இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரியின் சாட்சியம்
இஸ்லாத்தை ஏற்ற கிறிஸ்தவ சகோதரியின் சாட்சியம்
எனது தாய் செவன்த் டே என்ற கிறிஸ்தவ பிரிவை பின்பற்றக்கூடியவர். எனது தந்தை ஆலயத் தொடர்பு அதிகம் இல்லாதவர். நான் சிறு வயது முதல் ஆலயத்திற்கு அதிகம் செல்லக்கூடியவள். துரதிஷ்டவசமாக நான் படித்த கிறிஸ்தவ பள்ளியில் சிறு வயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். பிறகு 6 முதல் 12 வயது வரை கிறிஸ்தவ அமைச்சராக இருந்த எனது இசை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். இதனை கண்டு வெறுத்து போய் கிறிஸ்தவத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்தேன். கிறிஸ்தவ நம்பிக்கையை துறந்தேன். நாத்திக கொள்கைகளை பின்பற்றினேன். மது அருந்த ஆரம்பித்தேன்.
எனது கணவனின் மூலம் எனக்கு நேர் வழி கிடைக்க ஆரம்பித்தது. என் கணவனின் பெயர் ரையான். அவர் நாத்திகவாதியாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். அவர் நாத்திகவாதியாக இருந்தபோது குடிபோதையில் தனது வாழ்க்கையை அழித்து கொண்டிருந்தார். பிறகு மனதளவில் இறைவன் இருப்பதை உணர்ந்து கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டவர். எனது கணவர் என்னை ஆலயத்திற்குன அழைத்தார். தயங்கினேன். இருந்தாலும் அவர்கூட சென்றேன். பல நல்ல மனிதர்களை சந்தித்தேன். எனது சிறு வயது சர்ச்சில் சந்தித்த பாலியல் துஷ்பிரயோகங்களை மறந்து சர்ச்சோடு ஈடுபாடு கொண்டேன். அதே சமயம் மற்ற கிறிஸ்தவ பிரிவுகளையும் மதங்களையும் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
எங்கள் குரு குருநானக் படித்த வேதம் குர்ஆன் என்றும், குர்ஆன் கிறிஸ்தவத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்று சொல்லி குர்ஆனை படிக்க எனது சிங் நண்பர்கள் என்னை ஆர்வமூட்டினார்கள். பிறகு எனது முஸ்லீம் நண்பர்கள் மூலமாக குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன்.
குர்ஆனில் சில தெளிவுகள் கிடைத்த போதிலும் அதை கொண்டு முழுமையாக திருப்தி அடையவில்லை. முஸ்லீம்களை பற்றி அதிகம் தெரியாது கொள்ள மஸ்ஜித் சென்றேன். மஸ்ஜிதில் இருந்து புர்கா அணிந்த வெளிநாட்டவர்கள் தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆச்சரியம். புர்கா அணிந்த என் நாட்டவர்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் சலாம் சொல்லி என்னிடம் நல்ல முறையில் பேசினார்கள்.
பிறகு புர்கா அணிந்த எகிப்து நாட்டை சார்ந்த பெண் வந்தார். என்னை கண்டு என்னுடன் இனிய முறையில் பேசினார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டேன். தன்னை அழைத்து செல்லவில்லையே என் கணவர் கோபித்து கொண்டார். பிறகு முஸ்லீம்கள் ஒரு நாளைக்கு 5 முறை தொழுவார்கள் என்பதை அறிந்து அதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். எகிப்திய பெண்மணியை தொடர்பு கொண்டு எந்நேரம் என் கணவர் மஸ்ஜித் செல்லலாம் என்று கேட்டு தெரிந்து கொண்டேன். பிறகு மக்ரிப் நேர தொழுகைக்கு என் கணவரை அங்கு அனுப்பினேன். அங்கு சென்ற என் கணவர் வீட்டிற்கு திரும்ப வர வெகு நேரம் ஆனது. இதனால் நான் கவலையுற்றேன். சிறுது நேரம் கழித்து என் கணவர் முகமகிழ்ச்சியுடன் திரும்பினார். அவர் மேல் அத்தர் வாசனை அடித்தது. நான் முஸ்லீமாக மாறி விட்டேன் என்று என் கணவர் என்னிடம் கூறினார். பிறகு என் கணவரை அழைத்து கொண்டு அந்த இமாமிடம் சென்றேன். பைபிளை கொண்டு அவரிடம் வாதம் செய்தேன். ஆனால் அவர் என்னை காட்டிலும் பைபிளை அதிகம் தெரிந்தவராக இருந்தார். பைபிள் வசனங்கள் எவ்வாறெல்லாம் இஸ்லாத்தை உண்மைப்படுத்துகின்றது என்பதை பைபிள் வசனங்களோடு தெளிவுப்படுத்தினார். அந்த இமாம் கூறிய பைபிள் வசனங்களை என்னால் மறுக்க முடியவில்லை. பிறகு அந்த இமாம் அல் பாத்திஹா மற்றும் மர்யம் அத்தியாயங்களை குர்ஆனில் ஓத ஆரம்பித்தார். என் மனம் இஸ்லாத்தின் பக்கம் நெருங்கியது. சத்தியத்தை உணர்ந்தேன். இஸ்லாத்தை ஏற்று கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...
எனது தாய் செவன்த் டே என்ற கிறிஸ்தவ பிரிவை பின்பற்றக்கூடியவர். எனது தந்தை ஆலயத் தொடர்பு அதிகம் இல்லாதவர். நான் சிறு வயது முதல் ஆலயத்திற்கு அதிகம் செல்லக்கூடியவள். துரதிஷ்டவசமாக நான் படித்த கிறிஸ்தவ பள்ளியில் சிறு வயதிலேயே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். பிறகு 6 முதல் 12 வயது வரை கிறிஸ்தவ அமைச்சராக இருந்த எனது இசை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன். இதனை கண்டு வெறுத்து போய் கிறிஸ்தவத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்தேன். கிறிஸ்தவ நம்பிக்கையை துறந்தேன். நாத்திக கொள்கைகளை பின்பற்றினேன். மது அருந்த ஆரம்பித்தேன்.
எனது கணவனின் மூலம் எனக்கு நேர் வழி கிடைக்க ஆரம்பித்தது. என் கணவனின் பெயர் ரையான். அவர் நாத்திகவாதியாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். அவர் நாத்திகவாதியாக இருந்தபோது குடிபோதையில் தனது வாழ்க்கையை அழித்து கொண்டிருந்தார். பிறகு மனதளவில் இறைவன் இருப்பதை உணர்ந்து கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டவர். எனது கணவர் என்னை ஆலயத்திற்குன அழைத்தார். தயங்கினேன். இருந்தாலும் அவர்கூட சென்றேன். பல நல்ல மனிதர்களை சந்தித்தேன். எனது சிறு வயது சர்ச்சில் சந்தித்த பாலியல் துஷ்பிரயோகங்களை மறந்து சர்ச்சோடு ஈடுபாடு கொண்டேன். அதே சமயம் மற்ற கிறிஸ்தவ பிரிவுகளையும் மதங்களையும் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்தேன்.
எங்கள் குரு குருநானக் படித்த வேதம் குர்ஆன் என்றும், குர்ஆன் கிறிஸ்தவத்தோடு நெருங்கிய தொடர்புடையது என்று சொல்லி குர்ஆனை படிக்க எனது சிங் நண்பர்கள் என்னை ஆர்வமூட்டினார்கள். பிறகு எனது முஸ்லீம் நண்பர்கள் மூலமாக குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன்.
குர்ஆனில் சில தெளிவுகள் கிடைத்த போதிலும் அதை கொண்டு முழுமையாக திருப்தி அடையவில்லை. முஸ்லீம்களை பற்றி அதிகம் தெரியாது கொள்ள மஸ்ஜித் சென்றேன். மஸ்ஜிதில் இருந்து புர்கா அணிந்த வெளிநாட்டவர்கள் தான் வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆச்சரியம். புர்கா அணிந்த என் நாட்டவர்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் சலாம் சொல்லி என்னிடம் நல்ல முறையில் பேசினார்கள்.
பிறகு புர்கா அணிந்த எகிப்து நாட்டை சார்ந்த பெண் வந்தார். என்னை கண்டு என்னுடன் இனிய முறையில் பேசினார். அவரது தொலைபேசி எண்ணை வாங்கி கொண்டேன். தன்னை அழைத்து செல்லவில்லையே என் கணவர் கோபித்து கொண்டார். பிறகு முஸ்லீம்கள் ஒரு நாளைக்கு 5 முறை தொழுவார்கள் என்பதை அறிந்து அதை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். எகிப்திய பெண்மணியை தொடர்பு கொண்டு எந்நேரம் என் கணவர் மஸ்ஜித் செல்லலாம் என்று கேட்டு தெரிந்து கொண்டேன். பிறகு மக்ரிப் நேர தொழுகைக்கு என் கணவரை அங்கு அனுப்பினேன். அங்கு சென்ற என் கணவர் வீட்டிற்கு திரும்ப வர வெகு நேரம் ஆனது. இதனால் நான் கவலையுற்றேன். சிறுது நேரம் கழித்து என் கணவர் முகமகிழ்ச்சியுடன் திரும்பினார். அவர் மேல் அத்தர் வாசனை அடித்தது. நான் முஸ்லீமாக மாறி விட்டேன் என்று என் கணவர் என்னிடம் கூறினார். பிறகு என் கணவரை அழைத்து கொண்டு அந்த இமாமிடம் சென்றேன். பைபிளை கொண்டு அவரிடம் வாதம் செய்தேன். ஆனால் அவர் என்னை காட்டிலும் பைபிளை அதிகம் தெரிந்தவராக இருந்தார். பைபிள் வசனங்கள் எவ்வாறெல்லாம் இஸ்லாத்தை உண்மைப்படுத்துகின்றது என்பதை பைபிள் வசனங்களோடு தெளிவுப்படுத்தினார். அந்த இமாம் கூறிய பைபிள் வசனங்களை என்னால் மறுக்க முடியவில்லை. பிறகு அந்த இமாம் அல் பாத்திஹா மற்றும் மர்யம் அத்தியாயங்களை குர்ஆனில் ஓத ஆரம்பித்தார். என் மனம் இஸ்லாத்தின் பக்கம் நெருங்கியது. சத்தியத்தை உணர்ந்தேன். இஸ்லாத்தை ஏற்று கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்...
கருத்துகள்
கருத்துரையிடுக