ஆன்ம பரிசுத்தம்

ஆன்ம பரிசுத்தம் 





நாம் இறந்த பிறகு மண்ணோடு மண்ணாக போகும் இந்த உடம்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம் இறைவனிடம் திரும்பி செல்ல இருக்கும் நம் ஆன்மாவிற்கு நாம் கொடுப்பதில்லை.


உலக வாழ்க்கையில் நாம் மேம்பட்ட நிலையில் வருவதற்காக வேண்டி அயராது பாடுபடும் நாம் நமது மறுமை வாழ்க்கையை பற்றி சிறிதும் சிந்திப்பது இல்லை. அப்படி சிந்தித்தால் ஏக இறைவனை வணங்கும் அடியார்களாக மாறி விடுவார்கள். ஏனெனில் அந்த ஏக இறைவனை வணங்குவதன் மூலம் தான் நம் ஆன்மாவை பாவங்களில் இருந்து  பரிசுத்தப்படுத்த முடியும்.

அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
(அல்குர்ஆன் 10:30)

நம்மை படைத்த அந்த ஏக இறைவனை வணங்குவதன் மூலம் மட்டுமே நாம் நமது ஆன்மாவை பரிசுத்தப்படுத்த முடியும்.  அந்த ஏக இறைவனான எல்லாம் வல்ல அல்லாஹ்வை கொண்டு நமது எண்ணங்கள், சொல் மற்றும் செயல்களை பரிசுத்தப்படுத்த வேண்டும்.

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
(அல்குர்ஆன் 87:14-15)


அதை விடுத்து எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் மனிதர்களையோ அல்லது கற்சிலையையோ அல்லது சூரியன் சந்திரன் போன்ற இறைவனின் மற்ற படைப்புகளை வணங்குவதால் நமது ஆன்மாவை நாம் பாவங்களை கொண்டு அசுத்தப்படுத்துகிறோம்.

ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
(அல்குர்ஆன் 91:9-10)


மனிதன் தனது உலகியல் இச்சைகளிலிருந்து வெளிவர எல்லாம் வல்ல அல்லாஹ்வை முற்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் நாமம் கொண்டு தன்னை பரிசுத்தப்படுத்துகிறாரோ அவரே வெற்றியடைந்தவர் ஆவார்.



"எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்)."
(அல்குர்ஆன் 26:89)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்