அல்லாஹ்வும் கர்த்தரும் ஒன்றா?

அல்லாஹ்வும் கர்த்தரும் ஒன்றா?




எல்லா இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அந்த இறைத் தூதர்கள் அனைவரும் ஒரே இறைவனையே போதித்து வணங்கி வந்தனர் என்று பைபிளும் குர்ஆனும் தெளிவாக சொல்கின்றன.


குர்ஆனில் சர்வ வல்லமையுள்ள தேவனின் நாமம் அல்லாஹ் என்று சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இங்கு தான் தடுமாறுகின்றனர். முந்தைய தீரக்கதரிசிகள் யாரும் தங்கள் இறைவனை அல்லாஹ் என்ற நாமம் கொண்டு வணங்கவில்லை என்றும் தங்கள் இறைவனின் நாமம் யெகோவா(YHWH) என்று சொல்கின்றனர். அந்த யெகோவால் அனுப்பப்பட்ட மேசியாவான இயேசு எங்கும் யெகோவா என்ற நாமத்தை பயன்படுத்தவில்லையே, அது ஏன் அவர்களிடம் கேட்டால் தப்பிக்க வழி  தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். புதிய ஏற்பாட்டில் எங்கும் யெகோவா(YHWH) என்ற நாமம் கொண்டு இறைவன் அறியப்படவில்லை. இயேசுவும் யெகோவாவின் நாமத்தை கொண்டு மக்களிடம் பிரசங்கம் செய்யவில்லை.


குர்ஆனை குறை சொல்ல கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் மற்றொரு தந்திரம் முஹம்மது நபிக்கு முன்பே சிலை வணங்கிகளால் அறியப்பட்ட தேவன் தான் அல்லாஹ் என்று வாதிடுவதாகும். அரபுக்களின் பூர்வீக மதம் சிலை வணக்கமல்ல. ஆப்ராஹமின் சந்ததிகளான அரபுக்கள் ஆப்ராஹமின் இறைவனை மட்டுமே வணங்கி வந்தனர். இஸ்ரவேலர்களிடத்தில் தொடர்ந்து தீர்க்கதரிசிகள் வந்தபோதிலும் இடையிடையே சிலை வணக்கம் செய்தனர். அதனால் அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டும் வந்தனர். ஆனால் நீண்ட நெடும் காலம் எந்த தீர்க்கதரிசியும் அனுப்பப்படாத அரபுக்கள் இடையே அல்லாஹ்வுக்கு இனை வைக்கும் சிலை வணக்கத்தின் பக்கம் சென்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அல்லாஹ் என்ற நாமம் ஆப்ராஹம்  வணங்கிய இறைவனின் நாமம் ஆகும். அதனால் தான் முஹம்மது நபிக்கு முன்பு உள்ள ஆரம்ப கால  கிறிஸ்தவர்கள் முதல் இன்று வரை சர்வ வல்லமையுள்ள தேவனை 'அல்லாஹ்'  என்ற நாமம் கொண்டே அரபு கிறிஸ்தவர்கள்  அறிந்து வருகின்றனர் என்பதாகும்.


அதுமட்டுமல்ல பைபிள் தேவனின் நாமமான "யெகோவா" யூத மதமும் கிறிஸ்தவ மதமும் உருவாவதற்கு முன்பே கானான் பகுதியில் உள்ள சிலை வணக்கம் செய்யும் மக்களால் வணங்கப்பட்ட போர் கடவுளின் பெயராகும். அல்லாஹ் என்ற நாமம் சிலை வணங்கிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பைபிள் தேவன் ஆக முடியாது என்று கிறிஸ்தவர்கள் நினைத்தால் யெகோவா என்ற நாமமும் அந்த சர்வ வல்லமையுள்ள தேவனை குறிக்க முடியாது என்ற நிலைக்கு வர வேண்டும். ஏனெனில் யெகோவா என்ற நாமம் யூத மதத்துக்கு முன்னால் சிலை வணங்கிகளால் வணங்கப்பட்ட கடவுளின் பெயர் என்பதால். "எல்"(El) என்பது பைபிள் இறைவனின் மற்றொரு  பெயராகும். இந்த நாமமும் யூத மதத்துக்கு முன்னால் கானான் பகுதி மக்களால் வணங்கப்பட்ட தேவர்களின் தலைமை கடவுளின் பெயராகும்.


யெகோவா என்ற நாமம் இறைவனின் தனிப்பட்ட பெயர் அல்ல. அது ஒரு பண்பு பெயர். யெகோவா என்றால் 'இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்று அர்த்தம். யெகோவா என்ற சொல் வீட்டு மொழியில் ஹவா(havah) என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஹவா என்றால் ஹீப்ருவில் "இருக்கிறவர்" என்று அர்த்தம்.


பைபிளில் சொல்லப்பட்ட தேவன் இஸ்ரவலின் தேவன் என்றே அறியப்படுகின்றார். ஏனெனில் பைபிளும் பைபிளில் சொல்லப்பட்ட தீரக்கதரிசிகளும் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டவர்கள் என்பதால். இறுதி தூதரான முஹம்மது நபி அனைத்து மக்களுக்கும் தூதராக அனுப்பப்பட்டவர். குர்ஆனில் அல்லாஹ் தன்னை அகிலங்களின் அதிபதி என்று அடையாளப்படுத்துகின்றான். அல்லாஹ் என்ற நாமமே சர்வ வல்லமையுள்ள தேவனின் தனிப்பட்ட பெயராகும். அல்லாஹ் மற்றும் இலாஹ் என்ற சொல்கள் இறைவனை குறிக்க அரபியில் பயன்படுத்தப்பட்டாலும், சர்வ வல்லமையுள்ள தேவனை அல்லாஹ் என்ற நாமம் கொண்டே அறியப்படுகின்றான். பொதுவாக அரபுக்கள் அனைவரும் ஆப்ராஹம் மதங்களை பின்பற்றுவதால் ஆப்ராஹமின் இறைவனான அல்லாஹ் என்ற பதமே அரபுலகில் இறைவனை குறிக்கும்  பொது பெயராகிவிட்டது.  ஆனால் அல்லாஹ் என்ற நாமம் சர்வ வல்லமையுள்ள தேவனின் தனிப்பட்ட நாமமாகும்.


இயேசுவும் தனது வாழ்நாளில் யெகோவா எனும் நாமத்தை கொண்டு மக்களிடம் பிரசங்கம் செய்யவில்லை. இயேசுவின் தாய் மொழியான சிரியன் அராமிக்கில்(Syrian aramic) "எலோஹ( Ĕlāhā) அல்லது அலோஹ(Alaha) என்ற சொல் தான் இஸ்ரவேலர்களின்  இறைவனை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டிலும் இந்த நாமம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹீப்ரு மொழியில் அல்லாஹ் என்ற சொல்லுக்கு தொடர்புடைய சொல் "எலோஹிம்(Elohim)"  ஆகும்.  ஆனால் எலோஹிம் என்பது பன்மை சொல்லாகும். எலோஹிம் என்ற சொல்லின் ஒருமை எலோஹ்(Eloh) ஆகும்.  இம்(Im) என்பது ஹீப்ரு மொழியில் பன்மையை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஆரம்ப கால முதல் அனைத்து தீர்க்கதரிசிகளும் அல்லாஹ் என்ற நாமத்துடன் தொடர்புடைய இறை நாமங்களை கொண்டு தான் தங்கள் இறைவனை வணங்கியுள்ளனர். அதனால் தான் அரபு யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் இறைவனை குறிக்க அல்லாஹ் என்ற நாமத்தையே பயன்படுத்துகின்றனர். அனைத்து தீர்க்கதரிசிகளும் அல்லாஹ் ஒருவனையே இறைவன் என்று போதித்து இருக்க கிறிஸ்தவர்கள் அந்த ஏக இறைவனான அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.

கிறிஸ்தவர்களே ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அனைத்து தீர்க்கதரிசிகளும் அல்லாஹ்வையே வணங்கியுள்ளனர். அவர்களுக்கு பரலோக சாம்ராஜ்யத்தில் கண்ணியமான இடம் உண்டு. இதற்கு உங்கள் நம்பிக்கையே ஆதாரம்.  அனைத்து தீர்க்கதரிசிகளும் வணங்கிய அல்லாஹ்வை வணங்கும் முஸ்லீம்களுக்கும் பரலோக சாம்ராஜ்யம் உண்டு. ஆனால் இயேசு உட்பட எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவ இறைவனை வணங்கும் உங்களின் நிலை என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்