சூரா அல் பாத்திஹா இம்ரு அல்'கைஸின் கவிதையில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா?

🌟🌟 சூரா அல் பாத்திஹா இம்ரு அல்'கைஸின் கவிதையில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா? 🌟🌟




✍பைபிள் மீது முஸ்லீம்கள் செய்யும் நியாயமான விமர்சனத்தை தாங்கி கொள்ள முடியாத கிறிஸ்தவர்கள் குர்ஆனின் மீது அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர்.         

✍குர்ஆனில் உள்ள சூராஅல் பாத்திஹா   இம்ரு அல்'கைஸின் கவிதையில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக பொய்யை இட்டுகட்டுகின்றனர்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இதோ அவர்கள் கொடுக்கும் ஆதாரம்:
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

யாநபி உ'ல் இஸ்லாம், பக்கம் 9-10:

...... இஸ்லாத்திற்கு முன்னான காலங்களில் அராபாவில் இருந்த காபாவில் கவிதை பலகைகளை தொங்கவிடுவது வழக்கமாக இருந்தது. அவற்றில் சபா இம்ரு அல்-கைஸ் அவர்களின் ஏழு மு'அல்லக்கத்துக்களும் தொங்கவிடப்பட்டிருந்தது.

        ஒருமுறை பாத்திமா (ரலி) அவர்கள், குரானின் (சில) ஆயத்துக்களை ஓதிக்கொண்டே சென்றார்கள். வரும் வழியில், இம்ரு அல் கைஸின் மகள், அவர் ஓதிக்கொண்டு வந்ததை கேட்டு, அவரிடம் :

        "ஓ பாத்திமாவே !, இது என் தகப்பனாரின் கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டது !. இதனை உன் தந்தை, சொர்க்கத்திலிருந்து வந்ததாக பொய்யுரைத்தார்”, என்றார்கள்.
(பின்பு இந்த கவிதைகளை பாத்திமாவிடம் அவர் காட்டியதாகவும் கூறப்பட்டது)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍யா நபி உல் இஸ்லாம் என்ற பெயரை கேட்டவுடன் இந்த புத்தகத்தை எழுதியது முஸ்லீம்கள் என்று சிலர் நினைக்கக்கூடும். இதில் தான் கிறிஸ்தவர்களின் தந்திரம் அடங்கியுள்ளது.

✍கிறிஸ்தவர்கள் ஆதாரமாக கொடுக்கும் யா நபி உல் இஸ்லாம் என்ற புத்தகம் "சர்ச் ஆஃப் இங்கிலாந்து" என்ற மிஷனரியில் செயலாளராக(secretary)   வேலை பார்த்து வந்த ஒரு கிறிஸ்தவரான  William St. Clair Tisdall (1859–1928)  எழுதப்பட்ட புத்தகம். எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக இஸ்லாத்தை விமர்சித்து எழுதிய  இவரது புத்தகத்தை  எவ்வாறு ஆதாரமாக எடுத்து கொள்ள முடியும்? இந்த புத்தகத்தில் முன் வைக்கும் குற்றச்சாட்டிற்கு எந்த வித ஆதாரத்தையும் நூலின் ஆசிரியர் பதிவு செய்யவில்லை. ஆதாரப்பூர்வமான தகவல் அடிப்படையில்  முஸ்லீம்களால் எழுதப்பட்ட பைபிள் விமர்சனத்தை சற்றும் சிந்திக்க தயாரில்லாத கிறிஸ்தவர்களால், கிறிஸ்தவரால் எழுதப்பட்ட குர்ஆன் விமர்சனத்தை முஸ்லீம்களிடம் ஆதாரமாக காட்டி தங்கள் அறியாமையை காட்டுகின்றனர்.


✍சூரா அல் பாத்திஹா அல்லாஹ்வினால் தான் அருளப்பட்டது என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

➡️(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.
(அல்குர்ஆன் 15:87)


➡️4474. அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள. நான் அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழு.து முடித்த பின்), அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் அழைத்தபோது) நான் தொழுது கொண்டிருந்தேன் என்று சொன்னேன், அதற்கு அவர்கள், உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன் பக்கம், இறைத்ததூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (விரைந்து) பதிலளியுங்கள் என்று (8-24ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா என்று கேட்டார்கள்-(7). பிறகு என்னிடம், குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன் என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவ மிக்க ஓர் அத்தியாயத்தை நான் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அலஃபாத்திஹா அத்தியாயம்)தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும்-(8). எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆன் ஆகும் என்று சொன்னார்கள்.
(ஸஹீஹ் புகாரி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்