ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா?
ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா?
பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒரே தேவனாக இறைத்தன்மையில் சமமானவர்களாக உள்ளனர் என்பதே திரித்துவ நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கைக்கு ஒட்டு மொத்த பைபிளில் எங்கு தேடினாலும் அதற்கான ஆதார வசனமே இல்லை. இதனால் விரக்தியடைந்த கிறிஸ்தவர்கள் பைபிள் வசனங்களை திரித்து திரித்துவ விளக்கம் கொடுக்கின்றனர். அவ்வாறு அவர்கள் தவறான விளக்கம் கொடுக்கும் வசனங்களில் ஒன்றுதான் ஏசாயா 48:16. அதனை பற்றி கீழே காண்போம்.
நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
(ஏசாயா 48:16)
மேற்கண்ட வசனத்தில் உள்ள "கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்பினார்கள்" என்ற வாசகத்தை திரித்துவ ஆதார வசனமாக கிறிஸ்தவர்கள் திரித்து விளக்கம் தருகின்றனர். மேற்கண்ட வசனம் முழுவதும் இயேசு தான் பேசினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். ஆனால் இயேசு தான் பேசினார் என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பிதாவின் சத்தத்தை ஒருவனும் ஒருக்காலும் கேட்டதில்லை என்ற பைபிள் வசனத்தை ஆதாரமாக வைத்து கொண்டு பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிளுடன் பேசியது கர்த்தர் அல்ல என்றும் இயேசு தான் என்றும் கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் பைபிளில் இல்லை.
ஆனால் இந்த வசனத்தில்(ஏசாயா 48:16) இயேசு பேசவில்லை என்பதற்கு பைபிளே ஆதாரமாக உள்ளது.
1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
(எபிரேயர் 1)
பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசிய கர்த்தர் இறுதி காலத்தில் மட்டுமே இயேசுவின் மூலமாக பேசினார் என்று மேற்கண்ட பைபிள் வசனம் சாட்சியம் கூறுகிறது. அதனால் ஏசாயா 48:16இல் பேசும் நபர் இயேசு இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல பூர்வ காலங்களில் கர்த்தர் தீர்க்கதரிசிளுடன் பேசியுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் பூர்வ காலங்களில் பேசியது இயேசு தான் என்ற கிறிஸ்தவர்களின் ஆதாரமற்ற நம்பிக்கை உடைந்து விடுகிறது.
ஏசாயா 48:16இல் பேசியது இயேசு இல்லை என்றால் வேறு யார் பேசியது என்று பார்ப்போம்.
ஏசாயா 48:16இல் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர். முதல் பேச்சாளர் கர்த்தர் மற்றும் இரண்டாவது பேச்சாளர் தீர்க்கதரிசி.
ஏசாயா 48:16இல் உள்ள கர்த்தரின் பேச்சு:
நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்;
அதே வசனத்தில் உள்ள தீர்க்கதரிசியின் வார்த்தை:
இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
இவ்வாறு இந்த வசனத்தில் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்று நாம் மட்டும் சொல்லவில்லை. பழைய ஏற்பாட்டுக்கு சொந்தக்காரர்களான யூதர்களும் இன்னும் பெரும்பாலான கிறிஸ்தவ அறிஞர்களும் ஏசாயாவின் இந்த வசனத்தில் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
ஏசாயா 48:16இன் இறுதியில் பேசுவது தீர்க்கதரிசி என்பதை அதற்கு அடுத்த வசனமும் உறுதி செய்கின்றன.
17. இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது:
(ஏசாயா 48)
ஏசாயா 48:16இல் தீர்க்கதரிசி பேசி முடித்தவுடன் "கர்த்தர் சொல்லுகிறதாவது" என்று சொல்லி கர்த்தர் மீண்டும் பேசுகின்றார்.
ஏசாயா 48:16இல் இயேசு பேசவில்லை, மாறாக இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்பதற்கு பைபிள் வசனங்களும் யூத அறிஞர்களின் விளக்கங்களும் இன்னும் பெரும்பாலான கிறிஸ்தவ அறிஞர்களின் விளக்கங்களும் ஆதாரங்களாக உள்ளன. ஆனால் அந்த வசனம் திரித்துவத்தை தான் பேசுகின்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் ஒரே தேவனாக இறைத்தன்மையில் சமமானவர்களாக உள்ளனர் என்பதே திரித்துவ நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கைக்கு ஒட்டு மொத்த பைபிளில் எங்கு தேடினாலும் அதற்கான ஆதார வசனமே இல்லை. இதனால் விரக்தியடைந்த கிறிஸ்தவர்கள் பைபிள் வசனங்களை திரித்து திரித்துவ விளக்கம் கொடுக்கின்றனர். அவ்வாறு அவர்கள் தவறான விளக்கம் கொடுக்கும் வசனங்களில் ஒன்றுதான் ஏசாயா 48:16. அதனை பற்றி கீழே காண்போம்.
நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
(ஏசாயா 48:16)
மேற்கண்ட வசனத்தில் உள்ள "கர்த்தராகிய ஆண்டவரும் அவருடைய ஆவியும் என்னை அனுப்பினார்கள்" என்ற வாசகத்தை திரித்துவ ஆதார வசனமாக கிறிஸ்தவர்கள் திரித்து விளக்கம் தருகின்றனர். மேற்கண்ட வசனம் முழுவதும் இயேசு தான் பேசினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகும். ஆனால் இயேசு தான் பேசினார் என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் கிறிஸ்தவர்களிடத்தில் இல்லை. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பிதாவின் சத்தத்தை ஒருவனும் ஒருக்காலும் கேட்டதில்லை என்ற பைபிள் வசனத்தை ஆதாரமாக வைத்து கொண்டு பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிளுடன் பேசியது கர்த்தர் அல்ல என்றும் இயேசு தான் என்றும் கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர். ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் பைபிளில் இல்லை.
ஆனால் இந்த வசனத்தில்(ஏசாயா 48:16) இயேசு பேசவில்லை என்பதற்கு பைபிளே ஆதாரமாக உள்ளது.
1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
(எபிரேயர் 1)
பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசிய கர்த்தர் இறுதி காலத்தில் மட்டுமே இயேசுவின் மூலமாக பேசினார் என்று மேற்கண்ட பைபிள் வசனம் சாட்சியம் கூறுகிறது. அதனால் ஏசாயா 48:16இல் பேசும் நபர் இயேசு இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல பூர்வ காலங்களில் கர்த்தர் தீர்க்கதரிசிளுடன் பேசியுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் பூர்வ காலங்களில் பேசியது இயேசு தான் என்ற கிறிஸ்தவர்களின் ஆதாரமற்ற நம்பிக்கை உடைந்து விடுகிறது.
ஏசாயா 48:16இல் பேசியது இயேசு இல்லை என்றால் வேறு யார் பேசியது என்று பார்ப்போம்.
ஏசாயா 48:16இல் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர். முதல் பேச்சாளர் கர்த்தர் மற்றும் இரண்டாவது பேச்சாளர் தீர்க்கதரிசி.
ஏசாயா 48:16இல் உள்ள கர்த்தரின் பேச்சு:
நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்;
அதே வசனத்தில் உள்ள தீர்க்கதரிசியின் வார்த்தை:
இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
இவ்வாறு இந்த வசனத்தில் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்று நாம் மட்டும் சொல்லவில்லை. பழைய ஏற்பாட்டுக்கு சொந்தக்காரர்களான யூதர்களும் இன்னும் பெரும்பாலான கிறிஸ்தவ அறிஞர்களும் ஏசாயாவின் இந்த வசனத்தில் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
ஏசாயா 48:16இன் இறுதியில் பேசுவது தீர்க்கதரிசி என்பதை அதற்கு அடுத்த வசனமும் உறுதி செய்கின்றன.
17. இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது:
(ஏசாயா 48)
ஏசாயா 48:16இல் தீர்க்கதரிசி பேசி முடித்தவுடன் "கர்த்தர் சொல்லுகிறதாவது" என்று சொல்லி கர்த்தர் மீண்டும் பேசுகின்றார்.
ஏசாயா 48:16இல் இயேசு பேசவில்லை, மாறாக இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்பதற்கு பைபிள் வசனங்களும் யூத அறிஞர்களின் விளக்கங்களும் இன்னும் பெரும்பாலான கிறிஸ்தவ அறிஞர்களின் விளக்கங்களும் ஆதாரங்களாக உள்ளன. ஆனால் அந்த வசனம் திரித்துவத்தை தான் பேசுகின்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக