இயேசு சுயமாக மனித ரூபமெடுத்து வந்தாரா?

இயேசு சுயமாக மனித ரூபமெடுத்து வந்தாரா?




ஒரு இறைவனிடமிருந்து வரும் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படாது. முரண்பட்ட வசனங்கள் இறைவன் புறத்தில் இருந்து வரவில்லை என்பதையும் அதில் மனித கையாடல் புகுந்து விட்டது என்பதையும்  உறுதிப்படுத்துகின்றன. கறைப்படிந்து வேதமான பைபிளில் முரண்பாடுகள் ஏராளம் உண்டு. அதிலும் குறிப்பாக இயேசுவை பற்றிய வசனங்களின் முரண்பாடுகள் தான் வசனங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட முரண்பாடுகளின் ஒன்றைத் தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.




பவுல் இயேசுவை குறித்து சொல்லும்போது தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாக இருப்பதை விரும்பாமல் சுயமாக அடிமையின் ரூபமெடுத்து இங்கு வந்ததாக சொல்கின்றார். இந்த பவுல் இயேசுவின் சீடரும் அல்ல. இயேசுவின் போதனைகளை கேட்டவரும் அல்ல. இன்னும் சொல்வதாக இருந்தால் இயேசுவின் வாழ்நாளில் அவரை எதிர்த்தவராக தான் இந்த பவுல் இருந்துள்ளார். இயேசுவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை வரையறை செய்ததில் இயேசுவை காட்டிலும் பவுலின்  செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இயேசு போதித்தவற்றுக்கு முரணாக போதித்தவர் தான் இந்த பவுல்.


இயேசுவோடு முரண்பட்டு பவுல் போதித்த காரியங்களில் ஒன்றுதான் இயேசுவின் வருகை சம்பந்தமானது.


பிலிப்பியர் 2:
6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.


பவுல் குறிப்பிடும் பிலிப்பியர் வசனத்தை இயேசுவின்  வாழ்க்கையோடு ஒப்பிட்டாலே அந்த வசனங்கள் பவுலின் சுயகற்பனை என்பதை புரிந்து கொள்ளலாம்.


42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன், நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
(யோவான் 8 )

இயேசு தான் சுயமாக வரவில்லை பிதாவே தன்னை அனுப்பியதாக இயேசு சொல்கிறார். ஆனால் பவுல் இயேசுவோடு முரண்பட்டு பேசுகிறார். இந்த இருவரில் யார் சொல்வது உண்மை என்ற கேள்வியை பைபிள் படித்து சிந்திக்கும்  ஒவ்வொருவருக்கும் எழும்பும்.


கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை இறைவன் மனுச குமாரனாக சுயமாக  வந்தார் என்பதே.  நான் சுயமாக வரவில்லை என்று இயேசு சொல்வதில் இருந்து  கிறிஸ்தவத்தின் அடிப்படையே உடைந்து விடுகிறது.

மேலும் பிலிப்பியர் 2:8 இல் இயேசு சிலுவைப்பலியை விரும்பி அவரே ஏற்றுக்கொண்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இயேசுவோ தனது இந்த பாத்திரம் நீங்கும்படி கர்த்தரிடம் பிரார்த்தித்தார் என்றும் யார் கண்களிலும் படாமல் ஓடி மறைந்து வாழ்ந்தார் என்றல்லவா பைபிள் சொல்கிறது.


அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து, என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26: 39)

46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
(மத்தேயு 27)


 மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும் நபர் ஏன் மரணத்தில் இருந்து தப்ப ஓடி மறைந்து வாழ வேண்டும்? சிலுவையில் "தேவனே தேவனே ஏன் என்னை கைவிட்டீர்" என்று புலம்ப வேண்டும்?  இவ்வாறு புலம்பிய ஒருவரை விரும்பி  துர்மரணத்தை எடுத்து கொண்டதாக சொல்ல முடியுமா? சிந்திக்கும் நபர் எவரும் இயேசு சிலுவை மரணத்தை விரும்பி ஏற்றுக் கொண்டார் என்று சொல்ல மாட்டார்கள். சந்தேகத்துக்குரிய நபரான பவுலின் வாரத்தையை நம்புவது இறை கோபத்தையே பெற்று தரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்