மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிப்பாடு

மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிப்பாடு 





🗿மனிதனை வழிக்கெடுக்கும் சிலை வழிபாடு 🗿

✍மனிதனின் வாழ்க்கை அன்பினால் நிறைந்தது. தனக்கு உதவியவர்களை கடவுள் என்று வணங்குவதும், தன் விருப்பத்திற்கு உரியவர்கள் மறைவை ஏற்றுக் கொள்ள இயலாமல் அவர்களின் உருவங்களை வணங்கத் தொடங்கியதும் அன்பின் வெளிப்பாடாக ஆரம்பக் காலம் முதல் இருந்து வருகின்றது. இதுவே மனிதனை வழிகெடுக்கும் சிலை வழிபாட்டின் ஆதார புள்ளியாகும் அமைந்தது.

💎அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். 
(அல்குர்ஆன்: 16:21)

✍மனித மூளையின் சிறப்பு ஓர் ஓவியத்தை பார்க்கும்
போது நாம் எத்திசையில் இருந்தாலும் நம்மை பார்ப்பது போன்றும். நம் என்ன உணர்வுகளை கொண்டு பார்க்கின்றோமோ அதையே வெளிப்படுத்துவது போன்றும். மனித இனம் ஓர் இறைக்கொள்கையை எடுத்துக்கூறியப் போதும் வழிக்காட்டப்பட்ட போதும் ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியத்தாலும் மூடநம்பிக்கையாலும் வழிக்காட்டியவர்களையும் கொல்ல
தொடங்கியது. ஓர் இறைக் கொள்கைக்கு மாறாக பல இறை வணக்கங்களை ஏற்ப்படுத்திக் கொண்டது. இதன் உச்சக்கட்ட விளைவாக உயிருடன் இருப்பவர்களுக்கும் கோவில் எனும் வழிப்பாட்டுத்தலங்களை உருவாக்கியுள்ளதாகும். தன்னால் உருவாக்கப்பட்ட சிலைக்கே எந்த சக்தியும் இல்லாதப் போது தன்னை போன்ற மனிதர்களுக்கு சக்தி எப்படி இருக்க முடியும்(?) என்பதை சற்றும் சிந்திக்காமல், அன்பின் வெளிப்பாடு என்று எண்ணி மனிதன் செய்கின்ற மிகப் பெரிய தவறாகும் இது.


💎அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.
(16:22)

✍இப்படிப்பட்ட கோவில்களில் பூஜைகள் ,ஆராதனைகள் செய்யப்படுவதுடன் சுற்றுலாத்தலமாகவும் கொண்டாடப்படுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கது பின்வருமாறு
சச்சின் தெண்டுல்கர் மிக சிறந்த விளையாட்டு வீரர் என உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர். இவரது ரசிகர்களால் கைமூர், பீகாரில்
கோவில் கட்டப்பட்டுள்ளது " கிரிக்கெட்டின் கடவுள் " என்று அழைக்கப்படுகின்றார்.
 
✍அமிதாப்பச்சன் இந்தி உலகின்
 முன்னனி நடிகர். நட்சத்திர நடிகராக புகழப்பட்டவர். இவருடைய பெயரில் "அமிதாபச்சன்" கோவிலை பாண்டென் சாலை, கொல்கத்தாவில் அமைத்துள்ளனர்.
இதில் ஆராதனையும் , அமிதாப் படப்பாடல்கள் கொண்டு பூஜைகளும்  செய்யப்படுகிறது. "ஜெய் அமிதாப்பச்சன் " என முழக்கங்களுடன் அவருடைய வெள்ளை காலணிக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. அந்த காலணி 1990 இல் அக்னிபத் படத்தில் அவரால் பயன்படுத்தப்பட்டது ஆகும்.
சோனியா காந்தி அவர்கள் நம் தேசதந்தை காந்தியடிகள்
 போன்று எதுவும்
 செய்யவில்லை. இத்தாலிய நாட்டில் ரோமன் கேத்தோலிக்கை சேர்ந்தவர்.
 ராஜீவ் காந்தியை மணம் முடித்ததால்
 இந்தியாவிற்கு வந்தவர். "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் " தலைவராக உயர்ந்தவர். சோனியா காந்தியின் பெயரில் மஹ்பூப்நகர்,தெலுங்கானாவில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியினரின் எந்த ஒரு செயலுக்கும் தாங்கள் குறைந்தவர்கள்
இல்லை என்பதை நிறுபிப்பது போல் பாஜாக மோடி அவர்களின் பெயரில் ஒரு கோவில் ராஜ்கோட் குஜராத்தில் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு கோவில் பணி அலகாபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது .
மேலும் முலாயம் சிங் யாதேவ், குஸ்பு, மாயாவதி, M.G.ராமசந்திரனுடைய பெயரிலும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது.
அமிதாப்பச்சன், குஸ்பூ ,மோடி அவர்கள் அனைவரும் தங்களுக்கு கோவில் கட்டியிருப்பது "இக்கட்டான நிலை , பயம் மற்றும் அதிர்ச்சியை தந்துள்ளதாக கூறுகின்றார்கள். இப்படி எழுப்பப்படும் கோவில்கள் தான் 100 அல்லது 500 வருடங்களில் சீரடி சாய் பாபா கோவில்களை போன்று  உருவெடுக்கின்றன.

✍சச்சின் கோவிலில் காட்டப்படும்
ஆராதனையால் யாரும் விளையாட்டில் அதிக ரன் எடுக்கப் போவதும் இல்லை. இவைகள் பேரண்டத்தில் எந்த ஒரு சக்தி மாற்றத்தையும் ஏற்படுத்த போவதும் இல்லை. இந்த உருவ சிலைகளால் தங்களுக்கான பாதுகாப்பையே ஏற்ப்படுத்திக் கொள்ள இயலாத போது எப்படி தன்னை வணங்குபவரை காக்க முடியும். இச்சிலைகளால் அன்பு , கோபம் என உணர்வுகள் எதையுமே வெளிப்படுத்த முடியாது. நிச்சயமாக மனிதன் சிலையினும் உயர்ந்தவன் உணர்வுப்பூர்வமானவன்.

 “என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
(அல்குர்ஆன்: 19:42)

இப்ராஹிம் நபி தனது தந்தை மற்றும் அவரது சமூக மூட நம்பிக்கையையும் , சிலை வழிப்பாட்டையும் எதிர்த்து ஓர் இறை வழியில் வாழ்ந்துக் காட்டினார்.
அல்லாஹ் யாரை நாடுகின்றானோ அவரே நேர் வழிப் பெறுபவர். நமக்காக இறைவன் ஏகத்துவமான
நேர் வழியைக் காண்பித்தப் பிறகும் நம்பிக்கை கொள்ளாமல் சிலை வழிப்பாட்டை தொடர்ந்து செய்வது மிகப் பெரிய பாவமாகும்.

இப்ராஹிம் நபி போன்ற நம் நபிமார்கள் பல இறை மற்றும் சிலை வழிப்பாட்டை எதிர்த்து ஓர் இறைவனைத் தான் வணங்கினார்கள். நபிமார்களின் இந்த செய்தியை பிற சமூக மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களிடம் உள்ளது.


அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள்  திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 29:17).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்