இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிப்பாடு

படம்
மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிப்பாடு  🗿மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிபாடு 🗿 ✍மனிதனின் வாழ்க்கை அன்பினால் நிறைந்தது. தனக்கு உதவியவர்களை கடவுள் என்று வணங்குவதும், தன் விருப்பத்திற்கு உரியவர்கள் மறைவை ஏற்றுக் கொள்ள இயலாமல் அவர்களின் உருவங்களை வணங்கத் தொடங்கியதும் அன்பின் வெளிப்பாடாக ஆரம்பக் காலம் முதல் இருந்து வருகின்றது. இதுவே மனிதனை வழிகெடுக்கும் சிலை வழிபாட்டின் ஆதார புள்ளியாகும் அமைந்தது. 💎அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.  (அல்குர்ஆன்: 16:21) ✍மனித மூளையின் சிறப்பு ஓர் ஓவியத்தை பார்க்கும் போது நாம் எத்திசையில் இருந்தாலும் நம்மை பார்ப்பது போன்றும். நம் என்ன உணர்வுகளை கொண்டு பார்க்கின்றோமோ அதையே வெளிப்படுத்துவது போன்றும். மனித இனம் ஓர் இறைக்கொள்கையை எடுத்துக்கூறியப் போதும் வழிக்காட்டப்பட்ட போதும் ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியத்தாலும் மூடநம்பிக்கையாலும் வழிக்காட்டியவர்களையும் கொல்ல தொடங்கியது. ஓர் இறைக் கொள்கைக்கு மாறாக பல இறை வணக்கங்களை ஏற்ப்படுத்திக் கொண்டது. இதன் உச்சக்கட்ட விளைவ...

அல்லாஹ்வும் கர்த்தரும் ஒன்றா?

படம்
அல்லாஹ்வும் கர்த்தரும் ஒன்றா? எல்லா இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்த இறைத் தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனையே போதித்து வணங்கி வந்தனர் என்று பைபிளும் குர்ஆனும் தெளிவாக சொல்கின்றன. குர்ஆனில் சர்வ வல்லமையுள்ள தேவனின் நாமம் அல்லாஹ் என்று சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இங்கு தான் தடுமாறுகின்றனர். முந்தைய தீரக்கதரிசிகள் யாரும் தங்கள் இறைவனை அல்லாஹ் என்ற நாமம் கொண்டு வணங்கவில்லை என்றும் தங்கள் இறைவனின் நாமம் யெகோவா(YHWH) என்று சொல்கின்றனர். அந்த யெகோவால் அனுப்பப்பட்ட மேசியாவான இயேசு எங்கும் யெகோவா என்ற நாமத்தை பயன்படுத்தவில்லையே, அது ஏன் அவர்களிடம் கேட்டால் தப்பிக்க வழி  தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். புதிய ஏற்பாட்டில் எங்கும் யெகோவா(YHWH) என்ற நாமம் கொண்டு இறைவன் அறியப்படவில்லை. இயேசுவும் யெகோவாவின் நாமத்தை கொண்டு மக்களிடம் பிரசங்கம் செய்யவில்லை. குர்ஆனை குறை சொல்ல கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் மற்றொரு தந்திரம் முஹம்மது நபிக்கு முன்பே சிலை வணங்கிகளால் அறியப்பட்ட தேவன் தான் அல்லாஹ் என்று வாதிடுவதாகும். அரபுக்களின் பூர்வீக மதம் சிலை வணக்கமல்ல. ஆப...

மறுமையில் அல்லாஹ்விற்கும் இயேசுவுக்கும் நடக்கும் உரையாடல்

படம்
மறுமையில் அல்லாஹ்விற்கும் இயேசுவுக்கும் நடக்கும் உரையாடல் ஒவ்வொரு மனிதனும் மறுமையில் அல்லாஹ்வின் முன்  விசாரிக்கப்படுவார்கள்.   இறைத்தூதர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை குறித்து விசாரிக்கப்படுவார்கள். அந்த வகையில்  நாளை மறுமையில் இயேசு அல்லாஹ்வினால் விசாரிக்கப்படுவதை குர்ஆன் நம் கண்முன்னே காட்டுகிறது. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார். "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில...

திரித்துவத்தை நிராகரித்த சர் ஐசக் நியூட்டன்

படம்
திரித்துவத்தை நிராகரித்த சர் ஐசக் நியூட்டன்  கிறிஸ்தவ வரலாற்றில் திரித்துவம் பற்றி ஆய்வு செய்த கிறிஸ்தவ அறிஞர்கள் பலரும் திரித்துவத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். அவ்வாறு திரித்துவத்தை புறக்கணித்தவர்களில் மாபெரும் அறிவியலாளரான சர் ஐசக் நியூட்டனும் ஒருவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார். ”கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்” -சர் ஐசக் நியுட்டன் தனது அறிவியல் புரட்சிகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவத்தை முழுமையாக ஆய்வு செய்ய விரும்பினார். அதன் வெளிப்பாடாக 1670இல் திரித்துவத்தை பற்றி ஆய்வு செய்ய தொடங்கினார் சர் ஐசக் நியூட்டன். அந்த ஆய்வின் முடிவில் திரித்துவம் அத்தநாசியஸ்  கிறிஸ்தவ சபையினால் புகுத்தப்பட்ட ஆதாரமற்ற வழிபாடு என...

கறைப்படிந்த பைபிள்

படம்
கறைப்படிந்த பைபிள்  ஒரு இறை வேதம் என்பது மக்கள் தனது நம்பிக்கையை வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேதம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளை கொண்டதாக இருக்க வேண்டியது கட்டாயம். இறை வார்த்தைகளே வேதமாக நாம் கருத முடியும். கிறிஸ்தவர்களால் பைபிள் வேதம் என்று நம்பப்படுகிறது. அந்த வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் இறைவார்த்தையா என்று பார்த்தால் அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.    பைபிளில் மனிதனின் சொந்த கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதற்கு அந்த நூலே பெரும் ஆதாரமாக நம் முன்னே இருக்கிறது. புதிய ஏற்பாட்டில் யோவான் பேதுரு யூதா பவுல் மற்றும் யாக்கோபு எழுதிய நிருபங்களும் அதாவது மடல்களும் உள்ளது.  மடல்கள் என்பது பொதுவாக தனது கருத்தை மற்றவருக்கு வெளிப்படுத்த எழுதுவது என்பதை நாம் அறிவோம். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு பொருத்தவரையில் மடல்களும் வேதமாகும். புதிய ஏற்பாட்டின் 27 நூல்களில் 21 புத்தகங்கள் மடல்களாகும். வேதம் என்று சொல்லும் எந்த புத்தகமும் இதுப்போன்ற மூடத்தனத்தை கொண்டது இல்லை.  அவருடைய வசனங்களோடு ஒன்ற...

தீண்டாமையை வேரறுக்கும் இஸ்லாம்

படம்
தீண்டாமையை வேரறுக்கும் இஸ்லாம் உலகம் முழுவதும் மனிதர்கள் தீண்டாமையினால் கொடுமைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு முன் தீண்டாமையை ஒழிக்கும் அருமருந்தாக இருந்தது இஸ்லாம். கிறிஸ்தவ மேற்கத்தியர்களின் வெள்ளை இன ஆதிக்கத்திற்கு தீர்வாக கருப்பு இன மக்களால்  தூக்கி பிடிக்கப்பட்டது இஸ்லாம். அதே போன்று இந்தியாவில் ஜாதி கொடுமைகளில் இருந்து தப்பிக்க மக்கள் அலை அலையாய் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.  மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (திருக்குர்ஆன் 49 13) ஓர் ஆண் மற்றும் பெண்ணில் உருவானது தான் மனித இனம் என்று சொல்லும் குர்ஆன் இறைவனிடத்தில் சிறந்தவர் அவனை பயந்து அவனது கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்பவர் தான் என்று சொல்கிறது. தீண்டாமையை ஒழிப்பதற்கு இந்த ஒரு இறைமறை வசனமே போதும். இந்த வசனம் கூறும் அடிப்படை உன்மையை நம்பக்கூடிய ஒரு மனிதன் உள்ளத்தில் க...

தீண்டாமையை போதிக்கும் கர்த்தர்

படம்
தீண்டாமையை போதிக்கும் கர்த்தர்  வானங்களையும் பூமியையும் படைத்தவர் இறைவன்.  அந்த இறைவன் தான் நம்மையும் படைத்தார். அப்படிபட்ட இறைவன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடு மட்டும் தனது அருளை நிறுத்தி கொள்வதில்லை. இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர். அந்த இறைவனை வணங்கும் ஆலயமும் எல்லோருக்கும் பொதுவானது. கறைப்படிந்த பைபிள் இஸ்ரவேல் அல்லாத மற்றவர்கள் கர்த்தரின் ஆலயத்துக்குள் பிரவேசிக்க கூடாது என்று போதிக்கிறது. எல்லோருக்கும் பொதுவான கர்த்தர் எவ்வாறு தனது அருளை, அன்பை ஒரு குறிப்பிட்ட சமூகத்தோடு நிறுத்தி கொள்ள முடியும்? நிச்சயமாக இல்லை. இறைவன் எல்லோருக்கும் பெதுவானவன். அந்த இறைவனின் அருளானது நம் அனைவரையும் சூழ்ந்துள்ளது. பிறகு ஏன் பைபிள் கர்த்தரின் ஆலயத்திற்குள் இஸ்ரவேல் அல்லாத மற்றவர்கள் நுழையக்கூடாது என்று போதிக்கிறது? 9. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை. எசக்கியேல் 44 இது கர்...

ஆன்ம பரிசுத்தம்

படம்
ஆன்ம பரிசுத்தம்  நாம் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாக போகும் இந்த உடம்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் இறைவனிடம் திரும்பி செல்ல இருக்கும் நம் ஆன்மாவிற்கு நாம் கொடுப்பதில்லை. உலக வாழ்க்கையில் நாம் மேம்பட்ட நிலையில் வருவதற்காக வேண்டி அயராது பாடுபடும் நாம் நமது மறுமை வாழ்க்கையை பற்றி சிறிதும் சிந்திப்பது இல்லை. அப்படி சிந்தித்தால் ஏக இறைவனை வணங்கும் அடியார்களாக மாறி விடுவார்கள். ஏனெனில் அந்த ஏக இறைவனை வணங்குவதன் மூலம் தான் நம் ஆன்மாவை பாவங்களில் இருந்து  பரிசுத்தப்படுத்த முடியும். அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும். (அல்குர்ஆன் 10:30) நம்மை படைத்த அந்த ஏக இறைவனை வணங்குவதன் மூலம் மட்டுமே நாம் நமது ஆன்மாவை பரிசுத்தப்படுத்த முடியும்.  அந்த ஏக இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வை கொண்டு நமது எண்ணங்கள், சொல் மற்றும் செயல்களை பரிசுத்தப்படுத...

இறைவன் ஒருவனே.

படம்
இறைவன்  ஒருவனே. ✍இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் தங்களை போன்று தங்கள் இறைவனுக்கும் மகன்கள் குடும்பம் உண்டு என்றும் இன்னும் ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருக்கிறார்கள் என்றும் கற்பனை செய்து கொண்டு வாழ்கின்றனர். இஸ்லாம் தவிர பெரும்பாலான மதங்களில் இத்தகைய தவறான நம்பிக்கை இருப்பதை நம்மால் காண முடிகிறது. ✍மனிதர்கள் தங்களின் வயதான காலத்தில் தங்களை கவனித்து கொள்ளவும், இன்னும் தங்களது மறைவுக்கு பிறகு தங்களது இனவிருத்திக்கும் என்றும் குழந்தைகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். இறைவன் என்பவன் மூப்பு இறப்பு போன்ற பலவீனங்கள் இல்லாதவன். ஆதலால்  இறைவன் தனக்கு மகனை ஏற்படுத்தி கொள்வதை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான். ✍இறைவன் மனிதனுக்கு நேர் வழி காட்ட தனது தூதர்களை அனைத்து சமூகத்துக்கும் அனுப்பி வைத்தான். மக்களில் அந்த தூதர்களை எதிர்த்தவர்களும் உண்டு. அந்த தூதர்களின் மீது உள்ள அளவு கடந்த அன்பால் அவர்களையே இறைவனாக்கிய சமூகமும் உண்டு. உதாரணத்திற்கு கிறிஸ்தவர்களை சொல்லலாம். அவர்கள் இறைத் தூதர் இயேசுவை இறைவனாக்கியதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நேர்வழி காட்ட  இறைவனால் அனுப்பப்பட்...

இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு

படம்
இஸ்லாத்தில் இறைக் கோட்பாடு ✍அல்லாஹ் ஒருவனென்றும், அவனது இறைத்தன்மையிலும், படைத்து பரிபாலிப்பதிலும் அவனுக்கு நிகராக யாரும் இல்லை என்றும் நம்புதல், அல்லாஹ் ஒரே ஒருவனே, அவனது அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் எவருக்கும் பங்கு இல்லை. 💎எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)" என்று கேட்பீராக. அதற்கவர்கள் "(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)" என்று கூறுவார்கள். ("உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?" என்று கேட்பீராக. (23: 88,89) ✍அல்லாஹ்வே அனைத்தையும் சிருஷ்டித்தவன், அவனைத் தவிர உள்ள அனைத்தும் அவனால் சிருஷ்டிக்கப் பட்டவையே, சிருஷ்டிப்பில் அவனுக்கு பங்காளியாக எவரும் இல்லை. 💎அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன் இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62) ✍அல்லாஹ் இல்லாமையில் இருந்து உருவாக்கும் ஆற்றல் மிக்கவன், அவனது படைப்பினங்களுக்கு உபகாரம் செய்பவன், வாழ்வாதாரம் ...

அழிக்கப்படும் இறைவனின் இயற்கை அருளும் மனிதனின் வேண்டுதலும்

படம்
🍃 அழிக்கப்படும் இறைவனின் இயற்கை அருளும் மனிதனின் வேண்டுதலும் 🌿 நமது தேவைகளுக்காகவும், விருப்பத்திற்கு உரியவர்களுக்காகவும் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும்  உழைத்து விட்டு அதனினும் அதிக துஆக்களை அல்லாஹ்விடம் கேட்கின்றோம். அவ்வாறு கேட்க்கப்படும் துஆக்கள் நிறைவேறாமல் போகும் போது மனம் உடைந்து இனி துஆ கேட்கவே மாட்டேன், ஏமாற்றங்கள் போதும் என்ற நிலைக்கு வந்து விடுகின்றோம். அப்படி இருப்பவர்களிடம் அல்லாஹ்வின் கருணை வேண்டாமா என்று கேட்டால் வேகமாக அல்லாஹ்வின் கருணை நிச்சயமாக வேண்டும் என்கின்றனர். ஒரு குழந்தை பிடிக்காத, தகாத  செயல்களை செய்து விட்டு அவன் பெற்றோரிடம் ஒன்றை  கேட்கும் போது அது நிராகரிக்கப்படும். அப்படி தான் விரும்பியதுக்  கிடைக்காத போது வரும்  கோபத்தின் வெளிப்பாடுப் போன்றுள்ளது நமது ரப்பை நோக்கிய நம் செயல்பாடுகள். "நம் வாழ்வில் நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதை தான் பெறுவோம்". அல்லாஹ்வின் அருட்கொடைகளையும், நம் கடமை மற்றும்  உரிமைகளையும் முறையாக உணர்ந்து வாழ்வது நம்பிக்கையாளர்களின் கடமையாகும். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட இயற்கை வாழ்வில் நாம் ...

இயேசு அல்லாஹ்வின் தூதர்

படம்
இயேசு அல்லாஹ்வின் தூதர் ✍பைபிளில் எங்கு தேடினாலும் சந்தேகத்துக்கு இடமின்றி இயேசுவை இறைவன் என்று தெள்ளத்தெளிவாக சொல்லும் ஒரு வசனம் கூட இல்லை. அதனால் தான் ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் முதல் இன்றுவரை இயேசுவை இறைவன் இல்லை என்று சொல்லும் கூட்டமும் கிறிஸ்தவ சமூகத்தில் உள்ளது. பைபிள் இயேசுவை இறைவன் என்று சொல்லவில்லை. உண்மையும் அதுதான். ✍இயேசுவும் தனது வாழ்நாளில் எப்போதும் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை என்பதையே பைபிளும் காட்டுகிறது. இயேசு தன்னை கர்த்தரின் ஊழியக்காரர் மற்றும் அவனது தூதராக தான் அடையாளம் காட்டியுள்ளார்.  இயேசுவின் சீடர்களும் மற்றும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட இயேசுவோடு வாழ்ந்த ஆரம்பக்கால கிறிஸ்தவர்களும் இயேசுவை தீர்க்கதரிசி என்றே நம்பியுள்ளனர் என்றே பைபிள் சொல்கிறது.   💎57. அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். மத்தேயு 13 ✍இயேசு தன்னை கர்த்தரின் தீர்க்கதரிசி என்றே அடையாளப்படுத்துகிறார் என்பதை மேற்கண்ட வசனம் காட்டுகிறது. 👉🏽19. அவர்: எவ...

இயேசு சுயமாக மனித ரூபமெடுத்து வந்தாரா?

படம்
இயேசு சுயமாக மனித ரூபமெடுத்து வந்தாரா? ஒரு இறைவனிடமிருந்து வரும் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாது. முரண்பட்ட வசனங்கள் இறைவன் புறத்தில் இருந்து வரவில்லை என்பதையும் அதில் மனித கையாடல் புகுந்து விட்டது என்பதையும்  உறுதிப்படுத்துகின்றன. கறைப்படிந்து வேதமான பைபிளில் முரண்பாடுகள் ஏராளம் உண்டு. அதிலும் குறிப்பாக இயேசுவை பற்றிய வசனங்களின் முரண்பாடுகள் தான் வசனங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட முரண்பாடுகளின் ஒன்றைத் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். பவுல் இயேசுவை குறித்து சொல்லும்போது தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாக இருப்பதை விரும்பாமல் சுயமாக அடிமையின் ரூபமெடுத்து இங்கு வந்ததாக சொல்கின்றார். இந்த பவுல் இயேசுவின் சீடரும் அல்ல. இயேசுவின் போதனைகளை கேட்டவரும் அல்ல. இன்னும் சொல்வதாக இருந்தால் இயேசுவின் வாழ்நாளில் அவரை எதிர்த்தவராக தான் இந்த பவுல் இருந்துள்ளார். இயேசுவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை வரையறை செய்ததில் இயேசுவை காட்டிலும் பவுலின்  செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு போதித்தவற்றுக்கு முரணாக போதித்தவர் தான் இந்த பவுல். இயேசுவோடு ...

நபியின் பிறப்பை இழிவுப்படுத்தும் கிறிஸ்தவர்களுக்கான மறுப்பு

படம்
நபியின் பிறப்பை இழிவுப்படுத்தும் கிறிஸ்தவர்களுக்கான  மறுப்பு: இயேசு விபச்சார சந்ததியில் இருந்து வந்தவர் என்று பைபிள் இயேசுவை  இழிவுப்படுத்துவதை முஸ்லிம்கள் சுட்டிக்காட்டியதும், தங்களது இயலாமையை போக்க முஹம்மது நபியின் பிறப்பை குற்றப்படுத்தி கிறிஸ்தவர்கள் பேசி வருகின்றனர். அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம். நபியின் பிறப்பை குற்றப்படுத்த கீழேயுள்ள ஹதிஸையும் ஆதாரமாக காட்டுகின்றனர். ஆனால் அந்த ஹதிஸ் அவர்கள் சொல்லும் அர்த்தத்தில் இல்லை. அந்த ஹதிஸை திரிவுப்படுத்தும் வேலையை தான் கிறிஸ்தவர்கள் செய்துள்ளனர். 2375. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (என்னுடைய பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நாள், அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். 'இத்கிர்' புல்லை, விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டு வர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந...

அன்னை ஆயிஷாவை விபச்சாரி(நஅவூதுபில்லாஹ்) என்று ஷியாக்களின் மார்க்க நூல்கள் போதிக்கின்றதா?

அன்னை ஆயிஷாவை விபச்சாரி(நஅவூதுபில்லாஹ்) என்று ஷியாக்களின் மார்க்க நூல்கள் போதிக்கின்றதா? கிறிஸ்தவ மிஷனரிகள் முஸ்லீம்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்து கொள்வதற்காக அன்னை ஆயிஷாவை தரம் தாழ்ந்து பேசுகின்றனர். யூதர்கள் எவ்வாறு இயேசுவின் கன்னித்தாயான மர்யமை தர்ம தாழ்ந்து பேசினார்களோ அவ்வாறே கிறிஸ்தவர்களும் தரம் தாழ்ந்து அன்னை ஆயிஷாவை விமர்சிக்கின்றனர். விபச்சாரி என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதற்காக அவர்கள் ஷியாக்களின் ஆதார நூல்களை தேடி அலைகின்றனர்.  அன்னை ஆயிஷாவை குறித்து இந்த விசயத்தில் ஷியாக்களின் நிலைப்பாடு என்ன என்பதை பார்க்கலாம். ஷியா அறிஞரான ஷேக் அல் தூஷி தனது நூலான தப்ஸீர் அல் திப்யான் என்ற புத்தகத்தின் 46 வது பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். "நபியின் எந்த மனைவியும் விபச்சாரம் புரியவில்லை. நபியின் மனைவியருள் எவரும் நபியை கஷ்டப்படுத்தும் காரியத்தையோ அல்லது நபியை  தன்னை விட்டு விலக்கும் காரியத்தையும் செய்யவில்லை. எவர் நபியின் மனைவி விபச்சாரம் செய்தார் என்று சொல்கிறாரோ அவர் மிகப்பெரிய பாவத்தை செய்துவிட்டார். நவீன கால ஷியா அறிஞரான  அல் சையத் அப்து அல் ஹ...