இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யூதர்கள் அல்லாஹ்வை நம்புகிறார்களா? - யூத ரப்பியின் விளக்கம்

யூதர்கள் அல்லாஹ்வை நம்புகிறார்களா? -  யூத ரப்பியின் விளக்கம் யூத ரப்பியின் உரையின் சுருக்கம்: முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்வும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இறைவனும் ஒன்றா என்று கேள்விகள் கேட்கின்றனர். ஆம். முஸ்லீம்களின் கடவுள் கொள்கையும் யூதர்களின் கடவுள் கொள்கையும் ஒன்றுதான். முஸ்லீம்கள் வணங்கும் அல்லாஹ்வும் யூதர்கள் வணங்கும் இறைவனும் ஒன்று தான். சிலர் அல்லாஹ்வை சந்திர கடவுள் என்று கூறும் கூற்றானது முட்டாள்தனமானது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் என்ற சொல்லை எந்த இறைவனை வணங்க பயன்படுத்தினர் என்பதை நான் அறிய மாட்டேன். ஆனால் இப்போது அல்லாஹ் எனும் நாமத்தை முஸ்லீம்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பதையே நாம் பார்க்க வேண்டும்.  God எனும் ஆங்கில சொல்லை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதேனும் ஒரு சிலையை வணங்கவும் பயன்படுத்தி இருக்கலாம். அதற்காக இப்போது  ஒரே இறைவனை வணங்க God என்ற சொல்லை பயன்படுத்துவது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் God என்று அவர்கள் வணங்கிய சிலையை குறிக்காது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது இறைவனை தானே தவிர, அந்த God எனும் சொல்லை அல்ல.  அதே போன்...

இயேசு பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவரா???

படம்
இயேசு பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவரா??? ▶️பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3:13) ✍மேற்கண்ட வசனத்தில் இயேசு பரலோகத்தில் இருந்து  வந்தவர் என்று சொல்லப்பட்டுள்ளதால், இயேசு இந்த உலகத்திற்கு அனுப்பப்படும் முன்னரே இருந்துள்ளார் என்றும், அதனால் இயேசு தெய்வீகத்தன்மை வாய்ந்தவர் என்றும் வாதிடுகின்றனர். ✍இயேசுவை குறித்து உவமையாக சொல்லப்பட்டதை கொண்டு அவரை இறைவன் என்று வாதிடுவது கிறிஸ்தவர்களின் அறியாமை ஆகும். எந்த வசனத்தையும் முன்பின் வசனங்களோடு படிக்கும்போது தான் அதன் உண்மை தன்மையை புரிந்து கொள்ள முடியும். மேற்கண்ட வசனம் உள்ள யோவானின் 3ஆம் அத்தியாயத்தில் இயேசு யாரிடம் பேசினாரோ அந்த நபரே இயேசு போதகர் என்பதை அறிந்து வைத்திருந்து அதை இயேசுவிடம் கூறுகிறார். அதை இயேசு மறுக்காமல் தான் இந்த உரையை நடத்துகின்றார்.  இதன் மூலம் இயேசு தான் ஒரு போதகர் தான் என்பதை மறுக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். ▶️1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். ▶️2. அவன் இராக்கா...

ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா? - பாகம் 2

படம்
💎💎 ஏசாயா 48:16  வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா? 💎💎 💎நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். (ஏசாயா 48:16) ✍ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கவில்லை என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இயேசு பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகளுடன் பேசவில்லை என்பதை முந்தைய பதிவில் நாம் பார்த்தோம். ➡️அதன் தொடர்ச்சியை இந்த பதிவில்  பார்ப்போம். ✍ஏசாயா 48:16இல் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர். முதல் பேச்சாளர் கர்த்தர் மற்றும் இரண்டாவது பேச்சாளர் தீர்க்கதரிசி. ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ✍ஏசாயா 48:16இல் உள்ள கர்த்தரின் பேச்சு: 💎நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; 🌟அதே வசனத்தில் உள்ள தீர்க்கதரிசியின் வார்த்தை:  💎இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். ✍ முத...

ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா?

படம்
ஏசாயா  48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா? பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒரே தேவனாக இறைத்தன்மையில் சமமானவர்களாக உள்ளனர் என்பதே திரித்துவ நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கைக்கு ஒட்டு மொத்த பைபிளில் எங்கு தேடினாலும் அதற்கான ஆதார வசனமே இல்லை. இதனால் விரக்தியடைந்த கிறிஸ்தவர்கள் பைபிள்  வசனங்களை திரித்து திரித்துவ விளக்கம் கொடுக்கின்றனர். அவ்வாறு அவர்கள் தவறான விளக்கம் கொடுக்கும் வசனங்களில் ஒன்றுதான் ஏசாயா 48:16. அதனை பற்றி கீழே காண்போம். நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். (ஏசாயா 48:16) மேற்கண்ட வசனத்தில் உள்ள  "கர்த்தராகிய ஆண்டவரும்  அவருடைய ஆவியும் என்னை அனுப்பினார்கள்" என்ற வாசகத்தை திரித்துவ ஆதார வசனமாக கிறிஸ்தவர்கள் திரித்து விளக்கம் தருகின்றனர். மேற்கண்ட வசனம் முழுவதும் இயேசு தான் பேசினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். ஆனால் இயேசு  தான் பேசினார் என்பதற்...

மஸ்ஜிதில் தொழுகும் யூதர்.

மஸ்ஜிதில் தொழுகும் யூதர் ஸலோம் என்ற அறிமுகத்துடன் வரும் யூதர் முஸ்லிம்களிடம் மஸ்ஜிதில் தனது மத நம்பிக்கை படி வழிபாடு செய்ய அனுமதி கேட்கிறார். முஸ்லீம்களும் அனுமதி கொடுக்கவே அந்த யூதர் மஸ்ஜிதில் தனது மத நம்பிக்கைப்படி வழிபாடு செய்கிறார். தனது வழிபாடு முடித்தவுடன்..... மஸ்ஜிதின் மேனேஜர் ஒசாமா அந்த யூதரிடம் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அவர் பெயரை கேட்கின்றார். லெவி என்று தனது பெயரை யூதர் அறிமுகப்படுத்தி கொள்கின்றார். #நாம்_அனைவரும்_வணங்குவது_ஒரே_இறைவனை_தான் என்று பரஸ்பரம் கூறி கொள்கின்றனர். அந்த யூதர் "நீங்கள் யூதர்களை வெறுக்கிறீர்களா" என்று முஸ்லீம்களிடம் கேட்கிறார். இல்லை என்று முஸ்லீம்கள் மறுக்கின்றனர். அப்படியென்றால் "முஸ்லீம்கள் யூதர்களை தங்கள் எதிரியாக பார்ப்பது இல்லையா?" என்று யூதர் கேட்க முஸ்லீம்கள் இல்லை என்று மறுக்கின்றனர். யூத முஸ்லீம் மோதல் அரசியல் காரணங்களால் தான் உண்டாகிறது என்றும் முஸ்லீம்கள் விளக்குகின்றனர். குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தில் தோராவை இறை வேதம் என்று நம்ப சொல்வதை காணலாம் என்றும் இன்னும் தோராவில் உள்ள வரலாற்று சம்பவங்களையும...

மானமுள்ள மனிதனின் வெட்கமற்ற வழிபாடு.

படம்
மானமுள்ள மனிதனின் வெட்கமற்ற வழிபாடு. முன்பொரு காலத்தில் சிவ ஆலயத்தை முனிவர்கள் தங்கள் தவத்திற்கு பயன்படுத்தி வந்தனர். அவர்களை சோதிக்க விரும்பிய சிவன் முனிவர்கள் யாகத்துக்காக விறகு எடுக்க காட்டிற்கு சென்ற சமயத்தில் முனிவர்களின் மனைவிகளுக்கு முன்பாக நிர்வாணமாக கைகளில் தனது ஆணுறுப்பை பிடித்த படி காட்சியளித்தார். இதை கண்ட முனிவர்களின் மனைவிகள் திடுக்கிட்டனர். முனிவர்கள் தங்கள் இல்லம் திரும்பிய சமயத்தில் நிர்வாணமாக நின்ற நபரால் தங்களது மனைவிகள் வசியப்பட்டு இருப்பதை கண்டு கோபமடைந்தனர்.  உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்த முனிவர்கள் நிர்வாணமாக நின்ற சிவனிடம் கோரினர். சிவன் தனது அடையாளத்தை வெளிகாட்டவில்லை. இதனால் சிவனின் ஆணுறுப்பு அருந்து விழ முனிவர்கள் சபித்தனர். சிவனின் ஆணுறுப்பு அருந்து விழுந்தது. கோபமடைந்த சிவனால் மூன்று உலகங்களும் தீப்பற்றி எறிந்தது. இதனால் பதற்றமடைந்த முனிவர்கள் உதவி தேடி பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மா சிவனின் அடையாளத்தை முனிவர்களுக்கு வெளிப்படுத்தினார். அறுந்து விழுந்த சிவனின் ஆணுறுப்பை பார்வதியின் யோனி தாங்கி பிடிப்பதன் மூலமே சிவனின் கோபம் தணியும் என்று சொல்...

இயேசு பாவமற்றவரா?

படம்
இயேசு பாவமற்றவரா? இயேசு பாவமற்றவர் என்று கிறிஸ்தவர்கள் சொல்லி கொண்டிருப்பார்கள். உண்மையில் இயேசு பாவமற்றவரா என்பதை ஆராய்வதே இந்த பதிவின் நோக்கம். விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணை கொண்டு வந்து நியாயப்பிரமாண சட்டப்படி அவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும். இதனை குறித்து நீர் என்ன சொல்கிறீர் என்று யூதர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர். அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். (யோவான் 8:3-5) உண்மையில் கர்த்தரின் தீர்க்கதரிசியாக இருந்திருந்தால் இயேசு  கர்த்தரின் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இயேசு அவ்வாறு செய்யாமல் உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதலில் கல்லெறியட்டும் என்று சொல்லி அந்த விபச்சாரியின் செயலை மறைமுகமாக ஆதரிக்கிறார். அதனால் என்னவோ இன்றும் ஐரோப்...

தாவீது தீர்க்கதரிசி இல்லை என்று சொல்லி விவாதத்தில் அவமானப்பட்ட கிறிஸ்தவர்

தாவீது தீர்க்கதரிசி இல்லை என்று சொல்லி விவாதத்தில் அவமானப்பட்ட கிறிஸ்தவர் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வேதம் பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு கீழ்கண்ட வீடியோ ஒரு மிகச்சிறந்த உதாரணம். பைபிளை பற்றி முழுமையான ஞானம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்வதோடு மட்டுமல்லாமல் பிறரையும் வழிகெடுக்கின்றனர். கீழே உள்ள வீடியோவில்: தாவீது இறைத்தூதர் இல்லை என்று கிறிஸ்தவர் ஒருவர் பிடிவாதமாக முஸ்லீமிடத்தில் விவாதம் செய்கிறார். தாவீது இறைத்தூதர் என்று சொல்லும் ஒரே ஒரு வசனத்தை  பைபிளில் இருந்து காட்டுங்கள் என்று சவாலும் விடுகின்றார். அதனை தொடர்ந்து முஸ்லீம்களும் தாவீதை இறைத்தூதர் என்று சொல்லும் வசனத்தை(Acts 2:30) பைபிளில் இருந்து காட்டியவுடன் பேச்சு மூச்சு இல்லாமல் அவமானத்தால் அமைதியாகி விடுகின்றார். இதோ அந்த வசனம்: சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவன் தீர்க்கதரிசியாயிருந்து...

ஜாதியின் பெயரால் கிறிஸ்தவ பிரச்சாரம்

படம்
ஜாதியின் பெயரால் கிறிஸ்தவ பிரச்சாரம் கிறிஸ்தவ பிராமண சேவா சமிதி ✍கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்ய எவ்வளவு கீழ்த்தரமாகவும் இறங்குவார்கள் என்பதற்கு இந்த போட்டோ ஒரு ஆதாரம். ✍ஒடுக்கப்பட்ட மக்களே!!! கிறிஸ்தவம் உங்களை ஜாதி கொடுமையை விட்டும் பாதுகாக்காது. தீண்டாமை ஒழிய இஸ்லாமே நன்மருந்து 💎மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (திருக்குர்ஆன் 49 13) ✍ஓர் ஆண் மற்றும் பெண்ணில் உருவானது தான் மனித இனம் என்று சொல்லும் குர்ஆன் இறைவனிடத்தில் சிறந்தவர் அவனை பயந்து அவனது கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்பவர் தான் என்று சொல்கிறது. 💎மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளை...

இயேசு ஒரு தீர்க்கதரிசி

இயேசு ஒரு தீர்க்கதரிசி  பைபிளில்  இருந்து  அடுக்கடுக்கான ஆதாரங்கள்.

இயேசுவை இறைவன் என்று யோவான் சுவிசேஷம் சொல்கிறதா?

படம்
இயேசுவை இறைவன் என்று யோவான் சுவிசேஷம் சொல்கிறதா? ✍யூத இனத்தில் இருந்து தோன்றிய கிறிஸ்தவ மதம் எந்த தீர்க்கதரிசியும் போதிக்காத திரித்துவம் எனும் சிலை வணங்கிகளின் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு அந்தி கிறிஸ்தவ மதமாக உலகில் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. இவர்கள் இறைவன் என்று நம்பும் கர்த்தரோ, இயேசுவோ அல்லது பரிசுத்த ஆவியோ எந்த ஒரு இடத்திலும் இறைவன் திரித்துவமாக இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றபோதிலும் தங்களது மனோ இச்சையை விளக்கமாக கொண்டு வேத வசனத்தை திரித்து மக்களை வழிக்கெடுக்கும் அந்தி கிறிஸ்தவ வேலையை உலகெங்கும் கிறிஸ்தவர்கள் செவ்வென செய்து வருகின்றனர். ✍இவர்கள் நம்பும் திரித்துவத்திற்கு ஆதாரமாக யோவானின் வசனத்தை நினைவு கூறுவர். ஆனால் யோவானின் வசனம் திரித்துவத்தை மறுக்கிறது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. அதனை பற்றி கீழே காண்போம். ➡️ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான் 1:1) ✍மேற்கண்ட வசனம் இயேசுவை இறைவன் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. ✍கர்த்தரை(God) குறிக்க பயன்படும் சொல்லும், வார்த்தை தேவனாக(god) இருந்த...

வன்முறையை தூண்டும் பைபிள்

படம்
வன்முறையை தூண்டும் பைபிள் கிறிஸ்தவம் அன்பு மார்க்கம் என்று கிறிஸ்தவர்களால் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பைபிள் வசனங்களை கொண்டு கர்த்தர் அன்பு தேவன் போன்று ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இன்று அனைத்து தகவல்களும் இனையத்தள  உதவியுடன் நமது கையிலேயே கிடைக்க கூடியதாக உள்ளது. கிறிஸ்தவர்களின் வேதமான பைபிளை படிக்கும்போது கிறிஸ்தவர்களின் பொய் கூற்று வெளிப்படுவதை நாம் அவதானிக்க முடியும். உபாகமம்  17 2: உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, 3: #நான்_விலக்கியிருக்கிற_வேறே_தேவர்களையாவது_சந்திரசூரியர்_முதலான_வானசேனைகளையாவது_சேவித்து, #அவைகளை_நமஸ்கரிக்கிறதாகக்_காணப்பட்டால், 4: அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், 5: அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாச...

அன்னை மர்யமை விபச்சாரி என்று சொல்லும் யூதர்கள்

அன்னை மர்யமை விபச்சாரி என்று சொல்லும் யூதர்கள்  யூதர்கள் என்னதான் கிறிஸ்தவர்களால் நேசிக்கப்பட்டாலும் யூதர்கள் தங்கள் மத நூல்களில் இயேசுவின் பிறப்பை கேவலப்படுத்தி எழுதி வைத்திருப்பதை ஒருக்காலும் மறுக்க முடியாது. அதனை குறித்து கீழே காண்போம். இயேசு தந்தையில்லாமல் பிறந்தவர் மற்றும் இஸ்ரவேல் மக்களுக்காக இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்.  இயேசுவின் இறைத்தூதுவத்தை ஏற்று கொள்ளாத யூதர்கள் அவரது அதிசய பிறப்பையும் ஏற்று கொள்ள மறுத்தனர். இதனால் இயேசுவின் பிறப்பை குறித்து தாறுமாறாக எழுதி வைத்துள்ளனர். யூதர்களின் வேதமான தோராவுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தல்மூத். இந்த தல்மூத் புத்தகத்தில் இயேசுவின் தாயான அன்னை மேரியை விபச்சாரி என்று எழுதி வைத்துள்ளனர். Sanhedrin 106a . Says Jesus' mother was a whore: "She who was the descendant of princes and governors played the harlot with carpenters. பிரபுக்கள் மற்றும் கவர்னர்களின் சந்ததியில் வந்த அவள் தச்சர்களோடு விபச்சராம் செய்பவளாக இருக்கிறாள். மரியாள் "பேந்தரா" என்ற ரோம சேவகனால் கலங்கப்படுத்தப்பட்டார் எனவும், மரியாள் யோ...