ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா? - பாகம் 2

💎💎 ஏசாயா 48:16  வசனம் திரித்துவத்தை போதிக்கிறதா?💎💎





💎நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
(ஏசாயா 48:16)

✍ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதிக்கவில்லை என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இயேசு பூர்வ காலங்களில் தீர்க்கதரிசிகளுடன் பேசவில்லை என்பதை முந்தைய பதிவில் நாம் பார்த்தோம்.

➡️அதன் தொடர்ச்சியை இந்த பதிவில்  பார்ப்போம்.

✍ஏசாயா 48:16இல் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர். முதல் பேச்சாளர் கர்த்தர் மற்றும் இரண்டாவது பேச்சாளர் தீர்க்கதரிசி.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍ஏசாயா 48:16இல் உள்ள கர்த்தரின் பேச்சு:
💎நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்;

🌟அதே வசனத்தில் உள்ள தீர்க்கதரிசியின் வார்த்தை:
 💎இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.

✍ முதலாவதாக இந்த வசனத்தில் பேசியது கர்த்தர் என்றால் ஏன் கர்த்தராகிய ஆண்டவர் என்னை அனுப்பினார் என்று சொல்ல வேண்டும்? கர்த்தருக்கு மேல் இன்னொரு கர்த்தரா?  அதே போல் அந்த வசனம் ஏன் திரித்துவத்தின் மற்றொரு நபரான பரிசுத்த ஆவியை கர்த்தர் என்றோ அல்லது ஆண்டவர் என்றோ அழைக்கவில்லை?

✍இந்த வசனம் கர்த்தரை மட்டுமே ஆண்டவர் என்று சொல்கிறது. பரிசுத்த ஆவியை ஆண்டவர் என்று குறிப்பிடவில்லை. இதன் மூலம் இந்த வசனம் திரித்துவத்தை போதிக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். ஏசாயா 48:16 வசனம் கர்த்தரை மட்டுமே ஆண்டவர் என்று சொல்லி திரித்துவத்திற்கு சாவுமணி அடிக்கிறது. இந்த வசனத்தின் படி வரும் நபர் கர்த்தர் அல்ல, மற்ற தீர்க்கதரிசிகளை போன்ற மனிதர் தான் என்பதையும் இந்த வசனம் தெளிவுப்படுத்துகின்றது.

இன்னும் மேலேயுள்ள ஏசாயா 48:16 வசனத்தின் மறுபகுதி கர்த்தரால் பேசப்படவில்லை மாறாக அது ஒரு தீர்க்கதரிசியின் வார்த்தை என்பதற்கு அந்த வசனமே சாட்சியம் பகருகின்றது.

✍இவ்வாறு இந்த வசனத்தில் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்று நாம் மட்டும் சொல்லவில்லை. பழைய ஏற்பாட்டுக்கு சொந்தக்காரர்களான யூதர்களும் இன்னும் பெரும்பாலான கிறிஸ்தவ அறிஞர்களும் ஏசாயாவின் இந்த வசனத்தில் இரண்டு பேச்சாளர்கள் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍ இரண்டாவதாக எந்த வசனம் திரித்துவத்தை போதிக்கிறது என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்களோ அதற்கு அடுத்த வசனமே அவர்களின் அந்த நம்பிக்கையை உடைத்து விடுகின்றது. எந்த வசனத்தையும் அதன் முன் பின் வசனங்களோடு படிக்கும் போது  தான் அதன் உண்மை அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

💎இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.
(ஏசாயா 48:17)

 ✍மேற்கண்ட வசனத்தில் கர்த்தர்  உன் தேவனாகிய கர்த்தர் நானே என்று தன்னை மட்டுமே இறைவன் என்று  அடையாளப்படுத்துகிறார். ஏசாயா 48:16 வசனம் திரித்துவத்தை போதித்து இருக்குமென்றால் ஏன் அதற்கு அடுத்த வசனத்திலேயே கர்த்தர் தன்னை மட்டும் தேவன் என்று அடையாளப்படுத்த வேண்டும்?
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

✍மூன்றாவது எந்த ஒரு வசனத்தையும் அந்த வசனம் கொடுக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி நம்பினார்கள் என்று பார்க்க வேண்டும். ஏனெனில் தீர்க்கதரிசிகளின் கடமையே இறை வசனங்களை மக்களுக்கு தெளிவாக  எடுத்துரைப்பது தான். இதை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா தீர்க்கதரிசியோ அல்லது ஏசாயா தீர்க்கதரிசி காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களோ திரித்துவ இறைவனை வணங்கினார்கள் என்பதற்கோ அல்லது அது சம்பந்தமான நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் என்பதற்கோ ஒரு துளியும் ஆதாரம் இல்லை. பாகல் போன்ற சிலைகளை இஸ்ரவேலர்கள் வணங்கி கர்த்தரின் கோபத்தை பெற்றதை எல்லாம் பதிவு செய்த பைபிள் எந்த ஒரு இடத்திலும் இஸ்ரவேலர்கள் திரித்துவ நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்று சொல்லவில்லை. இது திரித்துவம் பின்னாளில் புகுத்தப்பட்ட மனித கற்பனை என்பதை தெளிவாக்குகிறது. இத்தனைக்கும் இயேசுவுக்கு முந்தைய இஸ்ரவேலர்கள் மேசியாவின் வருகையையும் அறிந்து வைத்திருந்தனர். மேசியா ஒரு தீர்க்கதரிசி என்பதையும் புரிந்து வைத்திருந்தனர். பரிசுத்த ஆவி என்றால் என்ன என்பதையும் இஸ்ரவேலர்களும், இயேசு உட்பட  முந்தைய தீர்க்கதரிசிகளும் நன்றாக அறிந்து வைத்திருந்தனர். அதனால் தான் கர்த்தர் ஒருவரையே தேவன் என்று மிக தெளிவாக உணர்ந்தவர்களாக அவரையே வணங்கி வழிபட்டு  வந்தனர்.

✍இயேசு உட்பட எந்த தீர்க்கதரிசியும் திரித்துவத்தை போதிக்கவில்லை என்றாலும் பிற்காலத்தில் வாழந்த வழிகெட்ட கிறிஸ்தவர்களால் திரித்துவம் புகுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. இனிமேலாவது கிறிஸ்தவர்கள் சத்தியத்தை உணர்ந்து திரித்துவம் எனும் சாத்தானை விட்டும் தங்களை பாதுகாத்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
                                     - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இந்து கடவுள்களின் காமவெறி

உஸ்மான் ரலி அவர்களின் குர்ஆன் பிரதியும், கிறிஸ்தவர்களின் குற்றச்சாட்டுகளும்.

அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பாளன் - விளக்கம்