அறிவியல் முன்னேற்றத்தில் முஸ்லீம்களின் பங்கு

அறிவியல் முன்னேற்றத்தில் முஸ்லீம்களின் பங்கு



இன்று உலகில் ஏற்பட்டுள்ள அதிகமான கண்டுபிடிப்புகளின் உண்மையான சொந்தக்காரர்கள் முஸ்லிம்களாகவே இருக்கின்றனர் என்பதை உலக வரலாற்றையும், இஸ்லாமிய வரலாற்றையும் உலகில் முஸ்லிம் ஸ்பெய்ன் ஏற்படுத்திய மாற்றத்தையும் வாசிக்கும் எவராலும் புரிந்து கொள்ள முடியும். இன்றைய உலகம் அனைத்து விதமான சமூகவியல் கலைகள், அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாயகமாக ஐரோப்பாவையும் அவற்றின் தந்தைகளாக ஐரோப்பியர்களையும் அடையாளப்படுத்தி அனைத்து பாடத்திட்டங்களிலும் அவற்றை உள்நுழைத்து விட்டது. ஆனால் ஐரோப்பியர்கள் இருளில் மூழ்கி இருந்த போது முஸ்லிம் ஸ்பெய்னின் சிறார்கள் பாடசாலை சென்று கொண்டிருந்தனர். 6ம் நூற்றாண்டு தொடக்கம் கைத்தொழில் புரட்சிவரை ஐரோப்பாவை இருண்ட கண்டம் என்றே உலகம் அடையாளப்படுத்துகின்றது.

சமூகவியலின் தந்தை யார் என வினா எழுப்பினால் அகஸ் கொம்ட் (Auguste Comte) என்ற 19வது நூற்றாண்டின் ஐரோப்பியர் என்று இன்று பதிலாக வருகின்றது. ஆனால் சமூகவியல் பற்றி மிகவும் விரிவாகவும் தெளிவாகவும் 14ம் நூற்றாண்டுகளிலே துனீசியா நாட்டைச் சேர்ந்த இப்னு கல்தூன் எனும் இஸ்லாமிய அறிஞர் பேசியது மாத்திரம் இன்றி முகத்திமா இப்னு கல்தூன் எனும் ஒரு கலைகளஞ்சியத்தையே இத்துறையில் உலகிற்கு வழங்கினார் என்ற செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரத்த ஓட்டத்தை முதலில் கண்டுபிடித்தவராக இன்று ஐரோப்பா அடையாளப்படுத்துவது 17ம் நூற்றாண்டில் இதுபற்றி பேசிய வில்லியம் ஹார்வி என்பவரையே. ஆனால் கி.பி. 13ம் நூற்றாண்டிலேயே இது பற்றி கூறியது மாத்திரமின்றி மருத்துவத்துறையில் இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை உலகிற்கு வழங்கியது இப்னு நபீஸ் என்பதை ஐரோப்பிய நாகரீகமும் அவர்களது உலக நோக்கும் திட்டமிட்டு மறைக்கின்றது.

அதே போன்று கண்ணாடி வில்லையை கண்டுபிடித்தவர் “ட்ராம்ட் – D Armte” எனும் மேற்கத்தியர் என்று ஐரோப்பா இன்றும் கூறிய போதும் இதுபற்றி 13ம் நூற்றாண்டுகளிலே இஸ்லாமிய அறிவியலாளர் இப்னு ஹைஸம் “”Book
of Optics” என்ற ஒளியியல் பற்றிய ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இவரது ஆய்வின் பின்னணியிலேயே கண்ணாடிவில்லை கண்டுபிடிக்ககப்பட்டது.

எல்லாக் கலைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அடித்தளமிட்டவர்களாக முஸ்லிம் அறிஞர்களும் அறிவியலாளர்களுமே இருந்திருக்கின்றனர். மருத்துவத்தின் தந்தை அலி இப்னு ஸீனா, ஆகாய விமானத்தை கண்டுபிடித்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ், அல் ஜிப்ரா என்ற கணிதவிதியை உலகிற்கு அறிமுகப்படுத்திய அல் குவாரிஸ்மி மற்றும் இமாம் அல் கஸ்ஸாலி, இமாம் இப்னு குஷ்த், பாராபி கின்தி போன்ற தத்துவ ஞானிகளான இஸ்லாமிய கண்டுபிடிப்பாளர்களையும் அறிவியலாளர்களையும் அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.

ஆனால் இன்று இந்த அனைத்து உண்மைகளும் மறைக்கப்பட்டு இவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் திருடப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துருக்கி அறிஞர் புவாத் சிஸ்ஸக்ன் “Fuat Sezgin” தனது History of science and technology in islamic world எனும் பதின்மூன்று பாகங்களைக் கொண்ட நூலில் இஸ்லாமிய சிந்தனைகளும் கலைகளும் மேற்கத்திய உலகை பாதித்ததென்பதை அழகாக விளக்குகின்றார். மன்னர் பைஸல் விருது பெற்ற இந்த ஆய்விலே அரேபிய இஸ்லாமிய நூல்களை அவ்வாறே பிரதி செய்து வெளிவந்த ஆங்கில மற்றும் லத்தீன் மொழி நூல்களை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்