மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிப்பாடு

மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிப்பாடு 🗿மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிபாடு 🗿 ✍மனிதனின் வாழ்க்கை அன்பினால் நிறைந்தது. தனக்கு உதவியவர்களை கடவுள் என்று வணங்குவதும், தன் விருப்பத்திற்கு உரியவர்கள் மறைவை ஏற்றுக் கொள்ள இயலாமல் அவர்களின் உருவங்களை வணங்கத் தொடங்கியதும் அன்பின் வெளிப்பாடாக ஆரம்பக் காலம் முதல் இருந்து வருகின்றது. இதுவே மனிதனை வழிகெடுக்கும் சிலை வழிபாட்டின் ஆதார புள்ளியாகும் அமைந்தது. 💎அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். (அல்குர்ஆன்: 16:21) ✍மனித மூளையின் சிறப்பு ஓர் ஓவியத்தை பார்க்கும் போது நாம் எத்திசையில் இருந்தாலும் நம்மை பார்ப்பது போன்றும். நம் என்ன உணர்வுகளை கொண்டு பார்க்கின்றோமோ அதையே வெளிப்படுத்துவது போன்றும். மனித இனம் ஓர் இறைக்கொள்கையை எடுத்துக்கூறியப் போதும் வழிக்காட்டப்பட்ட போதும் ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியத்தாலும் மூடநம்பிக்கையாலும் வழிக்காட்டியவர்களையும் கொல்ல தொடங்கியது. ஓர் இறைக் கொள்கைக்கு மாறாக பல இறை வணக்கங்களை ஏற்ப்படுத்திக் கொண்டது. இதன் உச்சக்கட்ட விளைவ...