இயேசு அல்லாஹ்வின் தூதர்
இயேசு அல்லாஹ்வின் தூதர்
✍பைபிளில் எங்கு தேடினாலும் சந்தேகத்துக்கு இடமின்றி இயேசுவை இறைவன் என்று தெள்ளத்தெளிவாக சொல்லும் ஒரு வசனம் கூட இல்லை. அதனால் தான் ஆரம்பக்கால கிறிஸ்தவர்கள் முதல் இன்றுவரை இயேசுவை இறைவன் இல்லை என்று சொல்லும் கூட்டமும் கிறிஸ்தவ சமூகத்தில் உள்ளது. பைபிள் இயேசுவை இறைவன் என்று சொல்லவில்லை. உண்மையும் அதுதான்.
✍இயேசுவும் தனது வாழ்நாளில் எப்போதும் தன்னை கடவுள் என்று சொல்லவில்லை என்பதையே பைபிளும் காட்டுகிறது. இயேசு தன்னை கர்த்தரின் ஊழியக்காரர் மற்றும் அவனது தூதராக தான் அடையாளம் காட்டியுள்ளார். இயேசுவின் சீடர்களும் மற்றும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட இயேசுவோடு வாழ்ந்த ஆரம்பக்கால கிறிஸ்தவர்களும் இயேசுவை தீர்க்கதரிசி என்றே நம்பியுள்ளனர் என்றே பைபிள் சொல்கிறது.
💎57. அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
மத்தேயு 13
மத்தேயு 13
✍இயேசு தன்னை கர்த்தரின் தீர்க்கதரிசி என்றே அடையாளப்படுத்துகிறார் என்பதை மேற்கண்ட வசனம் காட்டுகிறது.
👉🏽19. அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள். நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
லூக்கா 24
லூக்கா 24
✍இயேசுவின் சீடர்களும் இயேசுவை வல்லமையுள்ள தீர்க்கதரிசி என்று சொல்வதையே மேற்கண்டவசனம் கூறுகிறது.
💎மத்தேயு 21:10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
💎11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
✍இயேசுவோடு வாழ்ந்து அவரை விசுவாசம் கொண்டவர்களும் அவரை தீர்க்கதரிசி என்றே சொல்கின்றனர்.
✍இறைவனின் இறுதி வேதமான குர்ஆனும் இயேசுவை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லி இயேசுவின் கண்ணியத்தை பறைத்சாற்றுகிறது.
💎30. "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (குர்ஆன் 19)
🌟🌟கிருஸ்தவர்களே! இரட்சிப்பின் பக்கம் வாருங்கள்🌟🌟
✍இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட ஏக இறைவனின் தூதர் (தீர்க்கதரிசி) இயேசுவான ஈஸா (அலை) அவர்கள் இறைவனை மட்டுமே வணங்கி வழிப்பட வேண்டும் என்ற இஸ்லாமிய அழைப்பையே விடுத்தார். அவரின் சீடர்களும் இறைவனை மட்டுமே வணங்கி வழிபடும் முஸ்லிம்களாகவே வாழ்ந்தனர். எனவே கிருஸ்தவ சகோதரர்களே! ஏக இறைவனான அல்லாஹ் உங்களை அன்போடு அழைக்கின்றான்.
💎“ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறித்து)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும், முஹம்மதை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும் ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்த குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்களுடைய) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிகக் கருணையுடையவனுமாக இருக்கிறான். (திருக்குர்ஆன் – 57 : 28).
கருத்துகள்
கருத்துரையிடுக