யார் பரம்பொருள்?

யார் பரம்பொருள்?





✍ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உயர்ந்த கொள்கைக்கு மாறாக போதிக்கப்படும் பல தெய்வ கோட்பாடானது  தனது இயல்பிலேயே பல முரண்பாடுகளையும், தன்னை பின்பற்றும் மக்களுக்கிடையே உயர்வு தாழ்வையும் போதிக்கிறது என்பதற்கு இந்து மதம் மாபெரும் சான்றாக உள்ளது. யார் பரம்பொருள்(பரம்பிரம்மம்) என்பதை தனது விசுவாசிகளுக்கு சொல்வதில் இந்து மத வேதங்கள் தோல்வியை அடைந்து விட்டன. ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.

💎விஷ்ணு💎

✍கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு தனது விஸ்வரூப காட்டும்போது எல்லா தேவர்களும் (சிவன், பிரம்மா,,....) தனக்குள் இருப்பதாக கூறுகிறார்(?)

➡️Bg 11.15 — அர்ஜுனன் கூறினான்: எனது அன்பிற்குரிய இறைவனே, கிருஷ்ணா! எல்லா தேவர்களும், பற்பல இதர உயிரினங்களும் உமது உடலில் சிறப்பாக வீற்றிருப்பதை நான் காண்கிறேன். தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரம்மதேவர், சிவபெருமான், பல்வேறு ரிஷிகள் மற்றும் திவ்யமான நாகங்களையும் நான் காண்கின்றேன்.


கீதையில், 10 அத்தியாயத்தில் நேரடியாக கிருஷ்ணர் கூறுவதாவது  ...

➡️Bg 10.8 — ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. - கிருஷ்ணர் கூறுகிறாரே ?


✍மேற்கண்ட வசனங்கள் மூலம் விஷ்ணுவை பரம்பொருள் என்று சித்தரிக்கின்றன.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
💎சிவன்💎

✍ருத்ர உபநிஷத்தில் ருத்ரா மற்றும் உமாவின் கலப்பு தான் விஷ்ணு என்று சொல்லப்படுகிறது.

➡️“umaa sha~Nkarayogo yaH sa yogo vishhNuruchyate |” (Rudra Hridayopanishad 1:11)
“The combination of Uma and Sankara is Vishnu”.

✍அதனால் தான் என்னவோ விஷ்ணு தனது அவதாரங்கள் அனைத்திலும் சிவனை வழிபடுகிறார் போலும். விஷ்ணு தந்தை ஸ்தானத்தில் சிவன் மேற்கண்ட வசனத்தில் போற்றப்படுகின்றார். 


➡️“paramo.asmi paraatparaH” (Maitreya Upa. 3:10)
“I am the supreme, greater than the great”
"நானே உயர்ந்தவன், பெரியோரிலும் பெரியவன்".


✍மைத்ரிய உபநிஷம் தானே பரம்பொருள் என்று சிவன் கூறுவதாக சொல்கிறது.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
🌟பிரம்மா🌟

✍சிவன் விஷ்ணுவை மட்டுமல்ல, பிரம்மாவையும் பரம்பொருள் என்று இந்து வேதங்கள் சொல்கின்றது. ஆரம்பத்தில் பிரம்மாவை தவிர வேறு யாரும் இருந்ததில்லை என்று யஜூர் வேதம் சொல்கிறது.

Yajurveda Shatapatha Brahmana 6.1.3.1

➡️Verily, Prajâpati [#Brahma] #alone_was_here_in_the_beginning. He desired, 'May I exist, may I reproduce myself!' He toiled, he practised austerity (or, became heated). From him, worn out and heated, the waters were created: from that heated Person the waters are born.

✍யஜூர் வேதத்தில் சொல்லப்பட்ட பிரஜாபதி என்பது படைக்கும் கடவுளை குறிக்கும் சொல். இந்த சொல் பிரம்மாவை பரம்பிரம்மனாக காட்டுகிறது.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍முரண்பாட்டின் மொத்த உருவமான இந்து மத வேதங்கள் பிரம்மாவையும் சிவனையும் விஷ்ணுவையும்   பரம்பொருள் என்று சொல்லி இந்துக்களை குழப்புகிறது. இத்தகைய குழப்பம் இந்து மதம் பின்பற்ற தகுதியற்றது என்பதை உண்மைப்படுத்துகிறது.

✍சைவர்களின் வேதங்களை வைணவர்கள் மறுப்பதும், வைணவர்களின் வேதங்களை சைவர்கள் மறுப்பதும் இந்துக்களது வேதங்கள் கறைப்பட்டு விட்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.

✍இப்படி ஒட்டுமொத்தமான முரண்பாட்டையும் கொண்டது தான் இந்து வேதங்கள். இந்து வேதங்கள் கறைப்பட்டுவிட்டன என்று இந்துக்களான நீங்களே சாட்சியம் அளிக்கும்போது அதை நம்பி தங்கள் வாழ்க்கையை எவ்வாறு அமைத்து கொள்ள முடியும்?


✍கறைப்படிந்த வேதங்கள் தங்கள் தேவர்களை பிரம்மனாக காட்ட முயலுகின்றன. அதனால் முரண்படுகின்றன. உண்மையில் உருவம் போதிக்கப்படாத பிரம்மன் தான் அனைத்தையும் படைத்ததாக வேதங்கள் தெளிவாக சொல்கின்றன. அந்த தேவனின்  உருவம் போதிக்கப்படவில்லை  என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

✍வேதங்கள் சொல்லும் பரம்பொருளை  தவிர மற்றவர்கள எல்லோரும் தேவர்களே. அவர்கள் இறைவன் அல்ல.

✍பரம்பிரம்மனின் உருவம் இந்து மத வேதங்களில் எங்கும் சொல்லப்படவில்லை என்பதே உண்மை. வைணவர்கள் வேதங்களை கறைப்படுத்திவிட்டார்கள் என்பது சைவர்களின் குற்றச்சாட்டு. சைவர்கள் தங்கள் வேதங்களை கறைப்படுத்தி விட்டார்கள் என்பது வைணவர்களின் குற்றச்சாட்டு. தங்கள் வேதங்கள் சைவர்களாலும் வைணவர்களாலும் கறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சைவர்களும் வைணவர்களும் சாட்சியம் அளிக்கின்றனர். அதனால் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா போன்றோரை பரம்பிரம்மன் என்று சொல்லி
இந்து மத வேதங்கள் முரண்படுகின்றன. முரண்பட்ட விஷயங்களை நம்பி நம் வாழ்க்கையை நாம் அழித்து கொள்ள முடியாது.


➡️அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்
(பகவத் கீதை 7:24)

பொருள்: அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும் அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை அறிந்து கொள்ளாமல் புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று கருதுகின்றனர்.

✍புலன்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்று பகவத் கீதை சொல்கிறது. பரம்பிரம்மனின் உருவத்தை மறுமையில் தான் பார்க்க முடியும். உருவம் போதிக்கப்படாத பரம்பொருளை சிலை வழிபாடு கொண்டு அடைய முடியாது. ஆதாரமற்ற சிலை வழிபாடு நரகத்தையே கூலியாக தரும். அதனால் சிலை வழிபாடு இல்லாத நிலையில் அந்த பரம்பிரம்மனை மனதில் தியானித்து அதன் மூலம் முக்தியடைய வேண்டும் என்பதே சத்தியமாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்