கெட்ட வார்த்தைகள் பேசுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கெட்ட வார்த்தைகள் பேசுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?




🌟அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 4:148)

✍குறுமதி கொண்ட சில நயவஞ்சக கிறிஸ்தவர்கள் மேற்கண்ட வசனத்தை சுட்டி காட்டி கெட்ட வார்த்தைகள் பேச குர்ஆன் அனுமதிக்கின்றது என்று பொய் பிரச்சாரம் செய்கின்றனர். புத்தகமோ அல்லது வேதமோ அது எதுவாயினும் அதை முழுமையாக படிக்கும்போது தான் அதன் உண்மை தன்மையையும் உள்ளார்ந்த பொருளையும் புரிந்து கொள்ள முடியும்.  நுணிப்புல் மேய்ச்சல் முழுமையான கல்வியை அடைய பெரும் தடையாகவே இருக்கும். 


✍கெட்ட வார்த்தைகள் பேசுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும். பேச்சில் அழகியவற்றை பேசுங்கள் என்று சொல்லி  கெட்ட வார்த்தைகள் பேசுவதை அல்லாஹ் குர்ஆன் வசனத்தை கொண்டு தடை செய்துள்ளான்.

💎(முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.
அல்குர்ஆன் (17 : 53)


✍அல்லாஹ் தீமைகள் பேசப்படுவதை விரும்பவில்லை. ஒரு விசுவாசி அவர் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

✍நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். இன்னும் பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது மெளனமாக இருங்கள் என்று உபதேசத்தையும் முஹம்மது நபி அவர்கள் கூறுகின்றார்.

🌟நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்கு தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ர­)
நூல் : புகாரி (6018)

✍கெட்ட வார்த்தை பேசுவது நயவஞ்சகத்தின் அடையாளம் என்று முஹம்மது நபி அவர்கள் போதிக்கின்றார்.

💎நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெட்கமும் குறைவானப் பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும் அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ர­)
நூல் : திர்மிதி (1950)
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍குர்ஆன் 4:148 வசனத்தில் சொல்லப்பட்டுள்ள தீய பேச்சு என்ற சொல் கெட்ட வார்த்தை பேசுவதை குறிக்கவில்லை என்றால் வேறு எதை குறித்து பேசுகிறது? இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள தீய பேச்சு என்பது சபிப்பதை  குறிக்கும்.


✍முஸ்லீம்கள் தங்களுடைய நாவையும் செவிகளையும் தவறான வார்த்தைகளிலிருந்து தூய்மைப்படுத்த வேண்டும் என்று இஸ்லாம் உபதேசிக்கிறது. எந்தவொரு முஸ்லீமுக்கும் மற்றொரு நபரைப் பற்றித் தவறாக பேசுவதற்கு எந்தவொரு உரிமையுமில்லை. இஸ்லாத்தை பொறுத்தவரையில் சாபமிடுவது வெறுப்புக்குரிய காரியமாக பார்க்கப்படுகிறது.


💎5062. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது" என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்


✍நபித்தோழர்கள் முஹம்மது நபியிடம் முஸ்லீம்களை எதிர்த்த காபிர்களை சபிக்க சொல்லி கேட்டு கொண்ட போது, நான் அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன் தவிர சபிப்பதற்கு அல்ல என்று முஹம்மது நபி கூறினார்கள்.

💎5065. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணைவைப்பாளர் களுக்கெதிராக(ச் சாபமிட்டுப்) பிரார்த்தியுங்கள்" என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் சாபமிடுபவனாக அனுப்பப்படவில்லை. நான் அருளாகவே அனுப்பப்பெற்றுள்ளேன்" என்று  கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍சாபமிடுவது வெறுக்கப்பட்ட  காரியமாக இஸ்லாம் போதித்தாலும் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அதை அனுமதிக்கிறது. அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு அநீதி இழைத்தவனை சபிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. அதே சமயம் அதில் வரம்பு மீறுவதை கண்டிக்கிறது. வரம்பு மீறினால் அதன் பாவத்தை வரம்பு மீறியவரே சுமக்க வேண்டி வரும்.


💎"ஒருவருக்கொருவர் சாபமிடுபவர்களில் இருந்து வெளிப்படும் வார்த்தைகள், அவர்களில் யார் இதை முதலில் தொடங்கினார்களோ அவரே அதன் (பாவ) சுமையை சுமப்பார், அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறினால் தவிர."
சுனன் அபூதாவூது, 13/237.

✍அநீதி இழைக்கப்படும் சமயத்தில் காக்கப்படும் மெளனம் மரணத்திற்கு சமமானது. அநீதிக்குள்ளாக்கப்பட்டவர் தனக்கு  அநீதி இழைத்தவனுக்கு எதிராக குரல் எழுப்பவும், அவ்வாறு குரல் கொடுப்பதன் மூலம் அநீதி இழைப்பவனை தடுத்து நிறுத்தவும்  இஸ்லாம் அனுமதிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்