மறுமையில் அல்லாஹ்விற்கும் இயேசுவுக்கும் நடக்கும் உரையாடல்

மறுமையில் அல்லாஹ்விற்கும் இயேசுவுக்கும் நடக்கும் உரையாடல்







ஒவ்வொரு மனிதனும் மறுமையில் அல்லாஹ்வின் முன்  விசாரிக்கப்படுவார்கள்.   இறைத்தூதர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை குறித்து விசாரிக்கப்படுவார்கள். அந்த வகையில்  நாளை மறுமையில் இயேசு அல்லாஹ்வினால் விசாரிக்கப்படுவதை குர்ஆன் நம் கண்முன்னே காட்டுகிறது.


இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.

"நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்).

அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.
(அல்குர்ஆன் 5:116-120)


அதாவது தன்னையும் தன் தாயாரையும் இரு தெய்வங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று  போதித்தாயா என்று இயேசுவிடம் அல்லாஹ் விசாரிப்பான். அதற்கு இயேசு இல்லை... அவ்வாறு இல்லை. என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்று மட்டுமே தான் போதித்ததாக இயேசு கூறுவார். ஆம் இதை பைபிளும் உண்மைப்படுத்துகிறது. இயேசு தன் வாழ்நாளில் என்றும் தன்னை வணங்க சொல்லி பிரச்சாரம் செய்தது இல்லை. அல்லாஹ் ஒருவரையே வணங்க சொல்லியே இயேசு மக்களுக்கு போதித்தார்.

29. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
(மாற்கு 12)

இவ்வாறு இயேசு தெளிவாக அல்லாஹ்(கர்த்தர்) ஒருவனே இறைவன் என்று மக்களிடம் போதித்துள்ளதை பைபிளும் உறுதி செய்கிறது.  தனது சுயமான சித்தத்தின் படி செய்யாமல் அல்லாஹ்வின் சித்தப்படியே இயேசு செயல்பட்டதால் தான் அவரது தீர்ப்பு நீதியாக இருந்தது என்று இயேசு சொல்வதாக பைபிளும் போதிக்கிறது. இதுதான் ஒரு முஸ்லீமின் பண்பும். அல்லாஹ்வின் விருப்பத்தின் படியே வாழ்வது ஒரு முஸ்லீம் தனது விருப்பமாக கொள்வான். அதையே இயேசும் செய்துள்ளார். இயேசு சுயமாக ஒன்றும் செய்யவில்லை. அனைத்தையும் அல்லாஹ்வின் சித்தப்படியே செய்தார்.


நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
யோவான் 5:30


நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார். 
யோவான் 14:31


இன்னும் பிதாவின் சித்தப்படி அதாவது அல்லாஹ்வின் கட்டளைப்படி வாழ்பவன்  தான் பரலோக சாம்ராஜ்யத்தில் நுழைய முடியும் என்றும் மக்களுக்கு போதித்துள்ளார். தன்னை நோக்கி இறைவனே என்று சொல்பவர் பரலோக சாம்ராஜ்யத்தில் நுழைவதில்லை  என்ற எச்சரிக்கையையும் கொடுக்கிறார்.


பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை.
மத்தேயு 7:21


மறுமையில் அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்விடம் உள்ளது. தனது அடியார்களை மன்னிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் உள்ளவன் அல்லாஹ் மட்டுமே. அல்லாஹ் நீதியாளன். மறுமையில் இயேசுவும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்.  அனைத்து தீர்க்கதரிசிகளும் அந்த ஒரே இறைவனையே வணங்கினர்.

ஆதலால் இயேசு வணங்கிய அந்த ஒரே இறைவனையே நாம் வணங்குவோம். சத்தியத்தின் பக்கம் நாம் பயணிக்கலாம். வாருங்கள்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்