கறைப்படிந்த பைபிள்


கறைப்படிந்த பைபிள் 




ஒரு இறை வேதம் என்பது மக்கள் தனது நம்பிக்கையை வைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வேதம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைகளை கொண்டதாக இருக்க வேண்டியது கட்டாயம். இறை வார்த்தைகளே வேதமாக நாம் கருத முடியும். கிறிஸ்தவர்களால் பைபிள் வேதம் என்று நம்பப்படுகிறது. அந்த வேதத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் இறைவார்த்தையா என்று பார்த்தால் அது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.   

பைபிளில் மனிதனின் சொந்த கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதற்கு அந்த நூலே பெரும் ஆதாரமாக நம் முன்னே இருக்கிறது.
புதிய ஏற்பாட்டில் யோவான் பேதுரு யூதா பவுல் மற்றும் யாக்கோபு எழுதிய நிருபங்களும் அதாவது மடல்களும் உள்ளது.  மடல்கள் என்பது பொதுவாக தனது கருத்தை மற்றவருக்கு வெளிப்படுத்த எழுதுவது என்பதை நாம் அறிவோம். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு பொருத்தவரையில் மடல்களும் வேதமாகும். புதிய ஏற்பாட்டின் 27 நூல்களில் 21 புத்தகங்கள் மடல்களாகும். வேதம் என்று சொல்லும் எந்த புத்தகமும் இதுப்போன்ற மூடத்தனத்தை கொண்டது இல்லை. 

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
நீதிமொழிகள் 30:6

நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 26:2


நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி. நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
யாத்திராகமம்  4:2

பழைய ஏற்பாட்டில் கர்த்தர் எனது வசனத்தோடு ஒன்றையும் கூட்டவோ அல்லது  குறைக்கவோ கூடாது என்ற கட்டளையையும் மீறி கிறிஸ்தவர்கள் தங்கள் வேதத்ததோடு தனி மனிதர்கள் எழுதிய கடிதங்களையும் வேதம் என்று சொல்லி கர்த்தருக்கு விரோதமாக நடக்கின்றனர்.


கர்த்தர் சொல்லவில்லை, நானே சொல்லுகிறதாவது என்று பவுலே வெளிப்படையாக சொல்லியும் அவரது சுயக் கருத்துகளை வேதம் என்று சொல்லி பைபிளில் சேர்த்துள்ளனர்.


1 கொரிந்தியர்  7

12: மற்றவர்களைக்குறித்துக் #கர்த்தர்_அல்ல, #நானே_சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.



25. அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.


இவ்வாறு பல இடங்களில் பவுல் கர்த்தரல்ல நானே சொல்லுகிறதாவது என்று வெளிப்படையாக சொல்லியும் அவரது அபிப்ராயத்தையும் கர்த்தரின் வசனத்தோடு சேர்த்து கர்த்தரின் கட்டளைக்கு கிறிஸ்தவர்கள் மாறு செய்கின்றனர். இவ்வாறு பலரது அபிப்ராயங்களின் அடிப்படையில் ஒன்று சேர்க்கப்பட்ட பைபிளை நம்பி நாம் எவ்வாறு மறுமை வாழ்க்கையை நோக்கி பயணிக்க முடியும் என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் சிந்திக்க வேண்டும்.

பைபிள் கறைபடிந்தது என்பதற்கு பைபிள் வசனங்களே சாட்சியாக இருந்தும் கிறிஸ்தவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர்.


நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது.
 எரேமியா 8:8

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்