தீண்டாமையை வேரறுக்கும் இஸ்லாம்
தீண்டாமையை வேரறுக்கும் இஸ்லாம்
உலகம் முழுவதும் மனிதர்கள் தீண்டாமையினால் கொடுமைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு முன் தீண்டாமையை ஒழிக்கும் அருமருந்தாக இருந்தது இஸ்லாம். கிறிஸ்தவ மேற்கத்தியர்களின் வெள்ளை இன ஆதிக்கத்திற்கு தீர்வாக கருப்பு இன மக்களால் தூக்கி பிடிக்கப்பட்டது இஸ்லாம். அதே போன்று இந்தியாவில் ஜாதி கொடுமைகளில் இருந்து தப்பிக்க மக்கள் அலை அலையாய் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(திருக்குர்ஆன் 49 13)
ஓர் ஆண் மற்றும் பெண்ணில் உருவானது தான் மனித இனம் என்று சொல்லும் குர்ஆன் இறைவனிடத்தில் சிறந்தவர் அவனை பயந்து அவனது கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்பவர் தான் என்று சொல்கிறது.
தீண்டாமையை ஒழிப்பதற்கு இந்த ஒரு இறைமறை வசனமே போதும். இந்த வசனம் கூறும் அடிப்படை உன்மையை நம்பக்கூடிய ஒரு மனிதன் உள்ளத்தில் கடுகளவேனும் தீண்டாமை எனும் மனநோய் இருக்கமுடியுமா என்று சிந்தித்துப்பாருங்கள்.
இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி தூதரான முஹம்மது நபியும் மக்களுக்கு இடையே நிலவியிருந்த தீண்டாமையை கீழ்கண்டவாறு தகர்த்து எறிகிறார்.
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
இதுப்போன்ற காரணங்களால் தீண்டாமையை எதிர்த்த பல்வேறு நல்ல உள்ளங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாக இஸ்லாத்தை முன் வைத்தனர். அதற்கான காரணம் இஸ்லாம் தீண்டாமையை எதிர்ப்பது போன்று எந்த மதமும் அதனை எதிர்ப்பதில்லை என்பதால் தான் என்று சொன்னால் அது மிகையில்லை.
உலகம் முழுவதும் மனிதர்கள் தீண்டாமையினால் கொடுமைப்படுத்தப்பட்ட போது அவர்களுக்கு முன் தீண்டாமையை ஒழிக்கும் அருமருந்தாக இருந்தது இஸ்லாம். கிறிஸ்தவ மேற்கத்தியர்களின் வெள்ளை இன ஆதிக்கத்திற்கு தீர்வாக கருப்பு இன மக்களால் தூக்கி பிடிக்கப்பட்டது இஸ்லாம். அதே போன்று இந்தியாவில் ஜாதி கொடுமைகளில் இருந்து தப்பிக்க மக்கள் அலை அலையாய் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
(திருக்குர்ஆன் 49 13)
ஓர் ஆண் மற்றும் பெண்ணில் உருவானது தான் மனித இனம் என்று சொல்லும் குர்ஆன் இறைவனிடத்தில் சிறந்தவர் அவனை பயந்து அவனது கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்பவர் தான் என்று சொல்கிறது.
தீண்டாமையை ஒழிப்பதற்கு இந்த ஒரு இறைமறை வசனமே போதும். இந்த வசனம் கூறும் அடிப்படை உன்மையை நம்பக்கூடிய ஒரு மனிதன் உள்ளத்தில் கடுகளவேனும் தீண்டாமை எனும் மனநோய் இருக்கமுடியுமா என்று சிந்தித்துப்பாருங்கள்.
இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி தூதரான முஹம்மது நபியும் மக்களுக்கு இடையே நிலவியிருந்த தீண்டாமையை கீழ்கண்டவாறு தகர்த்து எறிகிறார்.
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
இதுப்போன்ற காரணங்களால் தீண்டாமையை எதிர்த்த பல்வேறு நல்ல உள்ளங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வாக இஸ்லாத்தை முன் வைத்தனர். அதற்கான காரணம் இஸ்லாம் தீண்டாமையை எதிர்ப்பது போன்று எந்த மதமும் அதனை எதிர்ப்பதில்லை என்பதால் தான் என்று சொன்னால் அது மிகையில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக