அன்னை ஆயிஷாவை விபச்சாரி(நஅவூதுபில்லாஹ்) என்று ஷியாக்களின் மார்க்க நூல்கள் போதிக்கின்றதா?
அன்னை ஆயிஷாவை விபச்சாரி(நஅவூதுபில்லாஹ்) என்று ஷியாக்களின் மார்க்க நூல்கள் போதிக்கின்றதா?
கிறிஸ்தவ மிஷனரிகள் முஸ்லீம்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்து கொள்வதற்காக அன்னை ஆயிஷாவை தரம் தாழ்ந்து பேசுகின்றனர். யூதர்கள் எவ்வாறு இயேசுவின் கன்னித்தாயான மர்யமை தர்ம தாழ்ந்து பேசினார்களோ அவ்வாறே கிறிஸ்தவர்களும் தரம் தாழ்ந்து அன்னை ஆயிஷாவை விமர்சிக்கின்றனர். விபச்சாரி என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதற்காக அவர்கள் ஷியாக்களின் ஆதார நூல்களை தேடி அலைகின்றனர். அன்னை ஆயிஷாவை குறித்து இந்த விசயத்தில் ஷியாக்களின் நிலைப்பாடு என்ன என்பதை பார்க்கலாம்.
ஷியா அறிஞரான ஷேக் அல் தூஷி தனது நூலான தப்ஸீர் அல் திப்யான் என்ற புத்தகத்தின் 46 வது பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
"நபியின் எந்த மனைவியும் விபச்சாரம் புரியவில்லை. நபியின் மனைவியருள் எவரும் நபியை கஷ்டப்படுத்தும் காரியத்தையோ அல்லது நபியை தன்னை விட்டு விலக்கும் காரியத்தையும் செய்யவில்லை. எவர் நபியின் மனைவி விபச்சாரம் செய்தார் என்று சொல்கிறாரோ அவர் மிகப்பெரிய பாவத்தை செய்துவிட்டார்.
நவீன கால ஷியா அறிஞரான அல் சையத் அப்து அல் ஹூசைன் ஷரப் அல் தீன் தனது நூலான மவ்ஷூத் அல் இமாம சையத் அப்து அல் ஹூசைன் ஷரப் அல் தீன் என்ற புத்தகத்தின் 174 பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்.
இன்னும் மக்கள் நபிமார்களை நம்புவதற்காக அவர்கள் அனைவரும் பாவம் செய்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். ஆதலால் நபிமார்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் காரியம் அது சிறியதாயினும் அதனை விட்டும் அல்லாஹ் அவர்களை பாதுகாக்கின்றான்.
ஷியா அறிஞர்களின் இஜ்மாவின் படி "எந்ந நபியின் மனைவியும் விபச்சாரம் செய்யமாட்டார்கள். அவர்கள் யாராலும் இருந்தாலும் சரி" என்று ஆயிஷாவுக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு என்ற பகுதியில் குறிப்பிடுகின்றார்.
அல் ஷயீத் தனது நூலான யன் அல் ஷியா என்ற புத்தகத்தின் 1 வது பாகம் 172 வது பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
நூஹ் நபியின் மனைவியை போன்று ஒரு நபியின் மனைவி இறை மறுப்பாளராக கூட இருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் நபியை கண்ணியத்தை குலைக்கும் விபச்சாரியாக இருக்க மாட்டார்கள். இது ஏனெனில் நபியின் சொல் மற்றும் செயலை மக்கள் பின்பற்றுவதில் இருந்து தடுத்து நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை பாதிக்கும் என்பதால். ஆதலால் அனைத்து ஷியாக்களும் நபிமார்களின் மனைவிகள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் என்ற கருத்தை கொண்டவர்கள் என்று தனது கருத்தை பதிவு செய்கின்றார்.
அன்னை ஆயிஷா விபச்சார குற்றமற்றவர் என்பதை சொல்லும் விதத்தில் மற்றொரு ஷியா அறிஞரான அல் ஷேய்க் அல் வாத் என்பவர் "தன்ஷீஹ் ஆயிஷா" என்ற புத்தகத்தையே எழுதியுள்ளார்.
ஆதலால் ஷியாக்களின் ஆதாரப்பூர்வமான எந்த புத்தகத்திலும் அன்னை ஆயிஷா விபச்சாரம் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஷியாக்கள் அன்னை ஆயிஷாவை வெறுப்பவர்களாக இருந்த போதிலும் இந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
கிறிஸ்தவ மிஷனரிகள் முஸ்லீம்கள் மீதான காழ்ப்புணர்வை தீர்த்து கொள்வதற்காக அன்னை ஆயிஷாவை தரம் தாழ்ந்து பேசுகின்றனர். யூதர்கள் எவ்வாறு இயேசுவின் கன்னித்தாயான மர்யமை தர்ம தாழ்ந்து பேசினார்களோ அவ்வாறே கிறிஸ்தவர்களும் தரம் தாழ்ந்து அன்னை ஆயிஷாவை விமர்சிக்கின்றனர். விபச்சாரி என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதற்காக அவர்கள் ஷியாக்களின் ஆதார நூல்களை தேடி அலைகின்றனர். அன்னை ஆயிஷாவை குறித்து இந்த விசயத்தில் ஷியாக்களின் நிலைப்பாடு என்ன என்பதை பார்க்கலாம்.
ஷியா அறிஞரான ஷேக் அல் தூஷி தனது நூலான தப்ஸீர் அல் திப்யான் என்ற புத்தகத்தின் 46 வது பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
"நபியின் எந்த மனைவியும் விபச்சாரம் புரியவில்லை. நபியின் மனைவியருள் எவரும் நபியை கஷ்டப்படுத்தும் காரியத்தையோ அல்லது நபியை தன்னை விட்டு விலக்கும் காரியத்தையும் செய்யவில்லை. எவர் நபியின் மனைவி விபச்சாரம் செய்தார் என்று சொல்கிறாரோ அவர் மிகப்பெரிய பாவத்தை செய்துவிட்டார்.
நவீன கால ஷியா அறிஞரான அல் சையத் அப்து அல் ஹூசைன் ஷரப் அல் தீன் தனது நூலான மவ்ஷூத் அல் இமாம சையத் அப்து அல் ஹூசைன் ஷரப் அல் தீன் என்ற புத்தகத்தின் 174 பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறுகின்றார்.
இன்னும் மக்கள் நபிமார்களை நம்புவதற்காக அவர்கள் அனைவரும் பாவம் செய்வதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். ஆதலால் நபிமார்களுக்கு அவமானம் ஏற்படுத்தும் காரியம் அது சிறியதாயினும் அதனை விட்டும் அல்லாஹ் அவர்களை பாதுகாக்கின்றான்.
ஷியா அறிஞர்களின் இஜ்மாவின் படி "எந்ந நபியின் மனைவியும் விபச்சாரம் செய்யமாட்டார்கள். அவர்கள் யாராலும் இருந்தாலும் சரி" என்று ஆயிஷாவுக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு என்ற பகுதியில் குறிப்பிடுகின்றார்.
அல் ஷயீத் தனது நூலான யன் அல் ஷியா என்ற புத்தகத்தின் 1 வது பாகம் 172 வது பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.
நூஹ் நபியின் மனைவியை போன்று ஒரு நபியின் மனைவி இறை மறுப்பாளராக கூட இருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் நபியை கண்ணியத்தை குலைக்கும் விபச்சாரியாக இருக்க மாட்டார்கள். இது ஏனெனில் நபியின் சொல் மற்றும் செயலை மக்கள் பின்பற்றுவதில் இருந்து தடுத்து நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை பாதிக்கும் என்பதால். ஆதலால் அனைத்து ஷியாக்களும் நபிமார்களின் மனைவிகள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் என்ற கருத்தை கொண்டவர்கள் என்று தனது கருத்தை பதிவு செய்கின்றார்.
அன்னை ஆயிஷா விபச்சார குற்றமற்றவர் என்பதை சொல்லும் விதத்தில் மற்றொரு ஷியா அறிஞரான அல் ஷேய்க் அல் வாத் என்பவர் "தன்ஷீஹ் ஆயிஷா" என்ற புத்தகத்தையே எழுதியுள்ளார்.
ஆதலால் ஷியாக்களின் ஆதாரப்பூர்வமான எந்த புத்தகத்திலும் அன்னை ஆயிஷா விபச்சாரம் செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஷியாக்கள் அன்னை ஆயிஷாவை வெறுப்பவர்களாக இருந்த போதிலும் இந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக