இறைவன் ஒருவனே.
இறைவன் ஒருவனே.
✍இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் தங்களை போன்று தங்கள் இறைவனுக்கும் மகன்கள் குடும்பம் உண்டு என்றும் இன்னும் ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருக்கிறார்கள் என்றும் கற்பனை செய்து கொண்டு வாழ்கின்றனர். இஸ்லாம் தவிர பெரும்பாலான மதங்களில் இத்தகைய தவறான நம்பிக்கை இருப்பதை நம்மால் காண முடிகிறது.
✍மனிதர்கள் தங்களின் வயதான காலத்தில் தங்களை கவனித்து கொள்ளவும், இன்னும் தங்களது மறைவுக்கு பிறகு தங்களது இனவிருத்திக்கும் என்றும் குழந்தைகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். இறைவன் என்பவன் மூப்பு இறப்பு போன்ற பலவீனங்கள் இல்லாதவன். ஆதலால் இறைவன் தனக்கு மகனை ஏற்படுத்தி கொள்வதை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்.
✍இறைவன் மனிதனுக்கு நேர் வழி காட்ட தனது தூதர்களை அனைத்து சமூகத்துக்கும் அனுப்பி வைத்தான். மக்களில் அந்த தூதர்களை எதிர்த்தவர்களும் உண்டு. அந்த தூதர்களின் மீது உள்ள அளவு கடந்த அன்பால் அவர்களையே இறைவனாக்கிய சமூகமும் உண்டு. உதாரணத்திற்கு கிறிஸ்தவர்களை சொல்லலாம். அவர்கள் இறைத் தூதர் இயேசுவை இறைவனாக்கியதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி தூதரையும் புறக்கணித்தனர்.
💎அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன் 19:35)
✍இன்னும் சிலரோ பல தெய்வ வழிபாட்டின் நம்பிக்கையாளர்களான உள்ளனர். தங்களை போன்று தங்கள் தெய்வங்களுக்கும் குடும்பம் உண்டு, குழந்தைகள் உண்டு என்று தவறான நம்பிக்கையில் உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பதை அவர்கள் சிந்திக்க மறுத்து விட்டனர். பல தெய்வங்கள் இருந்திருந்தால் தங்களின் சக்தியை காண்பிக்க அந்த தெய்வங்களே தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்கும். அதனால் இந்த பூமி பலவாறு சிதைக்கப்பட்டிருக்கும் என்று குர்ஆன் தெளிவாக சொல்கிறது. பல தெய்வ வழிபாட்டாளர்களின் மதமும் அதை உறுதிப்படுத்துகிறது. தங்களின் பக்தர்களை மற்ற தெய்வங்களின் பக்தர்களிடம் இருந்து பாதுகாக்க தங்களுக்குள் அந்த தெய்வங்கள் சண்டையிட்டு கொண்டதாகவும் அவர்களின் மதப்புத்தகங்கள் போதிக்கின்றன. இவ்வாறு பல தெய்வங்கள் இருந்திருந்தால் இந்த பூமி சீர்கெட்டு போயிருக்கும்.
✍இதை அல்லாஹ் தனது வேதத்தில் சுட்டிக்காட்டி ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்திருந்தால் இந்த உலகம் சீர்கெட்டு போயிருக்கும் ஆதலால் தானே இறைவன் என்றும் தன்னை தவிர வேறு யாரும் இறைவன் இல்லை என்றும் அல்லாஹ் தெளிவாக சொல்கின்றான்.
💎அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
(அல்குர்ஆன் 23:91)
💎(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
(அல்குர்ஆன் 21:22)
✍அல்லாஹ் எல்லா சமூகத்தாருக்கும் தனது தூதர்களை அனுப்பி வைத்தான். அந்த ஏக இறைவனை வணங்க சொல்லியே எல்லா தூதர்கள் போதித்து வந்துள்ளனர்.
💎(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
(அல்குர்ஆன் 21:25)
💎மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:163)
✍அனைத்து அதிகாரத்தையும் உடைய அந்த ஏக இறைவன் மட்டுமே உண்மையானவன்.
💎அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
(அல்குர்ஆன் 2:255)
✍இந்த உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் தங்களை போன்று தங்கள் இறைவனுக்கும் மகன்கள் குடும்பம் உண்டு என்றும் இன்னும் ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருக்கிறார்கள் என்றும் கற்பனை செய்து கொண்டு வாழ்கின்றனர். இஸ்லாம் தவிர பெரும்பாலான மதங்களில் இத்தகைய தவறான நம்பிக்கை இருப்பதை நம்மால் காண முடிகிறது.
✍மனிதர்கள் தங்களின் வயதான காலத்தில் தங்களை கவனித்து கொள்ளவும், இன்னும் தங்களது மறைவுக்கு பிறகு தங்களது இனவிருத்திக்கும் என்றும் குழந்தைகளை ஏற்படுத்தி கொள்கின்றனர். இறைவன் என்பவன் மூப்பு இறப்பு போன்ற பலவீனங்கள் இல்லாதவன். ஆதலால் இறைவன் தனக்கு மகனை ஏற்படுத்தி கொள்வதை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்.
✍இறைவன் மனிதனுக்கு நேர் வழி காட்ட தனது தூதர்களை அனைத்து சமூகத்துக்கும் அனுப்பி வைத்தான். மக்களில் அந்த தூதர்களை எதிர்த்தவர்களும் உண்டு. அந்த தூதர்களின் மீது உள்ள அளவு கடந்த அன்பால் அவர்களையே இறைவனாக்கிய சமூகமும் உண்டு. உதாரணத்திற்கு கிறிஸ்தவர்களை சொல்லலாம். அவர்கள் இறைத் தூதர் இயேசுவை இறைவனாக்கியதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நேர்வழி காட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி தூதரையும் புறக்கணித்தனர்.
💎அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
(அல்குர்ஆன் 19:35)
✍இன்னும் சிலரோ பல தெய்வ வழிபாட்டின் நம்பிக்கையாளர்களான உள்ளனர். தங்களை போன்று தங்கள் தெய்வங்களுக்கும் குடும்பம் உண்டு, குழந்தைகள் உண்டு என்று தவறான நம்பிக்கையில் உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பதை அவர்கள் சிந்திக்க மறுத்து விட்டனர். பல தெய்வங்கள் இருந்திருந்தால் தங்களின் சக்தியை காண்பிக்க அந்த தெய்வங்களே தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்கும். அதனால் இந்த பூமி பலவாறு சிதைக்கப்பட்டிருக்கும் என்று குர்ஆன் தெளிவாக சொல்கிறது. பல தெய்வ வழிபாட்டாளர்களின் மதமும் அதை உறுதிப்படுத்துகிறது. தங்களின் பக்தர்களை மற்ற தெய்வங்களின் பக்தர்களிடம் இருந்து பாதுகாக்க தங்களுக்குள் அந்த தெய்வங்கள் சண்டையிட்டு கொண்டதாகவும் அவர்களின் மதப்புத்தகங்கள் போதிக்கின்றன. இவ்வாறு பல தெய்வங்கள் இருந்திருந்தால் இந்த பூமி சீர்கெட்டு போயிருக்கும்.
✍இதை அல்லாஹ் தனது வேதத்தில் சுட்டிக்காட்டி ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்திருந்தால் இந்த உலகம் சீர்கெட்டு போயிருக்கும் ஆதலால் தானே இறைவன் என்றும் தன்னை தவிர வேறு யாரும் இறைவன் இல்லை என்றும் அல்லாஹ் தெளிவாக சொல்கின்றான்.
💎அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
(அல்குர்ஆன் 23:91)
💎(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
(அல்குர்ஆன் 21:22)
✍அல்லாஹ் எல்லா சமூகத்தாருக்கும் தனது தூதர்களை அனுப்பி வைத்தான். அந்த ஏக இறைவனை வணங்க சொல்லியே எல்லா தூதர்கள் போதித்து வந்துள்ளனர்.
💎(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
(அல்குர்ஆன் 21:25)
💎மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 2:163)
✍அனைத்து அதிகாரத்தையும் உடைய அந்த ஏக இறைவன் மட்டுமே உண்மையானவன்.
💎அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
(அல்குர்ஆன் 2:255)
கருத்துகள்
கருத்துரையிடுக