பிற மதத்தவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கிறதா?

⭐⭐பிற மதத்தவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கிறதா?⭐⭐



 

▶️(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 9:5)


✍மேற்கண்ட வசனம் முஸ்லீம் அல்லாதவர்களால் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வசனமாக உள்ளது. காபிர்களை கொல்ல சொல்ல குர்ஆன் போதிப்பதாக கிறிஸ்தவர்களாலும் பாசிசவாதிகளாலும் திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

✍எந்த வசனத்தையும் அதன் முன்பின் வசனத்தோடு படிக்கும்போது தான் அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் மேற்கண்ட வசனத்தை(குர்ஆன் 9:5) முன்பின் வசனங்களோடு படிக்கும்போது அந்த வசனம் முஸ்லீம்களோடு யுத்தம் புரிந்து அதன் பின்னர் சமாதான ஒப்பந்தம் செய்து, பிறகு அதை மீறிய மக்கத்து காபிர்கள் பற்றி பேசுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.


▶️(முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.
(அல்குர்ஆன் 9:1)

✍மேற்கண்ட வசனத்தில் சொல்லப்பட்ட  முஸ்லிம்களுடன் உடன்படிக்கை செய்திருந்த முஷ்ரிக்குகள் மக்கத்து காபிர்கள் ஆவார்கள். அவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை விட்டுப் அல்லாஹ்வும் அவனது தூதரும் விலகி கொண்டதாக சொல்லப்படுகிறது. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏன் முஷ்ரிக்குகளுடன் செய்த உடன்படிக்கையை விட்டும் விலகினார்கள் என்பதையும் அதே அத்தியாயம் சொல்கிறது.


▶️தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு, (நம்) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறுதி மீறி உங்களைத் தாக்க) முதல் முறையாக துவங்கினர்; நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? (அப்படியல்ல!) நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனேதான்.
(அல்குர்ஆன் 9:13)

✍முஸ்லிம்களுடன் செய்த உடன்படிக்கையை முதலில் மீறியவர்கள் மக்கத்து முஷ்ரிக்குகள் தான் என்றும், அவர்கள் அல்லாஹ்வின் தூதரை வெளியேற்ற திட்டமிட்டு இருந்ததையும் மேற்கண்ட வசனம் சொல்கிறது. இதுவே முஸ்லீம்கள் முஷ்ரிக்குகளுடன் செய்த உடன்படிக்கையை விட்டும் விலகி மக்கத்து காபிர்களுடன் யுத்தம் அறிவிக்க காரணமாக இருந்தது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍அதே சமயம் முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அதை மீறாமல் கடைபிடித்து வருபவர்களுடன் நல்லமுறையில் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற சொல்கிறான்.

▶️ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் 9:4)

✍சமாதானத்தை விரும்பும் மக்களுடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது என்பதை மார்க்க கடமையாகவும், பயபக்தியாகவும் அல்லாஹ் முஸ்லீம்களுக்கு சொல்கிறான். சமாதானத்தை விரும்புவருடன் சமாதனத்தையும், போரை விரும்புவருடன் இருந்து தம் நாட்டு மக்களை காப்பாற்ற போர் கொடுக்கவும் ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் உரிமையும் அதற்கான கடமையும் உண்டு என்பதை எவராலும் மறுக்க முடியாது. இதை தான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
✍யுத்தம் என்பது போர் புரிபவர்களுடன் தானே தவிர சமாதானத்தை விரும்புவர்களுடன் அல்ல என்பதையும் குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது.

▶️உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் 2:190)

✍இஸ்லாம் நடத்திய யுத்தங்கள் யாவும் தினிக்கப்பட்டவையே தவிர தீர்மாணிக்கப்பட்டதல்ல. இஸ்லாம் சமாதானத்தையே போதிக்கிறது.

▶️அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 8:61)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்