ரவதை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு மதுபானம் அருந்தவும் பன்றி இறைச்சி உண்ணவும் வற்புறுத்தப்படுகின்றனர். அவர்களது இஸ்லாமிய அடையாளங்களை அழிக்க சீன முற்படுகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) இந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில் "சீன அதிகாரிகள் சின்சியாங் பகுதி வீடுகளில் தங்கி அவர்களை கண்கானிப்பதை ஒரு திட்டமாக அமல்படுத்துகின்றனர்" என்று தெரிவித்துள்ளது.

சீன அதிகாரிகளின் வருகையின் போது, வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரங்கள் பற்றியும் அரசியல் கருத்துக்களையும் பற்றி அதிகாரிகளுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உய்கூர் மக்கள் உள்ளனர், மேலும் அவர்களுக்கு அரசியல் பாடங்களும் எடுக்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் முன்னிலையில் உய்கூர் முஸ்லீம்கள் உண்ணவும் தூங்கவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். 

ஜின்ஜியாங் பல்கலைக்கழகத்தின் சீன வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மில்வர்ட் கூறுகையில், "கலாச்சார சுத்திகரிப்பு என்பது ஜின்ஜியாங் பிரச்சனைக்கு  தீர்வு காண பெய்ஜிங்கின் இறுதி முயற்சியாகும்" என்கிறார்.

நியூ ஆர்லியன்ஸில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான ரையன் தும் கூறுகையில், சீனாவின் மறு கல்வி முறை வரலாற்றில் மோசமான மனித உரிமை மீறல்களில் சிலவற்றை எதிரொலிக்கிறது" என்கிறார்.

https://www.google.co.uk/amp/s/www.independent.co.uk/news/world/asia/china-re-education-muslims-ramadan-xinjiang-eat-pork-alcohol-communist-xi-jinping-a8357966.html%3famp

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்