திரித்துவத்தை நிராகரித்த சர் ஐசக் நியூட்டன்

திரித்துவத்தை நிராகரித்த சர் ஐசக் நியூட்டன் 






கிறிஸ்தவ வரலாற்றில் திரித்துவம் பற்றி ஆய்வு செய்த கிறிஸ்தவ அறிஞர்கள் பலரும் திரித்துவத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ளனர். அவ்வாறு திரித்துவத்தை புறக்கணித்தவர்களில் மாபெரும் அறிவியலாளரான சர் ஐசக் நியூட்டனும் ஒருவர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார்.


”கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”
-சர் ஐசக் நியுட்டன்


தனது அறிவியல் புரட்சிகளுக்கு மத்தியிலும் கிறிஸ்தவத்தை முழுமையாக ஆய்வு செய்ய விரும்பினார். அதன் வெளிப்பாடாக 1670இல் திரித்துவத்தை பற்றி ஆய்வு செய்ய தொடங்கினார் சர் ஐசக் நியூட்டன். அந்த ஆய்வின் முடிவில் திரித்துவம் அத்தநாசியஸ்  கிறிஸ்தவ சபையினால் புகுத்தப்பட்ட ஆதாரமற்ற வழிபாடு என்பதை புரிந்து கொண்டார்.  அத்தநாசியஸ்( கிபி  298-373) சபைக்கு முன்பு வரை திரித்துவ வழிபாடு இல்லை என்பதை உணர்ந்தார். பைபிளை கிரேக்க மொழியில் ஆய்வு செய்த நியூட்டன், மூலப்புத்தகத்தில் இல்லாத  திரித்துவத்தை ஆதரிக்கும்
வசனங்கள்(1 யோவான் 2:7) அத்தநாசியஸ்  சபையினரால் புகுத்தப்பட்டதையும் கண்டறிந்தார். இன்னும் பைபிளில் இறைவன் மூவராக இருக்கிறார் என்று எங்கும் சொல்லப்படவில்லை என்பதையும் கண்டறிந்தார்.

இன்னும் இயேசுவிடமிருந்த ஆற்றல்கள் அனைத்தும் கர்த்தருடையது என்றும், இயேசு சுயமான ஆற்றல் இல்லாதவர் என்றும், கர்த்தரை சார்ந்தே இயேசு உள்ளார் என்றும் சுயமான சித்தத்தின் படி செய்யாமல் கர்த்தரின் சித்தப்படி செய்யும் இயேசு எப்படி கர்த்தருக்கு சமமாக முடியும் என்று கேள்வியும் எழுப்பினார்.


இதனால் திரித்துவத்தை நிராகரித்த சர் ஐசக் நியூட்டன்  எல்லா தீர்க்கதரிசிகளாலும் போதிக்கப்பட்ட ஒரே இறைவனின் மீது நம்பிக்கை கொண்டார்.


வரலாற்று ஆய்வாளரும், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமின்  ஆய்வாளருமான ரிச்சர்ட் வெஸ்ட்பால் கூறுவதாவது:

நியூட்டன் இயேசுவின் அரை தேவத்துவம் என்பதையும் நிராகரிப்பவராக இருந்தார். மக்களை  உருவ வழிபாட்டில் இருந்து உண்மையான இறை மார்க்கத்தின் பக்கம் அழைக்க வந்த மற்ற தீர்க்கதரிசிகளை போல் இயேசுவும் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினார். மனிதனை இறைவனாக வணங்கும் திரித்துவம் உருவ வழிபாட்டின் மற்றொரு வடிவம் என்றார்.(1)

ஆதாரம்:
1. Westfall, R. S. (1986). The Rise of Science and the Decline of Orthodox Christianity: A Study of Kepler, Descartes, and Newton. In David C. Lindberg & Roland L. Numbers (Eds), God and Nature: Historical Essays on the Encounter between Christianity and Science. Los Angeles, California: University of California Press. p. 231

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்